Author Topic: என் கிறுக்கல்கள்!!  (Read 344 times)

Offline Shreya

என் கிறுக்கல்கள்!!
« on: February 10, 2026, 01:34:13 AM »
உன் மௌனமே பதிலாகக் கிடைக்கும்போது,
அன்பை எதிர்பார்ப்பவள் என்னவோ முட்டாளோ?
« Last Edit: February 10, 2026, 01:35:45 AM by Shreya »

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #1 on: February 10, 2026, 01:36:24 AM »
கொதிக்கும் புனலை எடுத்து - என்
துடிக்கும் இதயத்தின் மேல் ஊற்றுகிறேன்!
இப்போதாவது நீ அழிந்துவிட மாட்டாயா?

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #2 on: February 10, 2026, 01:37:17 AM »
என் இதயமே என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது...
இன்னும் எத்தனை முறை தான் - நீ
தோற்றுப் போவாய்? என வினவி!

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #3 on: February 10, 2026, 01:38:16 AM »
பேரன்பு வேறு, பேராசை கொண்ட காதல் வேறு...
இதை எப்போதுதான் நீ புரிந்து ​கொள்வாய்??

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #4 on: February 10, 2026, 01:40:39 AM »
நித்தம் நித்தம் சிதைப்பதைத் தவிர்த்து,
மொத்தமாய் என்னைக் கொன்று முடித்துவிடு!

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #5 on: Today at 12:26:10 AM »
கோபம் உன்னைக் கொல்லும் என்றார்கள்,
ஆனால் அன்பும் அதையேதான் செய்கிறது!

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #6 on: Today at 12:30:39 AM »
பெண்..

​"இவளைத் தான் உடைப்பார்கள்"
"இவளைத் தான் சிதைப்பார்கள்"
"இவளைத் தான் அழவைப்பார்கள்"
"இவளைத் தான் விழவைப்பார்கள்"

​எதனால்?
​இவள் இன்னமும் சிறுபிள்ளை போல் அவளது இயல்பில் இருப்பதால்தானோ என்னவோ!!

Offline Shreya

Re: என் கிறுக்கல்கள்!!
« Reply #7 on: Today at 12:41:32 AM »
தனிமை..

​புரியாத புதிர் போல நீயும், புரிந்தும்
புரியாதது போல உன் வார்த்தைகளும்...
உன் மௌனத் திரைக்குப் பின்..
என்னை சிறைவைக்கிறாய்!!