Author Topic: நம் காதல்  (Read 697 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நம் காதல்
« on: August 28, 2012, 12:43:44 AM »
எதிர்வீட்டு முற்றத்தில் விழுகின்ற
இன்நிழலே; இதயத்து அடிப்பரப்பில்
உதிர்கின்ற மலர்சுணையே; எதற்காக
உன்நினைவால் வாட்டுகிறாய் என்னை ?
அதிர்வேட்டு மௌனத்தில் வார்த்தைகளை
அடக்கிவிட்டு; பெரும்பாலும் புன்னகையில்
புதிர்ப்போட்டு போகின்றாய்; அடி,எப்படி
பொருள் கொள்ள உன்னை ?


கடிகார முட்கடந்து கசிகின்ற
கணங்களை, கைப்பற்றி, நெஞ்ச
அடிவாரத்தில் அழகழகாய் விண்மீன்போல்
அடுக்கிவைத்தேன் உன்னோடிருந் த,ஞாபகமாய்...
அடிப்பாதம் எடுத்து வந்து,உன்
ஆசைகள் அத்தனையும் நீசொல்லி
முடிப்பதற்குள் நம்பெற்றவரின் காதுகளில்
முழங்கிவிட்டான் எவனோ பாதகமாய்..

வெட்கத்தில் நீஎழுதிய வெண்பா
வெறும்பாட் டானதடி; விழியோர
முட்துளியை தூறிப் போன
முகிலே!என் மேலென்ன வெறுப்பா ?
துட்ட கனவையெலாம் நிறம்நிறமாய்
தூவி, வீசினாயே தூக்கமற்ற
வெட்டவெளியில்; எதைப்பருகி என்காதல்
விரக்தி ஆற்ற,எரி நெருப்பா ?
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: நம் காதல்
« Reply #1 on: August 28, 2012, 01:07:29 AM »


ஒரு பிரிவின் வலி ,வலிக்க வலிக்க சொல்லி இருகின்றீர்கள் .. அருமை



காலம் எனும் கடலில் மிதக்கும்
நினைவு எனும் அமிர்தம் உண்...
முட்படுக்கயிலும்
முத்தத்தின் சுகம் உணர்வாய் ..

hehe
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: நம் காதல்
« Reply #2 on: August 28, 2012, 01:23:43 AM »
:D :D :D

நன்றிங்க‌, உங்க கவிதை நல்லா இருக்கு
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: நம் காதல்
« Reply #3 on: August 28, 2012, 01:33:33 AM »
 ;D thanks