Author Topic: ~ பாட்டி வைத்தியம் ~  (Read 53859 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #45 on: May 07, 2012, 11:42:17 AM »
கல்லீரல் கோளாறு குணமாக...


* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.


* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகிவர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* சிறிது தனியாவுடன், சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால், அதிகம் மது உண்ட போதை தணியும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #46 on: May 07, 2012, 04:18:22 PM »
தேகத்தை பளபளப்பாக்க...




தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர்.

பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.

சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு.

பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்: சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம்(Cumin), இஞ்சி(Ginger), சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு(Dry Ginger) , சீரகம், மிளகு(Pepper), திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #47 on: May 07, 2012, 04:25:51 PM »
இருமல் குணமாக வெந்தயக்கீரை...


நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்.


கொத்தமல்லி கீரை(Coriander): மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வல்லாரை(Centella asiatica): நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை(Fenugreek): சாப்பிட்டால் இருமல் குணமாகும்

புதினா கீரை(Mint): மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #48 on: May 07, 2012, 04:29:05 PM »
தங்கச்சத்தைப் பெற....


பொன்னாங்காணிக்கீரை

தங்கச்சத்தைச் சிறப்பாகக் கொண்டது. பொன்னாங்காணிக்கீரையில் தங்கச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதாலும், சுண்ணாம்புச்சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் மிகச் சிறப்பாக இருப்பதாலும் இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

பொன்னாங்காணிக்கீரை சமைத்துச் சாப்பிடுவதால், உடல் பலம் கூடும். தோல் நோய்கள் வராது. கண் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். பார்வை தெளிவடையும். நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களும் மூலநோய் உள்ளவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், குணம் பெறலாம்.

பொன்னாங்காணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். காட்டராக்ட் நோய் வராமல் பாதுகாக்கும். கண் சம்பந்தமான இதரப் பிணிகள் அனைத்தும் நீங்கி பார்வை தெளிவடையும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிக்கீரையை துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடம்பு பெருக்கும். பொன்னாங்காணிக் கீரையில் துவரம் பருப்பு சேர்த்துச் சமைத்து நெய் சேர்க்காமல் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூன்று மாதங்களில் தேவையற்ற உடல் பருமன் குறையும்.

இக்கீரையில் பூண்டும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பொற்றிலைக்கரிப்பான்

பொற்றிலைக்கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச்சத்து அதிகம் உள்ளது. இக்கீரையைச் சாப்பிட்டால் உடல் பொன் நிறமாகும். உடலை எந்த நோயும் தாக்காது. கண்கள் ஒளி பெறும். பார்வை கூர்மை பெறும். புத்தி தெளிவடையும். குன்மக் கட்டிகள் நீங்கிவிடும். பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாகத் தின்றால் மிகுந்த நன்மை கிடைக்கும். பச்சடியாகவும், கூட்டுக்கறியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்து, நிழலில் நன்றாகக் காய வைத்துப் பொடி செய்துகொண்டு பொடியின் எடைக்குப் பாதி எடை, சீனி சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை ஆகாரத்துக்கு முன்னதாக ஒரு தேக்கரண்டி பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சோகை, காமாலை, பாண்டு, வீக்கம், மூலம், மேகரோகங்கள் நிவர்த்தியாகும்.

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மூர்ச்சை, மயக்கம், நரம்பின் அதிர்ச்சிகள், தூக்கமின்மை, புலம்புதல் போன்ற நிலையில் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரை வீதம் தினசரி சாப்பிட்டு வந்தால், ஹிஸ்டீரியாவின் தொடர்புடைய அனைத்து நோய்க்குறிகளும் குணமாகும்.

கரிசலாங்கண்ணி நெய்

பொற்றிலைக் கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு பங்கும், பசு நெய் ஒரு பங்கும் சேர்த்துக் காய்ச்சி வண்டல் மெழுகுபதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்து காலை ஆகாரத்துக்கு முன்பும், இரவு படுக்கும்போதும் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மூலரோகம், கண் ரோகங்கள், உஷ்ண ரோகங்கள், இருமல் அனைத்தும் நிவர்த்தியாகும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #49 on: May 07, 2012, 04:35:54 PM »
இருதய நோய் குணமாக...




செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.

செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும்.

ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 500 மில்லியாக வந்ததும் வடிகட்டி இதில் ஒரு கிலோ சீனி சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி பால் அல்லது வெந்நீரில் கலந்து 4-50 தினங்கள் கொடுத்தால், குழந்தைகளின் கணைச்சூடு நிரந்தரமாகக் குணமாகும். நவீன மருத்துவத்தில் கணைச்சூட்டை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது. சயரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சர்பத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சயரோகம் முழுமையாக நிவர்த்தியாகும்.  கல்லீரல், இருதய நோய்கள் குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் வெந்நீர் இரண்டு டம்ளர் விட்டு, மூடிவைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் சென்றபின் எடுத்து வடிகட்டி பால், சர்க்கரை தேவைக்குச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகித்து வந்தால், கணைச்சூடு நீங்கும். கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும். வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்க பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளைச் சேகரித்து, இதில் உள்ள மகரந்தப் பொடியை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியைப் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண் தன்மை அதிக வலிமை பெறும்.

செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்.

செம்பருத்திப்பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு கிலோ அளவிற்கு ஒரு ஜாடியில் போட்டு, இதில் கால் கிலோ தேன் சேர்த்து 5 கிராம் ஏலப்பொடியையும் இதில் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். பத்து தினங்கள் ஊறியபின் ஒருநாள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தவேண்டும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, எலும்புருக்கி, கல்லீரல் வீக்கம், மேகக் காங்கை, இருதய பலவீனம் நீங்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #50 on: May 07, 2012, 04:42:43 PM »
வறட்டு இருமல்.....


நரையைப் போக்க!

கரிசாலை இலைச்சாற்றை நல்லெண்னை அல்லது தேங்காய் எண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வர, முடி கறுத்துத் தழைத்து வளரும்.

இருமலுக்கு முற்றுப்புள்ளி!

கற்பூரவல்லி இலைச்சாருடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க, இருமல் மாயமாகும்.

உதட்டில் புண்ணா?

பாக்கின் வேரை குடிநீரிலிட்டு வாய் கொப்பளித்துவர உதட்டுப்புண் ஈற்றுப்புண் தீரும்.

பல் கெட்டிப்பட!

பாக்கு கொட்டையைச் சுட்டு சாம்பலாக்கி சம அளவு காசுக்கட்டியும், லவங்கமும் பொடிசெய்து கூட்டிப்பல் துலக்கிவர பல் கெட்டிப்படும்.

வெள்ளைப்படுதலுக்கு குட்-பை!

கற்கடகச்சிங்கியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு நீர் அருந்தினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வறட்டு இருமல் போயே போச்சு!

சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், கற்கடகச்சிங்கி, முழக்காம்பிசின் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துப் பொடித்து 2 கிராம் எடைவீதம் தேனுடன் சேர்த்து கொடுக்க... வறட்டு இருமல் குணமாகும்.

வயிற்றுப்புழுவை ஒழிக்க!

கப்பைக் கிழங்கின் மாவு 130 மி.கிராம் முதல் 260 மி.கிராம் எடை வரை சாப்பிட, வயிறில் உண்டாகும் புழுக்கள் சாகும்.

தாய்ப்பால் அதிகரிக்க!

கலியான முருங்கை இலையை தேங்காய் எண்ணையில் சமைத்துச் சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் அதிகமாய் சுரக்கும். குழந்தைக்கு புட்டிப்பாலே தேவை இருக்காது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #51 on: May 07, 2012, 04:46:23 PM »
வாயு தொல்லை நீங்க...


தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

குடல்புண்: மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

உதட்டு வெடிப்பு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #52 on: May 07, 2012, 04:50:19 PM »
சிறுநீரகங்களை பலப்படுத்தும் புதினா!


கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம்.


அகத்திக்கீரை:

அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

அரைக்கீரை:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது. ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சிறுகீரை:

பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

தூதுவளைக்கீரை:

தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம். விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து.

புதினாக்கீரை:

சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும்.

புளிச்சகீரை:

நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு.

பொன்னாங்கண்ணிக் கீரை:

உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர, கண்களைப்பற்றிய ரோகம் நீங்கும். உஷ்ணமண்டல ரோகம், தேகச்சூடு, மூலரோகம் போகும்.

மணத்தக்காளிக்கீரை:

நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு.

முருங்கைக்கீரை:

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

முளைக்கீரை:

ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது.

முடக்கத்தான் கீரை:

இருமலுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #53 on: May 07, 2012, 04:53:33 PM »
உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்





சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #54 on: May 07, 2012, 05:59:28 PM »
உடல் சூடு தணிய பரங்கிக்காய்




பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.


ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #55 on: May 07, 2012, 06:01:44 PM »
வேனல்கட்டிகள் நீங்க...

வேனல்கட்டிகள் இருந்தால் அதன்மேல் வெள்ளைச் சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள். மிக நல்ல நிவாரணம் தெரியும்.


வேனல் கட்டிகளுக்கு மஞ்ஜிஷ்டா (manjishta) அற்புதமான மருந்து. இதனுடன் ஏலக்காய் இரண்டைக் கலந்து கட்டிகளின் மேல் பற்றுப் போட்டால் நாலைந்து நாட்களில் சரியாகி விடும்.

ஜீரண சக்திக்கு:-

சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #56 on: May 07, 2012, 06:03:18 PM »
அல்சர் குணமாக...

அருகம்புல்லைக் காயவைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

வில்வப்பழத்தின் சதைப் பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

வாழைத் தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு, ஆகியவை வெளியேறும்.

கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆராக்கியமாக இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #57 on: May 07, 2012, 06:05:09 PM »
வாதத்தைத் தணிக்க....




ரத்த சோகை உள்ள, எப்போதும் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்பவர்களுக்கு பலம் தரும் உணவு - வெல்லம்! இவர்கள் பால், டீ, வேறு இனிப்புகள் சாப்பிடும்போது அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை விட வெல்லத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம். அதிலும் ஒரு வருடம் பழசான வெல்லம் கூடுதல் பலம் தரும்.

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #58 on: May 07, 2012, 06:07:13 PM »
நல்ல பசி எடுக்க...

ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.

பித்தம் போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சப்பழ இலையை காயவைத்து அதனுடன் மிளகாய், உப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு எண்ணெயில் வறுத்து, பொடி செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.

லேசான இரும்புக்காயம் பட்டவர்கள் வரமிளகாயை அரைத்து வேப்பெண்ணெய் சேர்த்து வதக்கி சூடான நிலையில் காயம்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து, பின் சிறு அளவு மிளகாயை அதிலேயே வைத்து கட்ட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தால் காயம் ஆறும்.

மூக்கினுள் என்ன காரணத்தால் ரத்தம் வடிய நேர்ந்தாலும், படிகாரத்தைத் தூள் செய்து, தண்ணீரில் கரைத்து மூக்கின் உள்ளும், புறமும் நன்றாகத் தடவினால் ரத்தக் கசிவு நின்றுவிடும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பாட்டி வைத்தியம் ~
« Reply #59 on: May 07, 2012, 06:08:35 PM »
அல்சரை தவிர்க்க...

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.