இந்த அரட்டை அறைக்கு நான் வந்திட வரம் தந்தவள்
என் முரட்டு குரலையும் மென்மை ஆகிட சுரம் தந்தவள்
அழகு தமிழை மிக அழகாய் பேசிட ஆக்கம் தந்தவள்
உன் (ள்) நினைவை ,கற்பனையை கவிதையாக்கிட ஊக்கம் தந்தவள்
உறக்கம் இல்லா இரவுகளை நீக்கிட இனிய கனவுடன் தூக்கம் தந்தவள்
அழகையே ரசித்திடும் ஆர்வம் இல்லாதவன் அழுக்கையும் ரசித்திடும் ஆக்கம் தந்தவள்
ஆக்கம், ஊக்கம் ,தூக்கம்,தாக்கம் என அனைத்தையும் தேக்கம் இன்றி முழுதாய் தந்தவள்
இந்த ஆசை என் ஆசையை நீக்கம் செய்திட கூறி ஏக்கம் தந்தது ஏனோ ?
நிழலை கூடவா நேசிக்க மறுப்பு ? விருப்பத்தோடு காத்திருக்கிறேன் உனக்காய் !
அடுத்த தலைப்பு - வாழ்த்து