Author Topic: ***எனக்கு பிடித்த கவிதைகள்***  (Read 1382 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஒவ்வொரு முறையும்
கவிதை எழுதிய
கையோடு உன்னுடன்
பகிர்ந்து கொள்கிறேன்,
நீ படித்த பிறகு தான்
என் கவிதைகள்
முழுமையடைகின்றன.

*****************************

உன் இதயச் சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கு
உணவாய்
உனது காதலை மட்டும் கொடு

உன்னை நினைத்துக் கொண்டிருக்கும்
வேலையையும் சேர்த்தே கொடு.
அதை இரட்டை
ஆயுள் தண்டனையாக்க
நானே கடவுளிடம் மனுக் கொடுக்கிறேன்.


*******************************

உன்னை அவ்வளவு எளிதாக
மனைவியாய் ஆக்கி விட மாட்டேன்
இன்னும் கொஞ்ச நாள் எனது
காதல் கொடுமையை அனுபவிக்கும்
அன்பானக் காதலியாய் இரு.


*********************************

நீ செய்யும் எல்லாச் செயல்களிலும்
எனக்குள் ஒரு கவிதை
பிறக்கும்
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன பந்தம்?


*********************************

உன் விரல்களால்
வண்ணம் தீட்டுவதாக இருந்தால்,
நிலாக் கூட வண்ணமாய் மாறக் கூடும்.



*********************************

எத்தனையோ
பெண்களுக்கு அழகி என்கின்ற திமிர்
உனக்கு மட்டும் அழகே உனது திமிர் தான்.


*********************************

எனது கனவுகளையும்,
கவிதைகளையும் முழுவதுமாய்
ஆக்கிரமித்துக் கொண்டாய்
எனக்குள் காதல் பிறந்து விட்டதா இல்லை
நீயே காதலாய் பிறந்து விட்டாயா?


********************************

உனது கன்னத்தில்
முத்தமிடுவதை விட
உன்னை என்
கவிதையில் முத்தமிடுவதையே
நான் அதிகம் நேசிக்கின்றேன்.


********************************

பட்டும் படாமலும்
என்னைக் கட்டி அணைத்தாய்!
என்னிடம் இதுவரை யாருமே
நுகர்ந்திடாத வாசனைத்
திரவியம் என்று ஊரே மெச்சியது.


********************************

உன் குடும்பத்தினர் மீது
எனக்கு கொள்ளைப் பொறாமை,
எப்படி முடிகிறது
அவர்களால் மட்டும்
கண் கூசாமல் உன்னைப் பார்க்க?


********************************

என்னை எவ்வளவு பிடிக்கும்
என்று அடிக்கடி கேட்கிறாய்
சொல்லத் தெரியவில்லை,
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை.
.

********************************




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Quote
உன்னை அவ்வளவு எளிதாக
மனைவியாய் ஆக்கி விட மாட்டேன்
இன்னும் கொஞ்ச நாள் எனது
காதல் கொடுமையை அனுபவிக்கும்
அன்பானக் காதலியாய் இரு.

Nice one, Thanks for sharing

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
thank u


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
shruthi anaithu kavithaigalum miga nanru...

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Thanks vimal ...

Ithu enaku piditha kavithaigal...

Nan eluthiyathu kavithaigal illai..

unga singnature words also nice (F)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்