Author Topic: ஆசாரக்கோவை  (Read 8612 times)

Offline Global Angel

Re: ஆசாரக்கோவை
« Reply #15 on: July 07, 2012, 01:31:52 AM »
76. சொல்லும் முறைமை
 (இன்னிசை வெண்பா)
 விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
 பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
 சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
 சொல்லுக செவ்வி அறிந்து.
 
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
 எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
 தம்மேனி அல்லால் பிற.
 
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
 சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
 தேர்வார்போல் நிற்க திரிந்து.
 
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
 (நேரிசை வெண்பா)
 துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
 இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
 செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
 திறப்பட்டார் கண்ணே உள.
 
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
 (நேரிசை வெண்பா)
 தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
 உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
 என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
 நன்கறிவார் கூறார் முறை.
 
                    

Offline Global Angel

Re: ஆசாரக்கோவை
« Reply #16 on: July 07, 2012, 01:32:35 AM »
81. ஆன்றோர் செய்யாதவை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
 இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
 தொழிற்குரிவர் அல்லா தவர்.
 
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
 (இன்னிசை வெண்பா)
 வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
 ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
 மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
 உவப்பன வேறாய் விடும்.
 
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
 (இன்னிசை வெண்பா)
 நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
 உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
 அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
 கடைபோக வாழ்துமென் பார்.
 
84. பழகியவை என இகழத் தகாதவை
 (இன்னிசை வெண்பா)
 அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
 முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
 இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
 இகழின் இழுக்கந் தரும்.
 
85. செல்வம் கெடும் வழி
 (நேரிசை வெண்பா)
 அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
 இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
 மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
 மன்னிய செல்வம் கெடும்.
 
                    

Offline Global Angel

Re: ஆசாரக்கோவை
« Reply #17 on: July 07, 2012, 01:33:29 AM »
86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
 கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
 உண்டது கேளார் விடல்.
 
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
 மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
 நில்லார்தாம் கட்டின் மிசை.
 
88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
 அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
 திறத்துளி வாழ்தும்என் பார்.
 
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
 கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
 மெய்யாய காட்சி யவர்.
 
90. தலையில் சூடிய மோத்தல்
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
 பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
 புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.
 
                    

Offline Global Angel

Re: ஆசாரக்கோவை
« Reply #18 on: July 07, 2012, 01:34:20 AM »
91. பழியாவன
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
 காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
 மூத்த உளஆக லான்.
 
92. அந்தணரின் சொல்லைக் கேட்க
 (நேரிசை வெண்பா)
 தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
 புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
 அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
 என்றும் பிழைப்ப தில்லை.
 
93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
 என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
 நின்று உழியும் செல்லார் விடல்.
 
94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
 (இன்னிசை வெண்பா)
 கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
 மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
 கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
 ஐயமில் காட்சி யவர்.
 
95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
 (இன்னிசை வெண்பா)
 தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
 உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
 பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
 மன்னிய ஏதம் தரும்.
 
                    

Offline Global Angel

Re: ஆசாரக்கோவை
« Reply #19 on: July 07, 2012, 01:35:11 AM »
96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
 (இன்னிசை வெண்பா)
 நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
 தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
 அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
 எப்பெற்றி யானும் படும்.
 
97, சான்றோர் முன் சொல்லும் முறை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
 பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
 கண்ணுள்ளே நோக்கி யுரை.
 
98. புகக் கூடாத இடங்கள்
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 சூதர் கழகம் அரவம் அறாக்களம்
 பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
 ஏதம் பலவும் தரும்.
 
99. அறிவினர் செய்யாதவை
 (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
 உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
 நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
 இல்லம் புகாஅர் விடல்.
 
100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
 (பஃறொடை வெண்பா)
 அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
 இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
 அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
 ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
 ஆசாரம் வீடுபெற் றார்.
 
ஆசாரக் கோவை முற்றிற்று