என் கவிக்கு, கனி மொழியின் துணை கொண்டு
பதில் கவி புனைவதால் நீ கனிமொழியாள் .
உன் குரல் கேட்டு ,முகம் பார்க்கும் வரம் பெற்றால்
தேன்மொழியாள் ,கார்குழலாள்,மெல்லிடையாள்
இன்னும் பல பட்டம் தரத்தயார்
சிந்தனையில் சிறகடிக்கும் சிட்டுனக்கு
வர்ணனையை வாரி வழங்குவதில் ஏன் நிந்தனை ?
அடுத்த தலைப்பு - சிறகடிக்கும் சிட்டு