Author Topic: பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா  (Read 809 times)

Offline thamilan

புரிய‌வில்லை எனக்கு

செலவு செய்தால்
ஊதாரி என்றனர்
சிக்கனமாய் இருந்தால்
கருமி என்றனர்

ஆத்திரப்பட்டால்
முன்கோபி என்றனர்
அடங்கிப் போனால்
கோழை என்றனர்

தெரிந்ததை சொன்னால்
அதிகப் பிரசங்கி என்றனர்
தெரியாது என்றால்
அடிமுட்டாள் என்றனர்

இருக்கிறது என்றால்
பெருமைக்காரன் என்றனர்
இல்லை என்றால்
வேசதாரி என்றனர்

அகப்பட்டுக் கொண்டால்
குற்றவாளி என்றனர்
தப்பித்துக் கொண்டால்
புத்திசாலி என்றனர்

உரக்கப் பேசினால்
அர‌ட்டைக்கார‌ன் என்ற‌ன‌ர்
அட‌க்கி வாசித்தால்
ஊமைக்கோட்டான் என்ற‌ன‌ர்

அடித்துக் கேட்டால்
அராஜ‌க‌மாம்
அட‌ங்கிப் போனால்
கோழையாம்

காத‌ல் பெண்னை கை பிடித்தால்
ஓடுகாலியாம்
கைவிட்டு விட்டால்
காமாந்திர‌க்கார‌னாம்

எதை செய்தாலும்
குறை கூறும்
பைத்திய‌க்கார‌ உல‌க‌ம‌டா இது

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஏசுவையே ஏசோ, ஏசு என ஏசி
பேசிய மோசக்கார உலகம் இது
பேசுவார் பேசட்டும், ஏசுவார்  ஏசட்டும்
உன்கொளகையில் நீ
பிடிப்பாய் இருந்தால் போதும்
தொடர்ந்து முன்னேறு தோழா !
போற்றுவார் போற்றலும் , புழுதி வாரி
தூற்றுவார்   தூற்றலும்
போகட்டும் ஒருவருக்கே !

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
tamizh unmaiyaana varigal......
athanaiyum unmai........

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline gab

உங்கள் கவிதையை படிக்கும் பொழுது "வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இதுதானடா" என்கிற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது . யதார்த்தமான நல்ல கவிதை தமிழன்.

Offline Jawa

Nalla solli irukeenga thamilan machi...... Ithu indha kali ulagathuku mutrilum porundhiya ondru.....