//என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....//
அற்புதம்
//நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..
//
இதற்கு பெயர்தான் வாசகனை ஒரு தளத்தில் இருந்து அவன் அறியாதவாறு அடுத்த தளத்துக்கு கடத்தி போவது
//இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து பிரார்த்தித்தே - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...
//
ஆற்றாமையையும் இயலாமையையும் காதற்துயரையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்குறீர்கள்
பாராட்டுக்கள், நல்ல கவிதை