Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 502733 times)

Offline JsB

பத்து மாதம்
என்னை கருவில்
சுமந்த தாயே...
உன் கண்
என் கருவை கண்ட
நாள்  முதல்
பிறந்த நாள்
வரை
உன் அன்பின் பாசக்கயிற்றில்
என்னை சுற்றி அனைத்தவள்
நீயே...
என் முகம் பார்த்து
பசி அறிந்தவளும்
நீயே...
எனக்காக
உன் வயற்று பசியை
மறந்து...
கடினமாக உழைப்பதை
உன் வேர்வை துளி
காட்டிக் கொடுக்கிறது
என் அன்புத் தாயே...
நான் அதிகம்
நேசிக்கும் பெண்
நீயே...
பிறப்பாயா
மீண்டும்
நீயே
என் குழந்தையாக...


தாயே..
« Last Edit: October 13, 2020, 06:43:25 PM by JsB »

Offline PowerStaR

கல்லிலும் மண்ணிலும்
செதுக்கிய உருவங்களை
விட
என்னைக் கருவில்
பார்த்துப் பார்த்து
சுமந்த
என் தாயே
சிறந்தவள்
என்றும் அன்புடன்
உன் உருவத்தை
என் இதயத்தில்
சுமந்து செல்லும்
உன் அன்பு மகன்
சாலொமோன்


உருவத்தை

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1153
  • Total likes: 3912
  • Total likes: 3912
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கண்கொண்டு
பார்க்கவில்லை
நேசித்தாள்

கவலையின்றி
வாழ
சுவாசித்தாள்

வார்த்தைகள்
ஏதுமில்லாமல்
அன்பை
கடத்தினாள்

விரல்  பிடித்து
நடக்காமல்
பாதை காட்டினாள்

கருவாக உருவான -என்
உருவத்தை காண
விஞ்ஞானம்
துணையின்றி
வலியினூடே
என்னை பிரசவித்தாள்
[highlight-text]விஞ்ஞானம் [/highlight-text]
[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JsB

விஞ்ஞானம் விண்ணை
நோக்கி பிளந்தாலும்
உன் மீது
கொண்ட காதல்
மட்டும்
இறுதி வரை
உன்னையே
பற்றியிருக்கும்


காதல்


J❤️S❤️B

Offline PowerStaR

விழியோடு விழி பேசி
என் உள்ளத்தை
கொள்ளை கொண்ட
கனவு காதலியே
மீண்டும் மீண்டும்
உன்னையே
காதல்
செய்கிறேன்


கனவு

Offline JsB

கனவு உலகத்தின்
கனவு காதலனே...
காதல் பேசும்
ஆசை நாயகனே...
உனக்காகவே
ஏங்கிக் காத்துக்
கொண்டிருக்கும்
உன் காதலியை...
கனவில் கூட
ஏமாற்ற
நினைத்து விடாதே...
நான்
துடித்துப் போய்விடுவேன்...


பேசும்

Offline PowerStaR

பேசும்...
இறைவா
பேசும்...
மௌனம் களைத்து
என்னோடு பேசும்...
நீர் பேசாதிருந்தால்
நான் மடிவேனே...
என்னுயிர் காக்க
மானிடனாய்...
மண்ணுக்கு
வந்தாய்...
என் பாவ சேற்றினை
நீர் சுமந்து
தீர்த்தாய்...
அன்பாக பேசும்
தாய் உள்ளமே...
ஆயிரம் நாவுகள்
போதாதையா...
உம்மை
வாழ்த்திப் பாடையிலே...


நாவுகள்

Offline JsB


தகப்பனே...
கண்ணீரின் பாதைகளில்
நடந்த  நாட்களில்
என்னை தேடி வந்து
என் சூழ்நிலையை மாற்றிய
உங்களுக்கு
நன்றி சொல்ல
ஆயிரம்
நாவுகள் போதாது
நான்
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க
ஐ லவ் யூ டாடி



சூழ்நிலையை


JSB ❤️ ஜெருஷா

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1153
  • Total likes: 3912
  • Total likes: 3912
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நீ பிரிந்த போன பின்
சூழ்நிலைகளை
புரிந்து நடப்பது
இயலாது போகிறது

உன்னையே
புரிந்து கொள்ள
முடியா நான்
எப்படி
புரிந்து கொள்வேன்
சூழ்நிலை மாற்றம் பற்றி



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline PowerStaR

என்னவளே!  என் உயிரே!
 இதயத்தின்   தேவைதையே !
வண்ணம்  காட்டும்   காரிகையே '!வசலில்  வந்து   நின்று
 என் வரவை தேடும்  காதலியே !

மல்லிகையில்  ஒளிந்திருக்கும்
மனம்கவர்ந்த   வாசனை போல்
என் உள்ளத்தில் நிறைந்திருந்து
ஏதோதோ  பண்ணுகிறாய்.

 உன் நெற்றித் திலகமதைக்
காணும்போதெல்லாம்
 உன் இதழ்  இட்ட முதல் முத்தம்
 கொல்லுதடி  என் மனதை

பட்டு சேலைக்கட்டி  நீ
பள  பளன்னு  நிற்கையிலே
அத்தான்  என்  மனசு   
சிட்டாக  பறக்குதடி

 உன் காதலால்  கரைய வைத்தாய்
என் சிந்தையில்  நுழைந்துவிட்டாய்
உன் வார்த்தையில்    வசமிழந்தேன்   
என்னையே  நான்   மறந்தேன்
 உன்  எதிர்காலம் நானாகினே


என் உயிரே
« Last Edit: October 14, 2020, 11:17:57 PM by PowerStaR »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1153
  • Total likes: 3912
  • Total likes: 3912
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என் உயிரே
என் தமக்கையே
என் அண்ணனே
என் அக்காவே
என் தம்பியே
என விளித்து
பரஸ்பரம்
பெயரை கூட பகிர்ந்துகொள்ள
திராணியின்றி
ஊசலாடும் சில உறவுகள்
விசித்திரம்


[highlight-text]கருவி[/highlight-text]
 

[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JsB

என் இதயத்தை
கொள்ளைக் கொண்ட
காதலனே...
என் காதல்
போகும்
திசையைக் காட்டும்
கருவி
எது வென்று
உன்
இதயத்தை
கேட்டுப் பார்
என்னவனே...
அது
நான் அதிகம்
நேசிக்கும்
உன்
இதயமென்று
சொல்லும்


காதலனே

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1153
  • Total likes: 3912
  • Total likes: 3912
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
காதலனே

என்ன தவம்
செய்தேனோ
உன்னையே நினைத்து
காதலித்து
வந்ததால்
"காதலி" என்று
பெயர் பெற்றேன்

என்ன காரணமோ
நீ விட்டு போன பின்னும்
உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்
என் நினைவுகள் நீ திரும்பி
வருவாய் என

அதற்கும்
ஓரார் எனக்கு
ஓர் பெயர் வைத்தனர்

"முதிர்கன்னி "


[highlight-text]பட்டம் [/highlight-text]

[/color]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline PowerStaR

பெண்ணே
எந்த பெண்ணும்
படித்து பெறாத
பட்டம்
தாய்மையே...
உன்
தாய்மைக்கு
என்றுமே
தலைவணங்குகிறேன்...
என்னையும்
பத்து மாதம்
உன்
கருவறையில்
சுமந்தாயே...
என் அன்பு
தாயே...



அன்பு

Offline JsB

செல்லமே
என் மீது
அன்பு வைப்பதற்கு
உன்னை மிஞ்ச
யாரும் இல்லை
இந்த உலகத்தில்
அதனால் தான்
என்னவோ
என் இதயம்
உன்னை
நேசிக்கிறது
நீ மட்டுமே
வேண்டும் என்று
ஏங்கி தவிக்கிறது


உலகத்தில்