//எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் .... //
கனமான வரிகள்
//அன்றிலாய் உன்னுள்
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..
//
இணை பிரிந்தால் உய்யாது அன்றில் அப்படி இருக்க ஆசைப்பட்டு அது இடேறவில்லை
அன்றில், ஒன்றிட, தென்றலாய், கன்றலாய் எதுகைகள் அழகு
//ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..
//
சாதாரண வரி போல தோன்றினாலும்
//உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...//
அது அழுத்தமானதாய் ஆகிவிடுகிறது, இந்த சொல் சொல்ல எவ்வளவு காதல் வேண்டும்
//எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....//
வேறு விதமாய் முடித்திருக்கலாமோ ?