Author Topic: ~ Nice Short Story ~  (Read 5461 times)

Offline MysteRy

~ Nice Short Story ~
« on: July 30, 2012, 02:52:20 PM »



ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....
தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!