Author Topic: ~ மருத்துவக் கவிதைகள் ~  (Read 3426 times)

Offline MysteRy

~ மருத்துவக் கவிதைகள் ~
« on: August 26, 2012, 09:22:59 PM »
ஆப்பில் ஒரு பார்வை



ஆப்பில்!
உலகத்தின்
தோற்றத்திருக்கும்,
ஐஸக் நியூட்டனுக்கு
புவி ஈர்ப்பு சக்தியை
அறிமுகம் செய்ததும்.
இந்த ஆப்பில் தான்.

தினம் ஒரு ஆப்பில்
சாப்பிட்டால்
உடலுக்கு நல்லது,
உடலோ மருத்தவரை
நாடாது.

கர்ப்பக் காலத்தில்
ஆப்பில் பெண்ணுக்கும்
உகந்தது,சிறந்தது.

ஆப்பில் தான்
மனிதனின் பழகினத்தை
உணர்த்திய முதல் பழம்
ஆரோக்கியத்தின் அடித்தளம்.
உலகின் அஸ்த்திவாரம்

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #1 on: August 26, 2012, 09:48:21 PM »
மாம்பழம்



எனது பூர்விகம்
இந்தியாதான்.
முதலில் என்னை
புரிந்துக்கொள்ளுங்கள்!

என்னை சூடு என
ஒதிக்கி வைக்காதே!
என் பலனை
அறிய மறவாதே!

எனக்குள் இருப்பது
ஏ,சி,வைட்டமிகள்
தோலோடு உண்டால்
ஓசியாக கிடைக்கும்,
ஆரோகியங்கள்!

என் கொட்டைகளில்
கால்சியம் ,கொழுப்பும்
இருப்பதை அறியுங்கள்.

அல்போன்சா,பகனபள்ளி,
ராஸ்புரி நீலம்,ஒட்டு
மல்கோவா,என எனக்கு
உடன்பிறப்புக்கள்.

எங்களை ரசித்து உண்ணுங்கள்
இயற்கையாய் கிடைக்கும்
சத்துக்களை சாப்பிட்டு
பழகுங்கள்,
உங்கள் உடலுக்கு உதவுங்கள்.
« Last Edit: August 26, 2012, 09:51:57 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #2 on: August 26, 2012, 09:51:35 PM »
வேர்கடலை



கடற்கரையில் ,
டீக் கடையில்
கடலை போடும்
காளைகளே!
வேர்கடலையோடு
கடலை போடுங்களே.

கடைகளில் எளிதாக
குறைந்த விலையில்
கிடைக்கும் முட்டை இது.

ஏழைக்கு சத்து தரும்
வேர்கடலை இது!

மண்ணுக்குள் முளைக்கும்
ஏழை வைரமிது!

முழு பலன் கொடுக்கும்
கடலை இது!

கால்சியம் ,இரும்பு
வைட்டமின் ஈ நிறைந்த
மருந்து இது.

நம்ம காந்தி தாத்தா
தினம் கொறித்தக் கடலைஇது
நாமும் கொறித்தால்
பலன் தரும் கடலை இது

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #3 on: August 26, 2012, 10:01:22 PM »
APPLE THAN UNNADHATHTHAI

ORU OoTy (Kutty) APPLE

URAIKKUM KAVIDHAI ....

Azhagu !!!

VAAZHTHUKKALL !!!
« Last Edit: August 27, 2012, 10:20:40 AM by aasaiajiith »

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #4 on: August 26, 2012, 10:09:54 PM »



Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #5 on: August 27, 2012, 01:00:14 AM »
முலாம் பழம். பலத்தின் முகவரி



முலாம் பழம்.
கொடி வகை இனம்
குளங்களின்
கரையோரங்களில்
சிரித்தவன்ணமாய்
வளரும் இந்த பாலம்

பாத்தாலே ஈர்க்கும்

மலச்சிக்கலை உடைத்து
உடலுக்கு உரமளிப்பது
முலாம்பழம். உடம்பு
எடை' போட இதனை
அடிக்கடி சாப்பிடலாம்

பானமாய்  குடிக்கலாம்

அறுசுவை குணம்
தருவது இந்த பழம்.
பலத்தில் சதவிகிதம்,
இருப்பது கண்டும்,
உண்ணாமல்,
பருகாமல் இருந்தாலோ...

இதன் மருத்துவம்,
மகத்துவம்
அறியாமலே போகும்...

இந்த பழமோ 
வெள்ளரி இனத்தின்
உறவு....
இன்னுமா கேட்கவில்லை
உன் நாக்கு ...

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #6 on: August 27, 2012, 07:38:12 AM »
முக்கனிகளில் ஒன்று பலா!



முக்கனியில் ஒன்று
இந்த பலா.

பெண்ணின் இதழை விட
சுவை இந்த பலா.

மூளைக்கும் ,உடலுக்கும்
பலம் சேர்க்கும் பலா .

ரத்தத்தை விருத்தி
செய்யும் இந்த பலா .

முள்ளாயிருந்தாலும்
சுவை தரும் பலா .

எதிர்ப்பு சக்தி தரும்
பழமாய் வலம் வரும்
இந்த பலா!

பழத்தில் பலா,
இது ஒரு நிலா.

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #7 on: August 27, 2012, 09:12:46 PM »
வெங்காயம் !



என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!

என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.

என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #8 on: August 27, 2012, 09:15:55 PM »
முருங்கை கீரை அரும் மருந்தாகும்



முருங்கை கீரை
அதன் மகத்துவம்
அறிவீரோ!

தாது பலத்துக்கும்
தூதுவாகும்.

ரத்த அழுத்தமும்
குணமாகும்!

கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்!

கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்!

முருங்கை கீரை
அரும் மருந்தாகும்.
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!

இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
பலம் தரும்
இதன் தந்திரம்.

உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.

இரவுக்கு இது இனிப்பு
இந்த முருங்கையே
ஆண்மைக்கு உகப்பு
இதன்  சிறப்பு...

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #9 on: August 27, 2012, 09:18:34 PM »
மருத்துவத்தின் உண்மை மாதுளை!



மாதுளை!
இனிப்பும்,புளிப்பும் ,
கொண்ட வகைகள்,
வலம் வருவதுண்டு!

இனிப்பு மாதுளையோ,
இதயத்திருக்கும்...
மூலைக்கும்...
ஆற்றலை தருவதில்
அக்கரைவுண்டு!

பித்தத்தை போக்கி
இருமலை, நிறுத்திவிடுவதில்
மாதுளை ஒரு அணிந்துரை!

புளிப்பு மாதுளையோ...
வயிற்றுக் கடுப்பு
நீக்கி,
இரத்த பேதியை
நிறுத்தி,
வயிற்றின் புண்ணை
ஆற்றிவிடும்.

தடைப்பட்ட சிறுநீரும்
தடையின்றி வெளியேறும்.
மாதுளம் விக்கலுக்கு
விடை சொல்லும்!

தாகம் தீர்க்கும்
பானமாகும்,
கோடைக்கு
இதமாகும்.

மாதுளை
தினம் அருந்திவந்தால்
உடம்பில் தோன்றும்
வெள்ளை படலத்தை
அகற்றும்!

மாதுளை சாற்றில்
கற்கண்டு கரைத்து குடித்தால்
உஷ்ணம் உடலை விட்டு ஓடும்!

புது உற்சாகம் தோன்றும்.
மாதுளை சாற்றில்
தேன் கலந்து குடித்தால்
உடலில் மாற்றம் வரும்!
சோம்மல் முறிந்து போகும்.

மருத்துவத்தின் மாமருந்து
இந்த  மாதுளை!
உண்டுப்பார்த்தால்
புரியும் உண்மை !

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #10 on: August 27, 2012, 09:22:47 PM »
தக்காளி நீண்ட ஆயுளின் வழி!



தக்காளி!
தடையின்றி கிடைக்கும்,
இதை சாப்பிட்டால்
தடையின்றி ரத்தம் ஓடும்.

ஆஸ்பிரின் மாத்திரையின்
மறுஅவதாரம்.
தினமும் உண்டால்
பசியின்றி போகும்.

குண்டுயாகாமல் உன்
எடையை தடுக்கும்.
முகம் அழகாகும்.

அஜீரணத்துக்கு மருந்து.
தக்காளி சாறு நீ அருந்து.

தினம் உணவுவோடு,
நீ சேர்த்துக் கொண்டு,
நீண்ட ஆயுளை அதிகப்படுத்து.

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #11 on: August 27, 2012, 09:26:51 PM »
தர்பூசணி பழத்தின் சிறப்பு!கவிதையோடு



மனிதனுக்கும் பழத்துக்கும்
ரத்த உறவுகள்...
சத்து உறவுகள்...
என உறவாட
உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்
இதில் பங்குண்டு.
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு

தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்.
தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்

தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!

தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்!
உண்மை புரிந்திடும்!

Offline Anu

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #12 on: August 29, 2012, 06:46:04 AM »
Superbbb mystery dear .
azhagaana kavithai..
poruthamaana thalaippu.
payannula karuthu.
motthama serntha super kavithai..

Yenaku romba pidichi iruku :)
« Last Edit: August 29, 2012, 01:34:15 PM by MysteRy »


Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #13 on: August 29, 2012, 08:47:26 AM »


« Last Edit: August 30, 2012, 01:52:04 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #14 on: August 29, 2012, 05:54:40 PM »
பச்சைக்கறிகளை...



தினம் தினம்
காய்கறிகள் கலந்த உணவு,
உண்டால் இல்லை,
பின்விளைவு!

முட்டைக் கோஸ்,
காலி ஃபிளவர், கீரை
உடலுக்கு தேவை

உண்டுவந்தால் கிடைக்கும்
டி சத்துக்கள்!
ரத்தை உறையவைக்கும்
இவைகள்!

இல்லையென்றால் உத்திர
போக்கு அல்லவா தொடரும்.

பீன்ஸ், பட்டாணி,
பச்சைக் காய்கறிகள்,
வேண்டும்..!

இதை சாப்பிட்டால் தான்
சுண்ணாம்பு சத்துக்கு
மனுப்போட முடியும்!

ஆன்டி ஆக்ஸிடன்ட்
நிறைந்த உணவு வேண்டும்
என்றால் பச்சைக்கறிகளை...

தெளிவுக் கொண்டு
உண்ண பழகு,
பளபளக்கும் உடல்
கிடைக்கும் பாரு!

புதினா, கொத்துமல்லி,
கருவேப்பிலை, கீரைகள்
காய்கறி விதைகளை
விதைக்க நாடு!

உன் வீட்டுக்கும்,
உனக்கும் அழகு!
என்பதை சொல்லும்
காய்கறியை உண்ண பழகு1