இசைத்தென்றல் நிகழ்ச்சியின் தரத்தினை தங்கள் திறமையால் தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருக்கும் நம்ம RJs & DJs கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'சாயாலி'
திரைப்படம்: அடங்க மறு (Adanga Maru - 2018)
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ் (Sam C.S.)
பாடகர்கள்: டி. சத்யபிரகாஷ் மற்றும் சின்மயி (D. Sathyaprakash & Chinmayi Sripada)
பாடலாசிரியர்: சாம் சி.எஸ் (Sam C.S.)
திரைப்பட நடிகர்கள்: ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா (Jayam Ravi & Raashi கன்னா
பிடித்த வரிகள் : நீயில்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை ..
கூடவே நீ வர கூறு நீயும் யோசனை ..
தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம் கூதல் கூடும் வேளையில்..
இந்த 'சாயாலி' அப்படிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? 'எனக்கு அடைக்கலம் தந்தவள்' இல்லனா 'நான் சாய்ந்திருக்கும் தோள்'னு அர்த்தம்; இதைக் கேக்குறப்பவே ரொம்ப அழகா இருக்குல? இந்த தூய தமிழ் வார்த்தையைத் தேடிப்பிடிச்சு, அதுக்கு ஏத்த மாதிரி மென்மையான வரிகளையும் அவரே எழுதி அசத்தியிருந்தார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சாம் சி.எஸ் - சத்யபிரகாஷ் - சின்மயி ஆகிய மூவரோட அந்த 'hit combination ' ஒண்ணா சேர்ந்து கொடுத்த ஒரு pure melody காவியம்தான் இந்த பாட்டு. படம் முழுக்க விறுவிறுப்பான Action போய்ட்டு இருக்கும்போது, நடுவுல வர்ற இந்த ஒரு பாட்டு மட்டும் காதலோட ஆழத்தையும், ஒரு அமைதியான உணர்வையும் நமக்குள்ள கடத்திரும்.
https://youtu.be/DYFORxnDHX8?si=SPStg9Qmm4wzy4Wg