நீ
எச்சில் படுத்திய தேநீர்
தேன் நீர்!
*
இருபுறமும் இதயமெனக்கு
புகைப்படத்தில் மட்டும்
என் வலப்பக்கம்
நீ!
*
நீயில்லாமல்
ஊமையாய் போனது
நான் மட்டுமல்ல
என் முந்தக்கூவியும் தான்.
*
தொடக்கத்திலும்
முடிவிலும்
பக்கங்கள் கிழிந்து போன
பிரம்மன் எழுதிய
பிரசித்தி பெற்ற
மர்ம நாவல்
நீ!
எழுதியவர்
ஸ்ரீ