இந்த கவிதையை நீங்கள் எப்பது அணுகுகிறீர்களோ அப்படி பொருள் தரும்
அண்டைவீட்டுக்காரன் பெயர் கூட தெரியாத அடுக்கக(ப்ளாட் இஸ்டம்) வாழ்க்கையில் மனிதர்களோடான நெருக்கமிழந்து தனிமை வெளியில் சாம்ராஜியம் அமைத்து கொண்டுவிட்டோம், அந்த தனிமையை உணரும் போது அதைவிட்டு வெளிவற சரியான செயலை செய்யாமல் மற்ற பிறவற்றை செய்து கொண்டிருக்கிறோம்
ஒரு தெளிவான ஆரம்பமோ, தெளிவான முடிவோ இல்லாமல், மையமும் இல்லாமல்( அதனால்தான் தலைப்பு வைக்கவில்லை) பின்னவீனத்துவம் தோய்ந்து எழுதிய கவிதை
படிமங்களை இல்லாமல், யார் யாரை பற்றி சொல்கிறார்கள், அல்லது நானே என்னை பற்றி பேசுகிறேனா ? அல்லது ஒரு பெண்ணுடன் பேசுகிறேனா ? அல்லது யாரையும் திட்டுகிறேனா ? அல்லது ஒரு நோயாளியிடம் பேசுகிறேனா ? என்று மையமில்லாமல் எழுதியது
சூழல் கிடையாது, ஆன்மிக குருக்களின் போதனை மன அமைதியை தரவில்லை மனிதனை இன்னும் மனிதனிடம் இருந்து பிரிக்கிறது எனும் தர்கத்தையும், தொழிநுட்பங்கள் நம்மை சமூக வாழக்கையை இழக்க வைக்கிறது எனும் தர்கத்தையும், குருக்களையும், தொழில்நுட்பத்தையும் கேள்விக்குள்ளாகி நாம் சரியான திசையில் செல்கிறோமா எனும் சந்தேகத்தையும், கடைசி பத்திக்கு முந்தைய பத்தியில் பதிவு செய்திருக்கிறேன்