Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 490755 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
மூச்சி முட்ட நடக்கும் போது வலி தெரியாத வரம் நீயே
காத்து கிடக்கிறேன் நீ வரும் நாட்களை எண்ணி
உன் சிரிப்பில் என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் கருவில் வராத என் கருவறையில் சிறப்பமே



காத்து கிடக்கிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உன் தந்தையின் வருகைக்கு
காத்து கிடக்கிறேன்
நம்
காதலுக்கு சம்மதம் சொல்வார்
என்று

சம்மதம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
வண்ணங்கள் தெளித்த வாசல்
கோலத்தில் சிரித்த ரோஜா!
சொல்லாமல் சொன்னது பெண்ணே...
உனக்கு எனை மணக்க சம்மதம் என்று!



ரோஜா



தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று
காதலின் சின்னமானதோ ரோஜா!
ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா?
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும்,
வருவாயா?

என்ன வரம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உண்மை காதலுக்கு உயிர் ஊட்டுவோம் என்ன வரம் வேண்டும்
பிரிந்தாலும் இணைவோம் வாழ்க வாழ்க வாழ்க
காதல் வாழ்க.



காதல் வாழ்க

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உன்னிடத்தில் என்னைக் கொடுத்த என்னை
மறவாதே என் அன்பே ..
காலமெல்லாம் நம் காதல் வாழ்க என்று
சொல்லாமலே சென்றாயே..

என் அன்பே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் அன்பே! என்னுயிரே! உன்னையே எண்ணுகிறேன்!
உள்ளம் உருகுகிறேன்! உறங்காமல் தவிக்கின்றேன்!
தங்கமாய் நீயிருக்க தரணியிலே மாற்றுமுண்டோ?
உன் மந்திரப்புன்னகையில் மனம் மயங்குகிறேன்!


தவிக்கின்றேன்


தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

வானளவில் சுகம் வளர்த்து
பழகிவிட துடிக்கின்றேன்
மொத்தமாக அள்ளி உன்னை
சொந்தமாக்க தவிக்கின்றேன்
காதல் என்னும் புது வேதத்தின் ,
தெய்வமாகி துதிக்கின்றேன்

பழகிவிட

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
வாழ்த்துக்கள். ... எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..
 இப்படித்தான் என்றால்.பிரிநதால் கூட தாங்காத
என் இதயம் இப்பவெல்லாம்
வாழக்கற்றுக் கொள்ள பழகிவிட்டது…


என் இதய

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

என் இதய மேடையில்
நாடகம்
நடத்த வந்தவர்கள்
பலர்
ஆனால் என் இதயம்
உன்னில் தானே
காதல் கொண்டது

நாடகம்

Offline Gotham

கானகம் வாழ்
புள்ளிமான் போல
விழிதனிலே காட்டிடுவாள்
மோகன நாடகம்
நவரசத்திலும் திளைக்கும்
அவளின் கருவிழிகள்
தருதே
காதல் என்னும் கனிரசம்
அள்ளிப்பருகிடவே
நினைவெங்கும் போதைமயம்..  :o :o :o :o

கனிரசம்

Offline Bommi

என்னவன் தான் என்ற அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்' ஒவ்வொரு முறையும்!

அழைப்பில்

Offline Gotham

ஒவ்வொரு முறையும்
சொக்கிப் போகிறேன்
மணவாளா என்ற உந்தன்
அழைப்பில்

-------

மணவாளா

Offline Bommi

மல்லுவேட்டி மணவாளன்  மாப்பிள்ளையாக
மல்லிகை பூ பந்தலாக அவளும்
மழை கண்ட மழலை போல
மனம் எங்கும் உற்சாகம்
மங்கள வாத்தியங்கள் சத்தமிட
மஞ்சள் அரிசி முத்தமிட
மங்கையவள் சங்கு கழுத்தினிலே
மணவாளனின் தங்க தாலி....

உற்சாகம்

Offline Gotham

பாளமாய் வெடித்துச் சிதறிய
மண்ணின் மேல் மழைத்துளி
பட்ட உற்சாகமாய்
என்னுள் விளைந்தது
என்மேல் தன்னிச்சையாய் பட்ட
அவளின் பார்வைக்கனைகள்

----------------

கனைகள்