Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 527804 times)

Offline Patrick

  • Newbie
  • *
  • Posts: 11
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
ஆசை

ஆயிரம் ஆசைகள் மனதில்,
உடுத்திரளில் நட்சத்திர கூட்டங்களைப்போல்..

அத்துனை ஆசைகளையும் ஒன்றாக்கி காதல் செய்வேன்..
என் உள் இருப்பவளே.. உன் ஆசையும் அதுதானே!

அடுத்த தலைப்பு : உடுத்திரள்

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 422
  • Total likes: 1955
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
உடுத்திரள்

உருவத்திற்கான உடையும்
பருவத்திற்கான பாசிமணிகளும்
பொலிவான பொன்னகையும்
வசதிக்கான வைரங்களும்
எதுவும் கொடுத்திராத அழகை
அள்ளி கொடுத்ததென்னவோ
அவள் உடுத்திய கள்ளங்கபடமற்ற புன்னகை மட்டுமே.....


அடுத்த தலைப்பு :  வடு



Offline தமிழினி

ஓராயிரம் முறை நீ கொஞ்சிய போதும்..
நான் பல முறை உன்னை மிஞ்சிய போதும்..
உன் கண்களுக்கு பட்டது கெஞ்சியதே...
ஒரு முறையேனும்
நினைவு கூர்ந்தாயா என் உள்ள வடு என்னை எவ்வளவு வாட்டியிருக்கும் என்று...

வடுவை குடுத்த உன்னில் வாழ்வையும் காண்பதால் மட்டுமே...
வலி நிறைந்த வடுவிற்கும் நான் வழி விட்டு நகர்கிறேன் ..


அடுத்த தலைப்பு :  புரிதல்
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1234
  • Total likes: 4241
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
காதலிக்கவும்
கல்யாணம் செய்து கொள்ளவும்
ஒருவர் கிடைப்பதென்பது
பெரிய விஷயமல்ல

ஆனால்

அரிது
நம்மை புரிந்துகொள்ளவும்
நம் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்பவராகவும்
ஒருவர் கிடைப்பது என்பது

****

அழகு

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 422
  • Total likes: 1955
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


வானுக்கு நிலவும்
கடலுக்கு அலையும்
பூவிற்கு நிறமும்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
அவர்களுக்கு காதலும்
அழகாய் போனது..
அனைத்து அழகும் தோற்றதென்னவோ
ஆடையும் அணிகலனும் இன்றி
ஒப்பனைகள் ஏதுமற்ற
கள்ளங்கபடமற்ற சிரிப்பால்
அழகின் அட்சயபாத்திரமான மழலையிடம்.....👶😘❤️

அடுத்த தலைப்பு : பிரியாவிடை
« Last Edit: October 06, 2023, 08:30:20 PM by VenMaThI »

Offline Mani KL

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 271
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum

இரு  உள்ளங்களை இணைக்கும் பாச பிணைப்பு
மனிதர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்கும் கருணை 
குழ்ந்தையிடம் தாய் காட்டும். அரவணைப்பு
அண்ணன் தம்பி இடையில் உள்ள பிணைப்பு
காதலன் காதலி உரையாடல்
அக்கா தங்கை சண்டையின் முடிவு
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
மனிதனக்கு இறைவன் கொடுத்த மிக பெரிய வரம் அன்பு




அடுத்த தலைப்பு அன்பு ❤️❤️🥰🥰😘😘
« Last Edit: October 07, 2023, 04:54:15 PM by Mani KL »

Offline தமிழினி

 எத்தனை முறை என்னை காயப்படுத்தினாலும்
உன்னை என்னால் வெறுக்கவே முடியவில்லை..

நீயே என்னை வெறுத்த போதும் நான் உன்னை மட்டுமே நேசிக்க காரணம்
உன் மீதான என் அன்பு ஒருபோதும் பொய்யாக இருந்ததில்லை..

காத்திருப்பேன் எப்போதும் உன் புரிதல் நிறைந்த அன்பிற்காக...


அடுத்த தலைப்பு :  வகுப்பறை
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline Patrick

  • Newbie
  • *
  • Posts: 11
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல்...

அனைத்தையும் கற்றுத்தந்தவர்கள் காதலை மட்டும் ஏன் விட்டுவைத்தார்கள்..

ஈர்ப்பு விசை ஆப்பிளாலா வந்தது.. நான் உன்னை கண்டல்லவா அறிந்தேன்!

காதலையும் பாடமாக்க விண்ணப்பிக்கும்
-   வகுப்பறையில் ஒரு காதல் மாணவன்..

அடுத்த தலைப்பு : உடுத்திரள்

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 238
  • Total likes: 785
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அகன்ற  உடுத்திறல் கொண்ட ஈர்ப்பு  விசை போல..
எனையே உனை நோக்கி கவர்ந்திழுக்கும் விழி ஈர்ப்பு நீ..

பழகவும் துணிவில்லை..
விலகவும் மனமில்லை..

அகன்ற உடுத்திரளின் சூரிய தொகுதியின் நடுநாயகம் சூரியன் போல்..

என் கனவுகளின் நடுநாயகம் நீ..
என் கவிதைகளின் உற்பத்திபுள்ளி நீ..
என் துன்பங்கள் மாயமாய் தொலையும் கருந்துளை நீ..

பிரபஞ்சத்திலேயே தோன்றி அங்கேயே அழியும் விண்கற்கள் போல..
என்னுள்ளேய தோன்றி.. என்னுள்ளே  அழியும் உன் நினைவுகளை எங்கனம் கையாள்வேன்..

அடுத்த தலைப்பு - நடுநாயகம்
« Last Edit: October 09, 2023, 04:32:25 AM by Madhurangi »

Offline TiNu



உன்னை நினைத்தே கண்விழிக்கின்றேன்.
உனக்காகவே நாள்முழுதும் உழைக்கின்றேன்.
உன்னை தீண்டும் வேளையிலே மகிழ்கின்றேன்
உன்னுடன் கழிக்கும் நிமிடங்களில் திளைக்கின்றேன்.
உன்னாலே நானும் உயிர் வாழ்கின்றேன்.
உனக்காக நான் மட்டும் ஏங்கவில்லை..
உயிரனைத்தும் காத்துக்கிடப்பதேன்?
உயிர்களைத்தூக்கும் பாகுபாடின்றி சக்திக்கு அளிக்கும்
உணவே நடுநாயகம்... பசிக்கும் உயிர்களுக்கு..

அடுத்த தலைப்பு - பசி

Offline SweeTie

பசி என்று வந்தவர்க்கு 
புசிக்க  கொடுப்பவன்  நீ
நடுநிசி யில்   பயம்தீர்க்க
ஒளிமயமானவன்  நீ
நோய்க்கு மருந்தானவன்  நீ
நீண்ட பயணத்தில்  துணையானவனும் நீ
எங்கும் நிறைந்தவனே ! பரம்பொருளே!
உனைத் துதிக்கும்  வரம் போதும்!!

அடுத்த தலைப்பு  ...பரம்பொருள்

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 546
  • Total likes: 1077
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
ஆதி நீ
அந்தம் நீ

முதலும் நீ
முடிவும் நீ

தொடக்கமும் நீ
முடிவும் நீ

யாவிலும் நீ
எதிலும் நீ
 
எம் பரம்பொருளே

அடுத்த  தலைப்பு -  நகைப்பு

Offline KS Saravanan

கம்பன் வீட்டு கட்டுத்தறியில்
ஏற்றிடாத கவிதைகளை
விழி மூடி நித்திய நிலையில் நீந்தி,
வானவில் வார்த்தைககளை கொண்டு
எட்டி பிடித்தேன் சில கவிதை வரிகளை...!
அதை படித்தவர்களில்...

சிலர்,
சிலர்,
இன்னும் சிலரோ,

எனக்கோ ஒரே நகைப்பு..!

அடுத்த தலைப்பு மனிதம்..!

Offline SweeTie

மனிதம் இல்லா  கவிதையில் 
மனிதம்  எப்படி  தலைப்பாகும்
நகைப்பு இங்கே தலைப்பாகிறது
சந்தோசம் மிகுந்தால் வருவது நகைப்பு
துக்கம் மிகுந்தால் வருவது  வெறுப்பு
அன்பு மிகுதியில்  வருவது விருப்பு


அடுத்த தலைப்பு:  சந்தோசம் 

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1329
  • Total likes: 2803
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
தினம் வரும் விருந்தாளி

வந்தா போக வேணாம் என்று நினைக்கும் நெஞ்சம்.

போனால் எப்போ வரும் என்று ஏங்கும் மனம் .

அடுத்த தலைப்பு:  சோகம்
« Last Edit: June 07, 2024, 12:33:27 PM by Ishaa »