Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 461208 times)

Offline thamilan

திரைகடல் ஓடி
திரவியம் தேடினேன்
என் இளமை பருவத்து
காகித கப்பலை
யாராவது தருவார்களா?




காகித கப்பல்

Offline Global Angel

என் காதல் என்ன காகித கப்பலா
கற்று அடித்தல் பறந்து போக
அது காட்டாறு  போல
உன் மேல் கொண்ட காதல்
கரை புரண்டு ஓடிகொண்டே இருக்கும்


காட்டாறு

                    

Offline thamilan

காற்றாற்று வெள்ளமென‌
கரை புரண்டோடும்
ந‌ம் காத‌ல்
ஒரு க‌ரையாக‌ நானிருக்கிறேன்
ம‌றுக‌ரையாக‌ நீ
வ‌ருவாயா



ம‌றுக‌ரை

Offline Global Angel

மறுகரையாக நான் வந்தால்
மறுக்காமல் எனை
தழுவிக் கொள்வாயா ?


தழுவி

                    

Offline thamilan

தழுவ மாட்டேன்
நீ மலர்
தாங்க‌ மாட்டாய்
கசங்கி விடுவாய்




கசங்கி

Offline Global Angel

உன் கை பட்டு
கசங்குவதே
இந்த பூவுக்கு மோட்சம் ...


மோட்சம்
                    

Offline pEpSi

இறந்தபின் மோட்சம் செல்வேன்
அன்பே!இறப்பது
உன் மடியாக இருந்தால்



இறந்தபின்

Offline Global Angel

இறந்த பின்னும்
என் இதயம் துடிக்கும்
உன் நினைவுகளை சுமந்தபடி


நினைவுகள் 
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நிழலாய் உன் நினைவுகள்
என்னை தொடர
நிழலின் துணையோடு
நிஜத்தில் வலம்
வருகிறேன் நினைவாய்
இல்லாமல் நிஜமாய்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்


நிஜமாய்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

நீ சிரித்தாய்
எனை பார்த்து
நிஜமாய் இன்று தான்
மனிதப்பிறவி எடுத்தேன்.




மனிதப்பிறவி

Offline Global Angel

ஒவொரு கணமும் துடிக்கிறேன்
மனித பிறவி எடுத்ததர்க்காய்
ஒரு பறவையாய் பிறந்திருந்தால்
இந்நேரம் உன்னை
காணும் பாக்கியமாவது கிடைத்திருக்கும்



பாக்கியம்

                    

Offline thamilan

நீ என்னை காதலித்தது
என் பாக்கியம்
நீ என் மனைவியானது
என் துர்பாக்கியம்



துர்பாக்கியம்

Offline Global Angel

உன்னை இதுவரை
சந்திக்க முடியாதது
என் துர்ப்பாக்கியம்



சந்திப்பு

                    

Offline thamilan

சந்திப்பு உடல்களுக்குத்தான்
மனங்கள்
ஏழு கடல் தாண்டியும் இணையும்


ஏழு கடல்

Offline Global Angel

என் நினைவுகள்
எழு கடல் தாண்டியும்
உன்னை தீண்டும் ..


தீண்டல்