பாலூற்றி அபிஷேகம் செய்கிறோம்
சந்தனத்தால் குளிர வைக்கிறோம்
பன்னீரில் அர்ச்சிக்கிறோம்
கடவுளே...
இவையனைத்தும் ஒன்றாகி
அருள் என்னும் மழையில்
எங்களை நனைய வைக்கிறாய்...
பூஜிக்கும் எங்களுக்கு
பூவாக தோன்றுகிறாய்...
தேடி வந்தவரை
தேனாக பார்க்கிறாய்
உறவென்று வந்து
உதவிகள் செய்கிறாய்
பிறருக்கு உதவுவோம்
அவர்களின் ஆசிர்வாதம்
நமக்கு வரமாக மாறும்...