Author Topic: காதல் அஞ்சல் !  (Read 1220 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
காதல் அஞ்சல் !
« on: April 25, 2012, 08:19:51 AM »
என்னவளே ! நல்லவளே !
என்ன எழுதுவேன்  என தெரியாமலே
எழுத துவங்கிவிட்டேன்
எப்படியும் எழுதியே ஆக வேண்டும்
எனும் ஒரு எழுச்சியில்  ...

ஏதோ ! எனக்கு தெரிந்த தமிழை
அரைகுறையாய்,குறை, நிறையாய்
அரை முகமாய்,மறைமுகமாய்
எதேதோ வார்த்தைகள் கொண்டு
வர்ணனை  என்னும் போலி
வர்ணம் பூசி வைத்து
உப்பில்லா உவமைகளை, பெரும்
ஒப்பிலா உவமைகளை போல்
ஒப்புக்கு உபயோகித்து வந்தால் ,
கிட்டத்தட்ட, ஒப்பிட முடியா 
கவிதையினை போல் எப்போதும்
புகழ்ந்துபேசி, வார்த்தைகளுக்கே
மன்றாடும் மக்கு கவிஞ்ஞனை
மன்ற கவிஞன் ஆக்கி விட்டனர்.

உன் நினைவால், கிறுக்கன்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்
எல்லாம்  காதல் கவிதைகளாய் ...

காதல் கவிதையாய் கிறுக்கி தள்ளிய
எனக்கு,காதல் கடிதம் எழுதிட
கூடவில்லை காண்.

இருந்தும் கேட்டது நீ -என்பதால்
இதோ இந்த விஷ பரிட்சை.

காதல்
போலி கூத்தாய்,
கேலி கூத்தாய் பல கண்டும்
சில, கடந்தும் வந்தவன் நான்.

காதல்
வாழ்க்கை நாடகத்தின்
பெரும் பகுதி ,அரும் பகுதி
என காணாமலே, உணரவும்
புரியவும் வைத்த என்
காதல் தேவதை நீ ....

காதல் ஞானம் அற்றவன் நான்
தொலைதூர கல்வி வழி
காதல் கற்று கொடுத்த-என்
காதல் தலைமை ஆசிரியை நீ .....

'காதலுக்கு கண் இல்லை "
காதல் கிட்டாத,ஒட்டாத கபோதிகளின்
கபட கருத்து இது, என்றே கிடந்தேன் .

"உருவமே இல்லாத உன்னத உணர்வு காதல் "
அதற்க்கு எதற்க்கு கண்? என்று ,
அறியாமை கண் திறந்த
என் கண் காணா காதல் நீ ......

காதல்
எட்டிக்காயாய் ,எட்டாக்கனியாய் ,
கிட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
முன்பு

காதல்
கிட்டக்கனியாய்,கிட்டும்கனியாய்,
திகட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
பின்பு

திகட்டா சுவையை ,தித்திக்கும்
சுவையுடன்,இனிக்கும்
வகையினில் இனிக்க இனிக்க
புகட்டிய,பட்டுக்குட்டி நீ...

என்னென்னவோ என்னை செய்து
என்னை ஈர்த்து விட்ட ஆசையின்
ஆசை லேசாய் கூட
தீரா, ஆசை கிழ பட்டி நீ ..

என்னை உனக்கும் உன்னை எனக்கும்
பரஸ்ப்பரம் பிடித்து போனதற்கு
எதார்த்தமான முகாந்திரம் ஏதும் இல்லையே ?
அட முகமே முழுதாய் அறிமுகம் இல்லை
எனும் போது, முகாந்திரம் எப்படியும்
முக்காடிட்டு முகம் மறைத்து தான் இருக்கும்.

சரி முகம் தான் முழுதாய் முழு
முழுதாய் சரணாகதி என்றால் -மரபுகள்
கூட வெறும் மௌனம் தான் காக்கிறது
மௌனம் காக்கும் மரபுகளை கூட
என் முன் மண்டியிட வைக்கமுடியும்
உன்னையும் ,உன் மனதையும் மதிப்பதால்
மரபுகளையும் மதிக்கின்றேன்
மானசீகமாய்.....

பொறுமை என்பது  பொதுவாய் எனக்கு புதிதில்லை
உன் அறிமுகத்திற்கு பின்பு
பொறுமையில் பூமிக்கு போட்டியாய் நான் ....

நினைவு என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போனால்
நிஜத்தில் எத்தனை காதல்
இல்லாமலே போயிருக்கும் !
உன்னை நினைத்துகொண்டிருப்பதில்  தான்
எத்தனை எத்தனை இனிமை !

அப்பொழுதும் இப்பொழுதும், எப்பொழுதும்
முப்பொழுதும் உன்னை நினைப்பேன் !

நினைப்பேன் நினைப்பேன் என்கின்றனரே
அப்படி என்ன தான் நினைப்பார் ??
எனும் கேள்வி எண்ணத்தில்
சுனாமி அலையைபோல் சீறி எழுகிறதா ?

கனவுகளுக்குத்தான் கால நேரம் நிர்ணயம்
நினைவுகளுக்கு என்ன, நித்தம்
நித்தம் நினைக்கவேண்டியது தான் .

சித்திரை நிலவாய், நித்திரையில் நீ
முகத்திரையும் ,மற்ற திரைகளும்   
விலகி இருக்க,
அதைகண்டும் காணாது விட்டு விட்டு
முத்திரையாய் நித்திரை கொள்ளும்
உன் நிலைகளை மொத்தமாக முடியாவிட்டாலும்
ஏதோ கொஞ்சம்  கொஞ்சமாய்
நெஞ்சோரம் நினைத்துகொள்வேன்

உன் நினைவென்னும் நீச்சல் குளத்தினில்
நீங்காமல் நீந்திட  பழகியதால்
வாழ்க்கை கடலில் என்னால்
எதிர் நீச்சலே தடையில்லாமல்  இட முடிகின்றது .

எழுதிய களைப்பினில் ஏதோ நினைவில்
துவக்க வரிகளை படித்து பார்த்தேன் ..
தூக்கி வாரி போட்டது எனக்கு ...


என்ன எழுதுவதென தெரியாமல் துவங்கியவன்
கிட்டத்தட்ட 100   வரிகளையும் கடந்துவிட்டிருக்கின்றேன்

உன்னைபற்றி எழுத வேண்டும் என்றால்
இன்னும்எவ்வளவோ இருக்கின்றது... 
ஆனால், பதிப்பிட பக்கமும் பத்தாது
படிப்பவர்க்கு, பக்குவமும் பத்தாது என்பதால்
இப்போதைக்கு இந்த காதல் கடிதத்தின்
உரைக்கு, இனிமையான உன் நினைவோடு
திரை இடுகிறேன்

                                   என்றும் உன் காதலுடன் !
                                        ஆசை அஜீத்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காதல் அஞ்சல் !
« Reply #1 on: April 25, 2012, 11:45:45 AM »
என்னவளே ! நல்லவளே !
என்ன எழுதுவேன்  என தெரியாமலே
எழுத துவங்கிவிட்டேன்
எப்படியும் எழுதியே ஆக வேண்டும்
எனும் ஒரு எழுச்சியில்  ...

kaathal patri ezhutha ninaikaiyil ezhuchi varuvathu iyarkai thaan.
athuvum kaathaliyai patri ezhuthanumnu sonna sollava venum...

ஏதோ ! எனக்கு தெரிந்த தமிழை
அரைகுறையாய்,குறை, நிறையாய்
அரை முகமாய்,மறைமுகமாய்
எதேதோ வார்த்தைகள் கொண்டு
வர்ணனை  என்னும் போலி
வர்ணம் பூசி வைத்து
உப்பில்லா உவமைகளை, பெரும்
ஒப்பிலா உவமைகளை போல்
ஒப்புக்கு உபயோகித்து வந்தால் ,
கிட்டத்தட்ட, ஒப்பிட முடியா
கவிதையினை போல் எப்போதும்
புகழ்ந்துபேசி, வார்த்தைகளுக்கே
மன்றாடும் மக்கு கவிஞ்ஞனை
மன்ற கவிஞன் ஆக்கி விட்டனர்.

 uppilla, oppilla, oppukku, oppida ena palavaarthaigalai korthu ezhuthum thiramaisaali nee
appadi irunthum etharku makku kavingan endru thannadakamo...!


உன் நினைவால், கிறுக்கன்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்
எல்லாம்  காதல் கவிதைகளாய் ...

காதல் கவிதையாய் கிறுக்கி தள்ளிய
எனக்கு,காதல் கடிதம் எழுதிட
கூடவில்லை காண்.

இருந்தும் கேட்டது நீ -என்பதால்
இதோ இந்த விஷ பரிட்சை.

visha paritchai than nee ezhuthiyathu
ezhuthi irupathu yarukku theriyavillai
aanal kaathaliku enbathu matum vilangugirathu,
ithil vedikai enna vendral kaathal kaditham ketaval avalin mannavanukku ena ninaikiren
nee un unnavalai ninaithu ezhuthi irukiraai....

காதல்
போலி கூத்தாய்,
கேலி கூத்தாய் பல கண்டும்
சில, கடந்தும் வந்தவன் நான்.

kaathalai miga azhagaga solli irukirai
poli koothu aangaangey irunthu konduthan irukirathu
kathal keli koothai aagivida koodathu.......

காதல்
வாழ்க்கை நாடகத்தின்
பெரும் பகுதி ,அரும் பகுதி
என காணாமலே, உணரவும்
புரியவும் வைத்த என்
காதல் தேவதை நீ ....

ulagamey oru nadaga medai athil namellam nadigargal
nadippin oru angamaaga vaazhkaiyil kaathal.....
kaathal......
 sooriyanai kandaal satendru malarum kaathal thevathai thamarai........


காதல் ஞானம் அற்றவன் நான்
தொலைதூர கல்வி வழி
காதல் கற்று கொடுத்த-என்
காதல் தலைமை ஆசிரியை நீ .....

kaathalai  ithai vida azhagai sollivida mudiyathu
paadam solli kudupavar aasaan
kaathalai solli kuduthaal........

'காதலுக்கு கண் இல்லை "
காதல் கிட்டாத,ஒட்டாத கபோதிகளின்
கபட கருத்து இது, என்றே கிடந்தேன் .

"உருவமே இல்லாத உன்னத உணர்வு காதல் "
அதற்க்கு எதற்க்கு கண்? என்று ,
அறியாமை கண் திறந்த
என் கண் காணா காதல் நீ ......

kaathal oru arputhamaana unarvu.......
athai unara mana matum pothum piragetharku kan....


காதல்
எட்டிக்காயாய் ,எட்டாக்கனியாய் ,
கிட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
முன்பு

காதல்
கிட்டக்கனியாய்,கிட்டும்கனியாய்,
திகட்டாக்கனியாய் உன் அறிமுகத்திற்கு
பின்பு

திகட்டா சுவையை ,தித்திக்கும்
சுவையுடன்,இனிக்கும்
வகையினில் இனிக்க இனிக்க
புகட்டிய,பட்டுக்குட்டி நீ...

என்னென்னவோ என்னை செய்து
என்னை ஈர்த்து விட்ட ஆசையின்
ஆசை லேசாய் கூட
தீரா, ஆசை கிழ பட்டி நீ ..

kaathal ettiyavaruku mukkani yai kaatilum suvai athigam...

adaippukurikkul irukum vari patri kavalai pada vendaam.....
(aanal kittathavarku veppangaium ondruthan pungangaayum ondruthaan.....)

என்னை உனக்கும் உன்னை எனக்கும்
பரஸ்ப்பரம் பிடித்து போனதற்கு
எதார்த்தமான முகாந்திரம் ஏதும் இல்லையே ?
அட முகமே முழுதாய் அறிமுகம் இல்லை
எனும் போது, முகாந்திரம் எப்படியும்
முக்காடிட்டு முகம் மறைத்து தான் இருக்கும்.

சரி முகம் தான் முழுதாய் முழு
முழுதாய் சரணாகதி என்றால் -மரபுகள்
கூட வெறும் மௌனம் தான் காக்கிறது
மௌனம் காக்கும் மரபுகளை கூட
என் முன் மண்டியிட வைக்கமுடியும்
உன்னையும் ,உன் மனதையும் மதிப்பதால்
மரபுகளையும் மதிக்கின்றேன்
மானசீகமாய்.....

marabugal mounam kaapathal than athu marabu..
illai yenil athu nijam aagidum ilaya...

பொறுமை என்பது  பொதுவாய் எனக்கு புதிதில்லை
உன் அறிமுகத்திற்கு பின்பு
பொறுமையில் பூமிக்கு போட்டியாய் நான் ....

miga thiramai saali aval unnai porumaisaali aakiya thiramaisaali aval....

நினைவு என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போனால்
நிஜத்தில் எத்தனை காதல்
இல்லாமலே போயிருக்கும் !
உன்னை நினைத்துகொண்டிருப்பதில்  தான்
எத்தனை எத்தனை இனிமை !

அப்பொழுதும் இப்பொழுதும், எப்பொழுதும்
முப்பொழுதும் உன்னை நினைப்பேன் !

நினைப்பேன் நினைப்பேன் என்கின்றனரே
அப்படி என்ன தான் நினைப்பார் ??
எனும் கேள்வி எண்ணத்தில்
சுனாமி அலையைபோல் சீறி எழுகிறதா ?

கனவுகளுக்குத்தான் கால நேரம் நிர்ணயம்
நினைவுகளுக்கு என்ன, நித்தம்
நித்தம் நினைக்கவேண்டியது தான் .

சித்திரை நிலவாய், நித்திரையில் நீ
முகத்திரையும் ,மற்ற திரைகளும்   
விலகி இருக்க,
அதைகண்டும் காணாது விட்டு விட்டு
முத்திரையாய் நித்திரை கொள்ளும்
உன் நிலைகளை மொத்தமாக முடியாவிட்டாலும்
ஏதோ கொஞ்சம்  கொஞ்சமாய்
நெஞ்சோரம் நினைத்துகொள்வேன்

kaathal ninaivugal kadalai vida perithu...
athanaiyum orey nerathil ninaithu paarkka mudinthuduma enna?
appappaa solli adangaatha ninaivugal
kaathalil siru siru nigazhvum ninaivugalthan..athanaiyum ninaithu paarpathenbathu satharana vishayama...

உன் நினைவென்னும் நீச்சல் குளத்தினில்
நீங்காமல் நீந்திட  பழகியதால்
வாழ்க்கை கடலில் என்னால்
எதிர் நீச்சலே தடையில்லாமல்  இட முடிகின்றது .

unmaithaan ninaivu nechal kanavu nichal endraalum athu etir neechal podum alavuku thairiyam kudukkum...

எழுதிய களைப்பினில் ஏதோ நினைவில்
துவக்க வரிகளை படித்து பார்த்தேன் ..
தூக்கி வாரி போட்டது எனக்கு ...

என்ன எழுதுவதென தெரியாமல் துவங்கியவன்
கிட்டத்தட்ட 100   வரிகளையும் கடந்துவிட்டிருக்கின்றேன்

உன்னைபற்றி எழுத வேண்டும் என்றால்
இன்னும்எவ்வளவோ இருக்கின்றது...
ஆனால், பதிப்பிட பக்கமும் பத்தாது
படிப்பவர்க்கு, பக்குவமும் பத்தாது என்பதால்
இப்போதைக்கு இந்த காதல் கடிதத்தின்
உரைக்கு, இனிமையான உன் நினைவோடு
திரை இடுகிறேன்

iruthi varai padithu paarkavey neram potha villai....
unnal ivalavu neelamaana kathal kaditham adengappa yaralum mudiyathu....
azhagaana kathal anjalthaan...
pattu pondra pon aanjali
intha kavithaanjali....

                               

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காதல் அஞ்சல் !
« Reply #2 on: April 25, 2012, 12:06:28 PM »
ஆஹா !
என் வரிகள் இத்துனை அழகென்பதே-இப்படி
அடிக்கோடிட்டு  வரிவரியாய்  விமர்சிக்கும்போதுதான்
வெட்ட வெளிச்சம் ஆகின்றது ...

உன் பதிலில் எனக்கு மன நிறைவு...
ஒரே ஒரு சிறு குறை நீங்கலாக !

வாய்ப்பளித்தால்  குறையையே கோரிக்கையாய்
சமர்பிப்பேன் !


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காதல் அஞ்சல் !
« Reply #3 on: April 25, 2012, 01:44:52 PM »
Quote
ஒரே ஒரு சிறு குறை நீங்கலாக !

வாய்ப்பளித்தால்  குறையையே கோரிக்கையாய்
சமர்பிப்பேன் !

kurai  ondraa puriyavillai
ethil kurai, engu kurai theriyavillai
niraivaai solliviten enbathai thavira
kurai illai endru karuthinen,
athil kurai irukumaayin
akkurai patri thella thelivaaga vilakku
thiruthi kolgiren.....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காதல் அஞ்சல் !
« Reply #4 on: April 25, 2012, 01:52:31 PM »
குறைதான்  குறைதான் ஆனால்
அது உன் குறை இல்லை 

என் மனக்குறை அது -அதை தான்
நிறையாக இல்லாவிட்டாலும்
ஒரு அளவிற்கு சொல்ல காத்திருகின்றேன்.

Offline supernatural

Re: காதல் அஞ்சல் !
« Reply #5 on: April 26, 2012, 12:59:20 PM »
"என்னவளே ! நல்லவளே !
என்ன எழுதுவேன்  என தெரியாமலே
எழுத துவங்கிவிட்டேன்
எப்படியும் எழுதியே ஆக வேண்டும்
எனும் ஒரு எழுச்சியில்  ..."


எழுச்சியில்  துவங்கிய  உங்கள்  வரிகளை ஆவலாய்  படிக்க  துவங்கினேன் நானும்  மிகுந்த  எதிர்பார்ப்புடன் ....

"உன் நினைவால், கிறுக்கன்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்
எல்லாம்  காதல் கவிதைகளாய் ..."

கிறுக்கல்களே இத்தனை அருமை  என்றால் .....கவிதைகள்  அருமையிலும்  அருமையாய்  இருக்குமே ??

"காணாமலே, உணரவும்
புரியவும் வைத்த என்
காதல் தேவதை நீ ...."

காதலை  உங்களுக்கு  புரியவைதாளோ  உங்கள்  தேவதை ??எனக்கு  என்னமோ  உங்க  கிட்ட  இருந்து  தான்  காதலை  உணர்ந்திருப்பாள் உங்கள்  தேவதைனுதான் தோணுது ... ;)

 .

"உருவமே இல்லாத உன்னத உணர்வு காதல் "
அதற்க்கு எதற்க்கு கண்?"

என்ன  அற்புதமான  வரிகள்  .... பல  காதலர்களும்   உணரவேண்டிய  உன்னதமான.... உயர்வான... உணர்வான  வரிகள்  இவை ..


"திகட்டா சுவையை ,தித்திக்கும்
சுவையுடன்,இனிக்கும்
வகையினில் இனிக்க இனிக்க
புகட்டிய,பட்டுக்குட்டி நீ..."

அழகா கொஞ்சவும் செய்றீங்களே...

"என்னென்னவோ என்னை செய்து
என்னை ஈர்த்து விட்ட ஆசையின்
ஆசை லேசாய் கூட
தீரா, ஆசை கிழ பட்டி நீ .."

பட்டு குட்டி சேரி...இதென்ன "  கிழ பட்டி நீ .." ??

பொறுமை என்பது  பொதுவாய் எனக்கு புதிதில்லை
உன் அறிமுகத்திற்கு பின்பு
பொறுமையில் பூமிக்கு போட்டியாய் நான் ....


உங்கள் அஞ்சலில் என்னை ஈர்த்த.. நான் மிகவும் ரசித்த அழகான வரிகள் இவை...  பொறுமையை இவளோ  அழகா யாராலும் வெளிபடுத்த முடியாது...

"கனவுகளுக்குத்தான் கால நேரம் நிர்ணயம்
நினைவுகளுக்கு என்ன, நித்தம்
நித்தம் நினைக்கவேண்டியது தான் ".


உண்மையான வரிகள் ...நினைவுகளுக்கு  கால  நிர்ணயம்  இல்லாம  இருக்குறதுனால  தான்  பிரச்சனைகள்   பல  இருக்கும்  சமயத்திலும்  இனிமையான  நினைவுகளை  நினைவு  படுத்தி  மன்ம் ஆறுதல்  அடையுது ...

"உன்னையும் ,உன் மனதையும் மதிப்பதால்
மரபுகளையும் மதிக்கின்றேன்
மானசீகமாய்....."

தங்கள் அன்பின் ஆழத்தின் ஆழத்தை விளக்கும் வரிகள்....


"உன் நினைவென்னும் நீச்சல் குளத்தினில்
நீங்காமல் நீந்திட  பழகியதால்
வாழ்க்கை கடலில் என்னால்
எதிர் நீச்சலே தடையில்லாமல்  இட முடிகின்றது ."

தங்கள் 
காதலியின்  நேனைவுகளுக்கி  இதனை  வலிமையா ??? aatchiriyamaana  விஷயம்  தான்
..


"உன்னைபற்றி எழுத வேண்டும் என்றால்
இன்னும்எவ்வளவோ இருக்கின்றது...
ஆனால், பதிப்பிட பக்கமும் பத்தாது
படிப்பவர்க்கு, பக்குவமும் பத்தாது என்பதால்
இப்போதைக்கு இந்த காதல் கடிதத்தின்
உரைக்கு, இனிமையான உன் நினைவோடு
திரை இடுகிறேன்"


விட்டா  ஒரு  புத்தகமே எழுதிடுவீங்க போல?? ;)

.உணர்வுபூர்வமான காதல் அஞ்சல்.. ..இவளோ அழாக காதலின் மேன்மையே ..உணர்வை  வெளிபடுத்திருகீங்க...
அதும் உங்கள் இனிமை தமிழில் படிக்க ..அஞ்சலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது..


"என் மனக்குறை அது -அதை தான்
நிறையாக இல்லாவிட்டாலும்
ஒரு அளவிற்கு சொல்ல காத்திருகின்றேன்."

மனதின் குறை என்னவோ??



« Last Edit: April 28, 2012, 11:30:16 AM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!