Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 488298 times)

Offline நந்தா

எப்படி சொல்வது
என் இதயத்திற்கு ..
நீ  அன்பு கொள்ளவும் 
உன்னிடம்  அன்பு கொள்ளவும்
இனி யாரும் இல்லை என்பதை


யாரும் இல்லாத

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நந்தா அவர்களே இது கவிதை விளையாட்டு ஒருவர் கவிதை எழுதிவிட்டு தலைப்பை விட்டுச்செல்வார் அதனை உள்வாங்கி தலைப்பிற்கு பொருந்துமாறு எழுத வேண்டும்.காதல் கோட்டை என்று தலைப்பு உள்ளது உங்கள் கவிதையில் காதல் என்ற வார்த்தையே வரவில்லை.நான் காதல் கோட்டை என்ற தலைப்பிற்கும் நீங்கள் கொடுத்த யாரும் இல்லாத என்ற தலைபிற்கும் சேர்த்தே எழுதுகிறேன்.


யாரும் இல்லாத இடத்தில் உன்
நினைவாக காதல் கோட்டை
கட்ட நினைத்தேன் முடியவில்லை
பெண்ணே, என்னசெய்வேன்
என்னைப்போலவே பலபேர்
என்னைச்சுற்றி கல்லறையில்!!!


அடுத்தத் தலைப்பு "கல்லறை"

Offline நந்தா

விமல் அவர்களே

என் இதயத்திற்கு

என்று முந்தைய தலைப்பு கொடுக்க  பட்டிருந்தது ..அதை அழித்து விட்டார்கள் போல

Offline Global Angel

என் இதயத்திற்கு தெரியவில்லை
உன் கண்கள்தான் அதன் சாவிஎன்று
உன் இதயத்திற்கு தெரியவில்லை
என் அன்புதான் அதன் கதவுகள் என்று



அன்பு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அன்பு என்ற மூன்றெழுத்தில்
அடைத்து
நேசம் என்ற மூன்றெழுத்தில்
நட்பை தந்து
காதல் என்ற மூன்றெழுத்தால்
என்னை களவாடி சென்றவனே
காதல் கற்று தந்த நீ
உன்னை மறக்கும் வித்தை
சொல்லி தர மறந்தது ஏனோ?

காதல்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

புலி மானை பார்ப்பதும்
பாம்பு  எலியை பார்ப்பதும்
பூனை மீனை பார்ப்பதும்
ஆண் பெண்ணை பார்ப்பதும்
காதல் தானாம்
தன் இரை மீது கொண்ட காதல்


இரை
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
பெண்ணே உன் பொழுது போக்கிற்கு
நீ என்னை பழுது பார்த்தாய், புதிய
முகமாய் மாறி, காதலில் வெறி
கொண்டு வேங்கையாய் புறப்பட்ட
நான் இரையானேன் உன் காதலுக்கு
காதலனாய் இல்லை பொழுது போக்காய்!!!

அடுத்தத் தலைப்பு "முகம்"

Offline Global Angel

முகம் காண நோக்கின்
அகம் கண்டேனோ இல்லை
அகம் காண நோக்கின்
முகம் கண்டேனோ இல்லை
புறம் நோக்கி உளம் கண்டேன்
என் அகம் நோக்கியது எங்கும்
உன் முகம் என


அகம்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அகம் புறம்  கூசாமல் சொல்கிறாய்
உன் மேல் காதல் இல்லையென்று
உற்று கவனித்து திருத்தி கொள்கிறேன்
உன்'னுள் காதல் உள்ளது என்று


உன் மேல்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

காலங்களோடு போராடுகிறேன்
போராட்டம் ஓயவில்லை - முடிவு
என்னும் இடத்தில் வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நான் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது

போராடுகிறேன்

Offline Global Angel

வெறும் வார்த்தைகளால்
வர்ணனைகள் செய்து
போராடுகின்றேன்
வேரோடு பெயர்க்கும்
உன் பிரிவுகளை தவிர்க்க


பிரிவு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பிரிவு என்ற சொல்
இல்லாவிடின்
நினைவெனும் சொல்
மரித்தே போயிருக்குமோ..

பிரிவின் வலி நினைவை
உணர்த்த
வலியோடு நினைவை
நேசிக்கிறேன்..

பிரிவை நிரந்தரமாய்
தந்து
நினைவுத் தீயால் இதயத்தை
சுட்டு விடாதே..

எறியும் தீயில்
என்னுளிருக்கும் உன்னை
கருக விடும் மனம் எனக்கில்லை


என்னுளிருக்கும்



 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
என்னுள்ளிருக்கும் உன் நினைவு
தினமும் குளிக்க ஆசைப்படுகிறது
போல, விண்ணிலிருந்து வரும்
மழை என் கண்ணிலும்!!!

அடுத்தத் தலைப்பு "ஆசை"
« Last Edit: January 21, 2013, 04:50:55 PM by vimal »

Offline Bommi

கண்களில் உன்னை வைக்க ஆசை
கண்ணீராக வெளி ஏற ஆசை இல்லை...
வைத்திருக்கிறேன் என்னில் பாதியாக...
உன்னை


கண்ணீராக

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நீ என்னை பிரிந்த பின்பும்
உன்மேல் நான் கொண்ட
காதல் கரைபுரண்டு ஓடியது,
என் கண்ணீராய்!!!

அடுத்தத் தலைப்பு"நான் கொண்ட காதல்"