சற்றே வித்யாசமாய்
இந்த இரவு..
அவளும் விளக்கும்
விழித்திருந்தார்கள்
வெகுநேரம்..
காற்று மட்டுமே
நடமாடிக்கொண்டிருந்த வீதியை
அவ்வப்பொழுது கவனித்து
ஆவல்கள் திரும்பின
தலைசாய்த்து..
சாத்தியும்
சாத்தாமலும் இருந்தன
கதவும் இமையும்..
இரவு சுருங்க சுருங்க
விரிந்து கொண்டிருந்தது
வெறுமையாய் வயிறும் மறுநாளும்..
அந்த இரவில்
அவளும் படுக்கையும்
கசக்கப் படவில்லை..
அன்றே அவள்
அலங்காரம் களையாதவளாய்
வழக்கத்துக்கு மாறாய்