மாதம் ஓர் நாள் காண
மனம் இணங்கிவிட்டதா?
அந்தோ !
போதும், போதும் அபாண்ட குற்றச்சாட்டு
அப்பொழுதும்,இப்பொழுதும்,எப்பொழுதும் என
முப்பொழுதும் உன் கற்பனையில் கிடந்த
இனிமை மட்டும் இனி போதாது
உன் பாதம் பட்ட தடமே ,இடமே போதும் என
பகல் இரவு பேதம் இன்றி ,வேதம் ஓதும்
வானவர்களின் தவம் ,அதை விஞ்சும் வீதம்
உனக்காய் தவம் இருப்பவன் நான் வானமாய் .
வளர்பிறை,தேய்பிறை ,மூன்றாம்பிறை , முழுபிறை
மட்டும் அல்ல அமாவசை ஆனாலும்
உன் இருளையும் ரசிக்க இன்பமாய் இருப்பேன்
பௌர்னமியே!