Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ பச்சோந்தி பற்றிய தகவல் !!!! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பச்சோந்தி பற்றிய தகவல் !!!! ~ (Read 863 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222623
Total likes: 27644
Total likes: 27644
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பச்சோந்தி பற்றிய தகவல் !!!! ~
«
on:
August 23, 2012, 10:42:15 PM »
பச்சோந்தி பற்றிய தகவல் !!!!
பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பது தான்.
மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் ஜெர்மன் உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய உயிரினங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது 18 மில்லி மீட்டர் உயரமே கொண்ட பச்சோந்திகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் சிறிய பச்சோந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
பச்சோந்தி! இந்த உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தான் வாழும் சூழலுக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள். உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும் "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.
இந்த பெயர் கொண்டு சில மனிதர்களையும் விளிப்பார்கள். காரணம் சூழ்நிலைக்கும், தாம் சார்ந்த நபர்களுக்கும் ஏற்ப தன் பேச்சு, செயல்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களை பச்சோந்தி என்பார்கள். "நீ ஒரு பச்சோந்தி" என்று ஒருவனை ஏசும் போது அவனுக்கு கோபம் வரும். பச்சோந்தி என்று ஒருவனை விழிப்பது சமூகத்தில் தாழ்வான வார்த்தையாகவே இருந்து வருகிறது.
ஆனாலும், சில தருணங்களில் எம் சூழ்நிலை நாம் பச்சோந்தி போல இருந்தாலே வாழ முடியுமாக உள்ளது. உதாரணம் புலம்பெயர்ந்ததேசம்.
நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.
உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை பல பழக்கவழக்கங்களை மாற்றினாலே நம்மால் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆரம்பத்தில் இது மிகவும் கடினமாக தான் இருக்கும் , ஆனால் போக போக அதுவே பழக்கத்துக்கு வந்துவிடும். அதன் பின் பழையன கழிதலும் புதியன புகுதலும் போல நாம் மாறிவிடுகிறோம் என்று சொல்வதை விட, சூழல் நம்மை மாற்றிவிடுகிறது என்பதுவே உண்மை.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ பச்சோந்தி பற்றிய தகவல் !!!! ~