Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 445369 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இழப்பு

காதலிக்கையில்
காதலுக்காய்
தூது போக நட்பின்
துணைவேண்டும்


திருமணமானால் துணையென
நின்ற தோழர்களை இழக்கவேண்டும்


காதலிக்கையில்
காதலுக்காய்
அன்னை தந்தையை
இழக்க காதலர் ஆயத்தம்


பெத்தவர்களையும்
தோழர்களையுமே
இழக்கும் மனம் கொண்ட
மனித வாழ்வில் இழப்புக்கள்
இயல்பே


இழப்புக்களை
கடந்து போவது வாழ்க்கையின் நியதி


நியதி

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

satheesu

  • Guest
இங்கே நிறைய முண்டாசுகளுண்டு
கவிகளும் உண்டு ..
மற்றொரு முண்டாசு கவிதான் இல்லை 

Offline JeGaTisH

வாழ்க்கையின் நியதி
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிந்து விடும்

ஆனால் காதல் நியதிகளோ
காதலர்களுட்கு சோகத்தை  தந்து
பின்பு  சந்தோஷத்தை ஊட்ட வல்லது .

நியதிகள் மனிதருக்கு மட்டும் அல்ல
இறைவனும் அதர்க்கு கட்டுப்பட்டவனே

>காதல்
« Last Edit: October 27, 2017, 08:36:55 PM by JeGaTisH »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
சிதறும் சிந்தனையில்
சிதறாமல் உந்தன்
முகம் மட்டும்
என்றும்  நிலைத்திருக்கும் ...

அலைபாயும் இதயம் தன்னில்
அலையாய் மோதிச்செல்லும்
உந்தன் நினைவுகள் என்றும்
நெஞ்சில் படர்ந்திருக்கும் ...

காதல் கொண்ட நெஞ்சம்
உனக்கென ஏங்கி நிற்கும் ...
உன்னை சேர்ந்திடும் நாளை
எண்ணி காத்துக்கிடக்கும் ...

> சிந்தனை

Offline JeGaTisH

என்னை நானே மறந்து
சிறகடிக்குது என் சிந்தனை
காதல் வந்த நேரம்
என் மனமோ விண்ணில்
வாழ்க்கை தந்தவள்
வாழ சொல்ல தரவில்லை
 
மரணம் வந்தாலும் உன் மடி சாய்வேன் சகியே....



>விண்ணில்

Offline thamilan

விண்ணில் பறந்தாலும்
மண்ணுக்கே வர வேண்டும்
மண்ணில் உருவானது மண்ணுக்கே சொந்தம்
இது இயற்கை நியதி
இதை மாற்ற
இறைவனாலும் முடியாது



சொந்தம்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
என்றோ ஒருநாள்
மண்ணுக்கு சொந்தமாகும்
உடலும் ...
இந்த உடல் தாங்கிநிற்கும் 
உயிரும் ...
நிரந்தரமில்லையென
இருக்கையில் ...
நீ மட்டும் நிரந்தரமென்று
எந்தன் இதயம் துடித்தது
மடமையோ ...!!!?

நிரந்தரம்
« Last Edit: January 18, 2018, 09:45:59 AM by ரித்திகா »


Offline JeGaTisH

உயிர் [highlight-text]நிரதரமல்ல[/highlight-text]
அதை நீ திருடிவிட்டாய் என்பதற்காக
அது துடிக்காமல் இருப்பதும் இல்லை
பிறப்பு அது இறப்பை தேடி செல்லும் வழி.


>உயிர்
[/size][/color]

Offline thamilan

உயிர் கொல்லும் காதல்
உயிர் காக்கும் நட்பு
தன்னுயிரை தானே மாய்த்திட தூண்டும் காதல்
தன்னுயிரை இன்னோரு உயிருக்காக
தரை வார்த்திடும்  நட்பு




 வார்ப்பு

Offline thamilan

உயிர் கொல்லும் காதல்
உயிர் காக்கும் நட்பு
தன்னுயிரை தானே மாய்த்திட தூண்டும் காதல்
தன்னுயிரை இன்னோரு உயிருக்காக
தரை வார்த்திடும்  நட்பு




 வார்ப்பு

Offline Evil

என் மறதி,
அவளை மட்டும்
மறக்க மறந்துவிட்டது

ஏன் என்று நினைவிடம் கேட்டேன்

உன் உயிரே பிரிந்தாலும்

என்னவளின் நினைவு அலைகள் ஓயாது என்றது !

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JasHaa

அவனுடனான   ஒரு  நீண்ட பயணம்  ...
ஆள் அரவமற்ற  சாலையில் ...
சாலையை   கடைக்கையில் என் கரம் 
கோர்த்து  கொள்வான் ...
விரல்களின் ஸ்பரிசத்தில்
உணர்த்துவான்  அவன் காதலை ...
அசசாலை எனது நினைவு  நிறைத்த  பொக்கிஷம்  ....

தலைப்பு :
பொக்கிஷம் 

Offline KuYiL

பூமிக்கு வான் நீர் பொக்கிஷம் !
இயற்கைக்கு பசுமை பொக்கிஷம் !
மனித உறவுக்கு அன்பு பொக்கிஷம் !
காதலுக்கு உண்மை பொக்கிஷம் !
உயரிய வாழ்க்கைக்கு நல்ல குணங்கள் பொக்கிஷம்


          $ குணம் $

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
நினைவுகள் நெஞ்சில்  இருக்கும் வரை
நிரந்தர பிரிவு என்றும் இல்லை.


தலைப்பு :  பாசம்

Offline KuYiL

நரைத்த பின்னும் மிரட்டும் அப்பாவின் கண்டிப்பு  .
அறுபது  ஆனாலும் அதிகார அடுப்பங்கரை அரசி
தாயின் வலிக்காத கோபம்..


கோபம்