Author Topic: ~ சுவையான நெத்திலி மீன் கிரேவி ~  (Read 1006 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226466
  • Total likes: 28902
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
cசுவையான நெத்திலி மீன் கிரேவி



தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கனிந்த தக்காளிப்பழம் - ஐந்து
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது – ஒரு கப்
மிளகாய் தூள் – 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 5 டீ ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

நெத்திலி சுத்தம் செய்யும் முறை

மீனின் தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விரலால் கீறி தலையோடு சேர்த்து வயிற்றில் உள்ள கழிவுகளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும். அனைத்து மீன்களையும் நன்கு சுத்தம் செய்த பின்னர் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும். பின்னர் மீன்களின் மீது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை, ஒரு டீ ஸ்பூன் உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதனால் தேவையற்ற மண், அழுக்கு இருந்தலும் வெளியேறிவிடும். மீன்களில் உப்பு பிடித்து சுவை கூடுதலாக இருக்கும்.

கிரேவி செய்முறை

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும். சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் கனிந்த தக்காளிப் பழத்தை பிழிந்து விடவும். பின்னர் நன்றாக கிரேவியாகும் வரை வதக்கவேண்டும். இந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.

புளி கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை மிதமாக வைத்து மீனை போடவும். 5 நிமிடம் கழித்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.

இந்த குழம்பிற்கு கடைசியில்தான் மீனைப் போடவும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவையெனில் சேர்க்கவும். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளிப் பழம் சேர்த்தால் போதுமானது.