Author Topic: தமிழ்  (Read 23744 times)

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #15 on: July 06, 2012, 07:12:56 PM »
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
 
1. பொருட் பெயர்
 2. இடப் பெயர்
 3. காலப் பெயர்
 4. சினைப் பெயர்
 5. பண்புப் பெயர்
 6. தொழிற் பெயர்
 
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
 

நன்னூல் விளக்கம்
 
'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
 தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
 வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
 ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'

 - நன்னூல் - 275
 
எடுத்துக்காட்டுகள்
 

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
 இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
 பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
 தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

 
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #16 on: July 06, 2012, 07:14:52 PM »
வினைச்சொல்


வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.
 
 
 
முற்று இருவகைப்படும். அவை
 
* தெரிநிலை வினைமுற்று
 * குறிப்பு வினைமுற்று
 
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
 
* பெயரெச்சம்
 * வினையெச்சம்
 

முற்று
 
தெரிநிலை வினைமுற்று
 
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
 
எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
 
 
 
குறிப்பு வினைமுற்று
 
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.
 
எ.கா: அவன் பொன்னன்.
 
 
 
எச்சம்
 
பெயரெச்சம்
 
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.
 
எ.கா: படித்த மாணவன்
 
 
 
வினையெச்சம்
 
வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.
 
எ.கா: படித்துத் தேறினான்
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #17 on: July 06, 2012, 07:16:32 PM »
இடைச்சொல்


இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
 
 
 
ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய
 
வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.
 
 
 
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.
 
 
 
எ.கா:
 
* அவன்தான் வந்தான்
 * சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #18 on: July 06, 2012, 07:17:54 PM »
உரிச்சொல்


உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
 
 
 
உரிச்சொல் இருவகைப்படும்
 
* ஒரு பொருள் குறித்த பல சொல்
 * பல பொருள் குறித்த ஒரு சொல்
 
 
 
எ.கா
 
ஒரு பொருள் குறித்த பல சொல்
 
* சாலப் பேசினான்.
 * உறு புகழ்.
 * தவ உயர்ந்தன.
 * நனி தின்றான்.
 
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
 
 
 
பல பொருள் குறித்த ஒரு சொல்
 
* கடிமனை - காவல்
 * கடிவாள் - கூர்மை
 * கடி மிளகு - கரிப்பு
 * கடிமலர் - சிறப்பு
 
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #19 on: July 06, 2012, 07:19:56 PM »
சொல்லின் பிற வகைகள்


இலக்கிய வகைச் சொற்கள்


இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
 
1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல் என்பவை ஆகும்.
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #20 on: July 06, 2012, 07:21:33 PM »
இலக்கிய வகைச் சொற்கள்
 

இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
 
1) இயற்சொல்

2) திரிசொல்

3) திசைச்சொல்

4) வடசொல் என்பவை ஆகும்.
 
 
 
இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) மரம், நடந்தான்
 
 
 
மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால் அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
 தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

 
(நன்னூல் : 271)
 
 
 
செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
 
 
 
இயற்சொல் வகைகள்
 
இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
 
1) பெயர் இயற்சொல்

2) வினை இயற்சொல் என்பவை ஆகும்.

 
 
 
பெயர் இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களைப் பெயர் இயற்சொற்கள் என்று கூறுவோம்.
 
 
 
(எ.கா) மரம், மலை, கடல்
 
 
 
இந்தப் பெயர்ச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை பெயர் இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
வினை இயற்சொல்
 
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
 
 
 
(எ.கா) நடந்தான், சிரித்தாள், வந்தது.
 
 
 
இந்த வினைச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே, இவை வினை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #21 on: July 06, 2012, 07:23:46 PM »
திரிசொல்

கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
 
 
 
மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.
 
 
 
தத்தை-கிளி
 ஆழி-கடல்
 செப்பினான்-உரைத்தான்
 
 
 
என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
திரிசொல் வகைகள்
 
திரிசொல் இரண்டு வகைப்படும்.

அவை:
 
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பவை ஆகும்.
 
 
 
1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
 
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒரு பொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.
 
 
 
(எ.கா) கமலம் கஞ்சம் முண்டகம் முளரி
 
 
 
இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.
 
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான்
 
இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.
 
 
 
2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
 
பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
 
 
 
(எ.கா) ஆவி
 
 
 
இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
 
 
 
(எ.கா) வீசு
 
 
 
இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன. வீசு என்பது வினைச் சொல். எனவே இதைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.
 
 
 
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
 பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
 அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
 
(நன்னூல் : 272)
 
 
 
ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்

                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #22 on: July 06, 2012, 07:25:13 PM »
வடசொல்

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொல் இரண்டு வகைப்படும்.
 
1) தற்சமம்
2) தற்பவம்
 
 
 
1. தற்சமம்
 
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்ற மின்றி வருவது தற்சமம் எனப்படும்.
 
 
 
(எ.கா) கமலம் காரணம் மேரு
 
 
 
இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.
 
 
 
2. தற்பவம்
 
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் எனப்படும்.
 
 
 
(எ.கா)
 
பங்கஜம்-பங்கயம்
 ரிஷபம்-இடபம்
 ஹரி-அரி
 பக்ஷி-பட்சி
 சரஸ்வதி-சரசுவதி
 வருஷம்-வருடம்
 
 
 
இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன..
 
 
 
தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
 
 
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
 ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்

 
(நன்னூல் : 274)
 
 
 
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்.
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #23 on: July 06, 2012, 07:27:15 PM »
திசைச்சொல்


தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
 
 
 
(எ.கா) ஆசாமி, சாவி
 
 
 
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
 
 
 
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.
 

பெற்றம் - பசு - தென்பாண்டி நாட்டுச்சொல்
 தள்ளை - தாய் - குட்ட நாட்டுச்சொல்
 அச்சன் -தந்தை - குடநாட்டுச்சொல்
 பாழி -சிறுகுளம்- பூழிநாட்டுச்சொல்

 
 
 
இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
 
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
 
 
 
திசைச்சொல் மொழி தமிழ்
 கெட்டி தெலுங்கு உறுதி
 தெம்பு தெலுங்கு ஊக்கம்
 பண்டிகை தெலுங்கு விழா
 வாடகை தெலுங்கு குடிக்கூலி
 எச்சரிக்கை தெலுங்கு முன் அறிவிப்பு
 அசல் உருது முதல்
 அனாமத்து உருது கணக்கில் இல்லாதது
 இனாம் உருது நன்கொடை
 இலாகா உருது துறை
 சலாம் உருது வணக்கம்
 சாமான் உருது பொருள்
 சவால் உருது அறைகூவல்
 கம்மி பாரசீகம் குறைவு
 கிஸ்தி பாரசீகம் வரி
 குஸ்தி பாரசீகம் குத்துச்சண்டை
 சரகம் பாரசீகம் எல்லை
 சுமார் பாரசீகம் ஏறக்குறைய
 தயார் பாரசீகம் ஆயத்தம்
 பட்டா பாரசீகம் உரிமம்
 டாக்டர் ஆங்கிலம் மருத்துவர்
 நைட் ஆங்கிலம் இரவு
 பஸ் ஆங்கிலம் பேருந்து
 
 
 
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
 ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
 தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப

 
(நன்னூல் : 273)
 
 
 
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
 
 
 
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
 
1) தென்பாண்டி நாடு 2) குட்ட நாடு 3) குட நாடு 4) கற்கா நாடு 5) வேணாடு 6) பூழி நாடு 7) பன்றி நாடு 8) அருவா நாடு 9) அருவா வடதலை நாடு 10) சீதநாடு 11) மலாடு 12) புனல் நாடு
 
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
 
 
 
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
 
1) சிங்களம் 2) சோனகம் 3) சாவகம் 4) சீனம் 5) துளு 6) குடகம் 7) கொங்கணம் 8) கன்னடம் 9) கொல்லம் 10) தெலுங்கம் 11) கலிங்கம் 12) வங்கம் 13) கங்கம் 14) மகதம் 15) கடாரம் 16) கௌடம் 17) குசலம்
 
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.
 
 
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #24 on: July 06, 2012, 07:29:27 PM »
தொகைச் சொற்கள்


இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும்.
 

(உ-ம்)

செந்தாமரை=(செம்மை+தாமரை).


தொகைகள்:

■வேற்றுமைத்தொகை,
 ■வினைத்தொகை,
 ■பண்புத்தொகை,
 ■இருபெயரொட்டுப் பண்புத்தொகை,
 ■உவமைத்தொகை,
 ■உம்மைத்தொகை,
 ■அன்மொழித்தொகை என்று பலவகைப்படும்
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #25 on: July 06, 2012, 07:31:49 PM »
வேற்றுமைத் தொகை


இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்.
 

எடுத்துக்காட்டு:-
 


1. முதலாம் வேற்றுமை/எழுவாய் வேற்றுமை
 
பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் எனப்படும்." எந்த [[உருபு|உருபும்] சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.
 
எ.கா: கண்ணகி வழக்கை உரைத்தாள்.

2. இரண்டாம் வேற்றுமை:
 (எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
 இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
 
3. மூன்றாம் வேற்றுமை:
 (எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
 மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
 

4. நான்காம் வேற்றுமை:
 (எ-கா):நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
 

5. ஐந்தாம் வேற்றுமை:
 (எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
 ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
 

6. ஆறாம் வேற்றுமை:

 (எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
 (எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
 

7. ஏழாம் வேற்றுமை:
 (எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
 ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
 (எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #26 on: July 06, 2012, 07:33:07 PM »
வினைத்தொகை

 

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும்.

எளியவழி:

(1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும்

(2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும்

(3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.
 
 
 
(எ-கா)
 

"சுடுசோறு" -
 

சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
 சுட்ட சோறு (இறந்தகாலம்)
 சுடும் சோறு (எதிர்காலம்)
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #27 on: July 06, 2012, 07:34:29 PM »
பண்புத்தொகை

 
பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்.

 
 
அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.
 

பண்பாவன:



குணம்(நன்மை, தீமை),

உருவம்(வட்டம், சதுரம்),

நிறம்(நீலம், பசுமை),

எண்ணம்(ஒன்று, பத்து),

சுவை(துவர், காரம்).
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #28 on: July 06, 2012, 07:35:19 PM »
உவமைத் தொகை


 
உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை.
 
 
 
(எ-கா)
 பானைவாய்:
 இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற).
 

(எ-கா)
 மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 "மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை
                    

Offline Global Angel

Re: தமிழ்
« Reply #29 on: July 06, 2012, 07:36:15 PM »
உம்மைத் தொகை


 
உம்மைத் தொகை கண்டுபிடிக்க

(1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.
 
 
 
(எ-கா) மாடுகன்று.
 


(2) இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை என்று கொள்க.
 
 
 
(எ-கா)
 சேர சோழ பாண்டியர்:
 இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்.
 



(எ-கா)
 மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
 "வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"