"பரத நாட்டிய கலையைப்
போற்றுவோம்"
கலைகளில் மிகச் சிறந்தது
பரதநாட்டியம்!
காண்போரின் கண்களுக்கு
விருந்தளிக்க கூடியது
பரதநாட்டியம்!
ப-பாவம் ,ர-ராகம்,த-தாளம்
மூன்றையும் தன்னகத்தே
கொண்டது பரதநாட்டியம்
நவரசங்கள், முகபாவணைகள்
கொண்டு வந்து, தாளத்திற்கு ஏற்ப
ஆடிடுவர் பரத நாட்டியம்!
பண்டைய காலத்தில் உருவான
கலைகளில் ஒன்று பரதநாட்டியம்!
இன்றும் போற்றி பாதுகாக்கப்படும்
கலையும் இதுவே...
பார்வையாளர்களை கவர்ந்து பரவசப்படுத்தும் பரதநாட்டியம்!
உடல் அசைவுகளும்,
கை முத்திரைகளையும் சேர்த்தது
இந்த பரதநாட்டியம்
பாடல், நட்டுவாங்கம்,
இசைக்கருவிகளின் துணை கொண்டு
ஆடப்படும் பரதநாட்டியம்!
ஆண்,பெண் என்ற பாகுபாடின்றி
ஆடப்பட்டு வருகின்றது பரதம்!
நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள்,நகைகள் அணிந்து...
காலில் சலங்கை பூட்டி...
சிகை வண்ணமாக அலங்கரிக்கப்பட்டு
கூந்தல் பின்னலிடப்பட்டு
பூமாலைகள் சூட்டப்பட்டு
நுனியில் குஞ்சம் தொங்கவிடப்பட்டு...
ஆடிடுவர் இரசனையான பரதத்தினை...
பார்ப்போர் கண்களுக்கு
விருந்தளிக்கும் இந்த காட்சி....
சிந்தனைகளை சிதறவிடமால் ஒருங்கிணைந்து இறைவனோடு பேசும்மொழி பரதக்கலை!
இசைக்கலைஞர்கள் மேடையின்
ஒருபுறமாக அமர்ந்து இசைக்க,
நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடி மகிழ்விப்பது
நாட்டியக் கலையின் சிறப்பு!
பரதம் கற்பதற்கு சாதி ,மதம்,
இனம், மொழி எதுவும்
தேவை இல்லை....
மன ஒருமைப்பாடும், புன்னகையும்
போதுமே....
பரதத்தின் ஒவ்வொரு அசைவின்
பின்னால் ஒவ்வொரு
கருத்து புலப்படும்!
ஐந்து வயதில் என் தாத்தா
என் கால்களுக்கு சலங்கை சூட்டி ,
பரதம் ஆட வைத்து இரசித்தது தான்
என்னை பரத கலை கற்கத் தூண்டியது!
சிறுவயதில் கால் சலங்கையின்
" ஜல் ஜல்" ஒலியும்....
மிருதங்கத்தின் "தத் தகிட "
தாளக்கட்டு ஒலியும் என்னை
பரதம் ஆட வைத்தது
முக பாவனை நவரசத்துடன்...
பரதம் என்பது உடலுக்கு மட்டும்
உடற்பயிற்சி அல்லாமல்
மனதுக்கு புத்துணர்ச்சி தரும்
ஒரு அரிய கலை...
நாட்டியக்கலை பயில்வதால்
பெருகிடும் ஞாபக சக்தி!
சைவசமயத்தின் முழுமுதல்
கடவுளான சிவனின் நடராஜ "திருத்தாண்டவம்" சிறப்பிக்கின்றது
நாட்டிய கலையை...
பரதநாட்டியத்தை ஆடத்தொடங்கும்
முன் ஆடப்படுகிறது நமஸ்காரம்!
பரதநாட்டிய நிகழ்ச்சியை
நெறிப்படுத்திடுவார் "நட்டுவ ஆசான்"
வாயால் சொல்லும் சொற்கட்டுக் கோவைகள், கைத்தாள ஒலியினால் "நட்டுவாங்கம்" பண்ணி
பரத நாட்டியத்தை அரங்கேற்றிடுவார்
ஆசான்கள்...
அறுபத்து நான்கு கலைகளில்
ஒன்று நாட்டியக் கலை!
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஒரு வாழ்நாள் மைல்கல்..
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல..
பல்லாண்டுகள் நீண்ட
கடினப் பயிற்சியின் பலனாக
உருவாகும் ஒரு கலை விழா!
தாளம், பாவம், அசைவுகள்
அனைத்தும் ஒருங்கிணைந்து,
தமிழ் சொற்களின் உள் அர்த்தத்தை சிதைக்காமல் முகபாவங்களோடு வெளிப்படுத்துவது மிகக் கடினமான ஒன்று.
நீண்ட காலப் பயிற்சி, பொறுமை, அர்ப்பணிப்பு மூலமே சாத்தியமாகும்
பரத நாட்டிய அரங்கேற்றம்!
பரத நாட்டிய கலையை
நான் பயின்றது என் மனதுக்கு
மிகவும் மகிழ்ச்சி...
பரத நாட்டிய கலையைப் போற்றுவோம்!
வளரும் குழந்தைகள் பரத நாட்டிய கலையைப் பயில வழி வகுப்போம்!