வீட்டிற்கு வந்த மஞ்சரியின் மனது ஏனோ சரியாக இல்லை ... இப்படி ஒரு திருமணம் நடக்காத காரணத்தால் தானோ அவள் வாழ்க்கை இப்படி அலைகுலைந்து போய்விட்டது .... கண்களில் கண்ணீர் துரித்திகொண்டிருன்தது எப்போது வேண்டுமானாலும் அது மடை திறக்கலாம் ... அறியாத வயதில் .... இல்லை அறிந்த வயதேதான் அதில் அவள் செய்த தவறுக்கு அனைவரும் அனுபவிக்கும் இந்த நிலைமையை கொடுத்த அவனை ... நினைக்கவே கூடாது ... துரோகத்தை செய்தவனை நினைப்பதே பாவம்.
****
இரவெல்லாம் இளமை கனவுகளில் மிதந்த கௌதம் .. காலையில் எந்திரிக்க பிந்தி விட்டது ... அன்று லீவ் போட்டுவிட்டு நண்பனுடன் ஊரை சுத்தலாம் என்று நினைத்து நண்பனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தான் ... எதிர் முனையில் பேசிய நண்பன் குரல் அவளவாக சரியில்லை ..
" எனாச்சு மச்சான் உடம்பு சரியில்லையா? " என்ற கேள்விக்கு பதிலாக ...
"மச்சான் வீட்லையா இருக்கே ... நான் அங்க வரேன் பேசலாம் "
என்ற பதிலோடு தொலை பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது .. என்னவாக இருக்கும் என்ற அவன் சிந்தனையில் ஏதும் புலப்படவில்லை .. நண்பன் வரவுக்காய் காத்திருந்தான் ...
அவனை நீண்ட நேரம் காத்திருக்க விடாது அவன் நண்பன் வந்தான் ....
ஹாய் மச்சான் வா என்ற அழைப்புக்கு மெலிதாய் ஓர் புன்னகையை சிந்தினான் ...
எனாசுடா .. வீட்ல ஏதும் ....
நோ ..அதெல்லாம் ஒண்ணுமில்ல மனசு சரியில்லடா ... உங்கிட்ட பேசலாம்னு வந்தேன் என்று கொதமைபார்த்தான் .. அவன் கண்களில் நிராசை .. கோபம் .. சோகம் வருத்தம் எல்லாம் கலந்த ஒரு கலவையை காண முடிந்தது ....
மச்சி எதுனாலும் உனக்கு சொல்ல தோன்றியதை சொல்லு ... என்று ஆறுதலாய் பேசினான் கௌதம் ...
மச்சான் நான்கு வருடங்கள் இருக்கும் ... எனக்கு ஒரு அக்கா இருகின்றாள் ... என்னை விட ஒரு வயதே அதிகம் அவளுக்கு .. எனக்கு நேர் எதிர் அவள் ... ரொம்ப சிகப்பா அழகா இருப்பாள் ... அப்போ அவள் படித்துகொண்டிருந்தாள் ... படித்து படித்து வேலை செய்துகொள்வது இங்கு கட்டாயம் ... அப்போ வேலைக்கு போகும் வழியில் அவளுக்கு ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவள் காதல் கொண்டாள்.. அவன் உங்க ஒரு பையன் பேரு ரமேஷ் கண்ணன் ..."
"என்ன பேரு சொன்னே .. ரமேஷ் கண்ணன் ஆ ..."
அந்த பெயர் நெருட சரி மேலே சொல்லு என்பதை போல சைகை செய்தான்
இங்க இரண்டு வருடம் வேலைக்காக ஒப்பந்தத்தில் வந்திருந்தான் .-. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு மேலே கடந்திருந்தது ... அக்காவின் பழக்கம் வீட்டுக்கு தெரிந்தது .. அப்பா கூபிட்டு திட்டினாரு .. அவ அவனைத்தான் கட்டிப்பதாக சொல்லி அழுதா ... ஒரே ஒரே அக்கா .. அப்பா இளகி அவனை கூபிட்டு பேசினாங்க .. அவன் தனக்கு அம்மா அப்பா இல்லை அக்கா இருக்காங்கனு சொல்லி அவங்க நம்பர் கொடுத்து பேச சொன்னான் .. பேசினாங்க வீட்ல ... அப்புறம் கல்யாணத்துக்கு அவன் பகத்துல ஆளுங்க யாருமே இல்லைன்னு அக்கா கோவில்ல சாதரணமா வைக்க சொலிட்டாள்... ஆனா பதிவு செய்யேல்ல .. காரணம் பதிவு செய்தால் இங்கயே நிரந்தரமாக இருப்பதில சிக்கல் வரும் அவன் வேலைக்காக வந்தவனாசே ... சோ இன்னும் கொஞ்ச மாதத்துல இந்தியா போய் அங்க இருந்து பதிவு திருமணம் மேற்கொண்டு கூட அழைத்து வருவதாய் இருந்தது ... அக்கா ரொம்ப சந்தோசமாய் இருந்தாள்.. கர்பாமாக கூட இருந்தாள் .. அப்போ இவனோட ஒப்பந்தம் முதிர மாதம் வந்திடிச்சு அக்கா எட்டு மாத கர்ப்பிணி .. அவனோடு கூட போக முடியாத நிலைமை ... அவன் சொன்னான் .. அவன் போய் எல்லா ஏற்பாடும் பார்பதாகவும் உடனே திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னான் ... அவன் கிளம்பும் நாளும் வந்தது .. அவன் கண் கலங்கினான் .. அக்காதான் சிரித்துகொண்டே .. போயிடு வாங்க ரமேஷ் ... வந்துடுவிங்கதனே ஏன் கண்ணு கலக்கம் . சின்ன பையங்க போல அப்டின்னு சிரித்து வழி அனுப்பி வைத்தாள். அதுதான் அவளோட கடைசி சிரிப்பாக இருக்கும்னு அவளும் நினைக்கல்ல நாங்களும் நினைகேல ....
போனவன் போனதுதான் .. அவன் கொடுத்த எந்த தொலை பேசி நம்பரும் வேர்க் பண்ணேல ... அவன் அக்கா நம்பரும் ... அப்பொழுதுதான் அக்கா தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தாள்... நிறைமாத கர்ப்பிணி ... அம்மா ஒரே திட்டு .. சொன்னத கேட்டியா அப்பவே சொன்னோமே ... உன்னால அவமானம் அது இதுன்னு ஒரே திட்டு ... அக்கா வீட்ல இருந்த மாத்திரைய தூக்கி போடுடிச்சு ... நல்ல காலம் தெய்வா தீனமா தபிசுட்டா .. ஒபரேசன் செஞ்சு குழந்தைய வெளிய எடுத்துட்டாங்க ...
ஆனா அன்னிக்கு போன அவ சந்தோசம் சிரிப்பு போனது போனதுதான் ... இனிக்கு அவ கொளந்தயோட பிறந்த நாள் ... யாரயும் வீட்டுக்கு நாங்க கூப்பிடுறது இல்லை .. தேவை இல்லாமல் கேள்வி கேட்பாங்கள் என்று ... ஆனா உன்ன கூப்பிடனும் எண்டு ஆசைபட்டேன் ... அம்மா சரி எண்டாங்க .. வா இனிக்கு எவனிங் வீட்டுக்கு என்று அழைத்தான் அவன் .
எவளவு பெரிய அநியாயம் .. அன்று அவன் காரில் சொன்ன அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இன்று புரிந்தது ... மனிசிடு மச்சி எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல .. இப்படியும் சில பேரு இருக்கத்தான் செய்றாங்க .. நான் கட்டாயம் வாறேன். என்று நண்பனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் சொல்லி அனுப்பி வைத்தான் ..
அவன் மனதில் எதோ சிறு நெருடல் ... என்னவாக இருக்கும் ...
தொடரும்....