Author Topic: ~ பாட்டி வைத்தியம் ~  (Read 52791 times)

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #60 on: May 08, 2012, 12:06:27 PM »
நெஞ்சு எரிச்சல் குணமாக

நெஞ்சு எரிச்சல் குணமாக, சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சுண்டைக் காயளவு உருட்டி தினசரி சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

பித்தத்தை போக்க:-

கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டால் பித்தத்தை போக்கும். இந்தத் துவையல் இளநரையையும் முடி உதிர்வதையும் தடுக்கும்.

மூக்கு அடைப்பு நீங்க:-

சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகிவிடும்.

வயிற்றுவலி நீங்க:-

வயிற்றுவலி திடீரென ஏற்படுமாயின் இரண்டு, மூன்று வெள்ளைப்பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கினால் வயிற்றுவலி குறையும்.

சுத்தமான ஆரோக்கியமான நீரைப் பெற...

தண்ணீரைக் காய்ச்சி பருகுவதே ஆரோக்கியம். அப்படி செய்ய இயலாத நேரத்தில் குடிநீர் பானையில் உள்ள தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து நன்றாகக் கலக்கி, சிறிது நேரம் வைத்திருக்கவும். தண்ணீர் நன்றாகத் தெளிந்ததும் பருக பயன்படுத்தலாம். வண்டல், கிருமிகள் அடியில் தங்கிவிடும். செலவின்றி சுத்தீகரிக்கப்பட்ட குடி தண்ணீர் இது.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #61 on: May 08, 2012, 12:10:00 PM »
பெருங்காயம்




பித்தம் நீங்க:-

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

புழுக்களை ஒழிக்க:-

சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும். வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களை இது அழிக்கிறது.

புரதச்சத்து பெற:-

பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

மருத்துவகுணமும் உடையது:-

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #62 on: May 08, 2012, 12:11:44 PM »
உடல் தளர்ச்சி விலக...


முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #63 on: May 08, 2012, 12:14:46 PM »
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்




1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #64 on: May 08, 2012, 12:17:17 PM »
ஏலக்காய் வைத்தியம்




1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

3. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

4. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.

5. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.

6. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

7. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #65 on: May 08, 2012, 12:19:59 PM »
வைட்டமின் சத்துக்கள்


கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய், போன்றவற்றை சன்னமாகத் துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றாகக் கலந்து, தக்காளி, தேங்காய் துருவல், சிறிது தயிர் சேர்த்து பச்சடி செய்து உட்கொள்ளலாம். இந்த உணவில் நோய் நீக்கவும், தடுக்கவும் ஆற்றல் பெற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குடல் புண்ணை ஆற்றுவதோடு மலச் சிக்கலையும் போக்கும்.

நுரையீரல் நோய்கள்

சிற்றரத்தை 100 கிராம், சீனா கற்கண்டு 100 கிராம் தனித்தனியாக இடித்துப் பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இரவு சிட்டிகை எடுத்து வாயில் இட்டு பிறகு பால் சாப்பிட்டால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், சளி, வாத, பித்த நோய் ஆகியவை அகலும்.

மலச்சிக்கல்

கடுக்காயைத் தட்டிப்போட்டு ஒரு ஆழாக்கு நீரை பாதியாக கொதிக்க வைத்துக் குலுக்கி குடிக்க வேண்டும் இதை படுக்கும்போதோ விடியற் காலையோ குடிக்கலாம். சிறு குழந்தையாக இருந்தால் தினமும் இரண்டு அல்லது மூன்று பெரிய காய்ந்த திராட்சையை வெந்நீரில் பழத்தை நன்கு பிழிந்து எடுத்துவிட்டு நீரை புகட்டலாம்.

வயிற்றுக் கடுப்பு

வயிற்றில் ஒரு விதமாக வலி வந்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்று உணர்ச்சி ஏற்படும். அப்போது வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு, கரைத்த மோரைக் குடிக்க வேண்டும் இந்த வலி நீங்கி விடும்.

இடுப்பு வலி

இடுப்பு வலி, வாயுத் தொல்லை ஏற்பட்டால் நாட்டு மருந்துக்கடையில் சாரணை வேர் கிடைக்கும். அதைச் சிறு துண்டு தண்ணீரில் தட்டிப் போட்டு கொதி வரும்போது அரிசி நொய்யும், கைப்பிடி அளவு பூண்டும் போட்டுக் கஞ்சி வைத்து, சர்க்கரை போட்டு மசித்து சூடாகக் குடிக்கலாம். சிறிது உப்பு போட்டும் குடிக்கலாம் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வாயுத் தொந்தரவே வராது.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #66 on: May 08, 2012, 02:52:25 PM »
கட்டிகள் பழுத்து உடைய...




பெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும்.

பழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீது புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும்.

எருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும்.

பழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும்.

வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #67 on: May 08, 2012, 02:54:54 PM »
புண் குணமாக...

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

நீர்ச்சுருக்கு

வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

இரவில் மூக்கடைப்புக்கு

எளிய மருத்துவ முறை மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

மலச்சிக்கலுக்கு

இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கை சுளுக்கு உள்ளவர்கள்

நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

வேனல் கட்டியா

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #68 on: May 08, 2012, 02:56:18 PM »
கண் நோய் அகல...

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #69 on: May 08, 2012, 02:57:39 PM »
கபம் நீங்க...

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #70 on: May 08, 2012, 02:59:31 PM »
வயிறு இதமாக...


புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

பெருங்காயம்

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.

ஓமம்

1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #71 on: May 08, 2012, 03:02:38 PM »
வெள்ளரிக்காய்




இதன் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

பெருங்காயம்

பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

மிளகு

மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

சீரகம்

சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

வெங்காயம்

வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #72 on: May 08, 2012, 03:04:43 PM »
வாயு தொல்லையா?




இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #73 on: May 08, 2012, 03:06:51 PM »
சுத்தமான தேனிலே மருத்துவம்




சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம் வாந்திபேதி, தீப்புண் விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமின்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.

Offline MysteRy

Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #74 on: May 08, 2012, 03:07:57 PM »
மெலிந்த உடல் பருக்க

1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.