Author Topic: Plani paatha yathirai Sandra kathai  (Read 1 times)

Online Sethu

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Plani paatha yathirai Sandra kathai
« on: January 22, 2026, 09:58:45 PM »
நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு மாத காலம் விரதம் இருந்து பழனிக்கு நடந்து சென்று பழனி முருகனை தரிசிப்பது வழக்கம் .அவ்வாறு செல்லும் போது தினம்தோறும் சில விதிமுறைகள் .விதிமுறைகளை பின்பற்றி  இறை வழிபாடு செய்ய வேண்டும்.
      தினமும் அந்த விதிமுறைகள் என்னவென்றால் காலை நேரத்தில் மிக வேகமாக தூங்கி எழ வேண்டும். பின்  குளித்துவிட்டு இறைவனை வழிபட வேண்டும் .அதேபோல் மாலையிலும் குளித்து இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடல் சுறுசுறுப்பாகவும் மனதில் தெளிவான சிந்தனையும் கிடைக்கும்.
      அந்த நாள் முழுவதும் மிக மகிழ்ச்சியாகவும் ,மிகச் சிறப்பாகவும் இருக்கும். இவ்வாறு ஒரு மாத காலம் விரதம்  இருந்து நானும் எனது நண்பர்களும் பழனி பாதயாத்திரை செல்வோம். இதைப் போல  போன ஆண்டு இறுதியிலும் பாதயாத்திரை செல்ல தயாரானோம் .
      நானும் எனது நண்பர்களும் அப்படி தயாராகும் போது, எனது  தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று செல்ல தயாரானேன். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் போது என் நண்பர்களுடன் நகைச்சுவை செய்து கொண்டு முருகன் பாடல்கள் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு மிக மகிழ்ச்சியோடு செல்வோம் .அப்படி காட்டின் வழி செல்லும் போது வழியில் நிற்கும் கல் கூட பூவாக தெரியும் அதிசயம் .அதிசயத்தை நானும் எனது நண்பர்களும் உணர்வோம்.   சாலையோர இருபுறமும் கண்ணுக்கு அழகான பூக்களும் ,பட்டாம்பூச்சிகளும் அங்கும் இங்கும் ஓடுவது  மிக அழகாக இருக்கும் .அதனை கண்டு கொண்டேன்.   
      எங்கள் பாதயாத்திரை நாங்கள் தொடர்வோம் மிக மகிழ்ச்சியாக ....எங்கள் கிராமத்தில் இருந்து பழனிக்கு 120 கிலோமீட்டர் தூரம் ஆகும் .ஒரு நாள் ஒன்றுக்கு 40 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் காலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வெடுப்போம் .அதேபோல் மாலையில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற பின் ஓய்வு எடுப்போம் .இவ்வாறு எங்கள் பாதயாத்திரை மூன்று தினமாக தொடரும்.   
     இவ்வாறு நடந்து செல்லும் போது நானும் எனது நண்பர்களும் கோயில்களில்  அன்னதானம் இருக்கும். அந்தக் கோயில்களில் அமர்ந்து மிக மகிழ்ச்சியாக உணவுகளை சாப்பிட்டு மகிழ்வோம். இவ்வாறு செல்லும் போது கிடைக்கும் தின்பண்டங்களை நானும் எனது நண்பர்களும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டே எங்கள் பாதயாத்திரை தொடர்வோம். இவ்வாறு செல்வதினால் கால் வலி தெரியாது .நண்பர்களுடன் நடந்து செல்லும் மகிழ்ச்சி மட்டுமே மனதில் நிற்கும் . 
    எப்பொழுது இந்த நாள் வரும் என்று காத்துக்  கொண்டிருப்போம் .எங்கள் கிராமத்தில் நாங்கள் இவ்வாறு மூன்றாம் நாள் முடிவில் பழனியை சென்றடைவோம். பிறகு நண்பர்களோடு பழனி மலையில் அமர்ந்திருக்கும் முருகனை தரிசித்து முருகனின் அருளை பெறுவோம். பிறகு அம்மா அப்பா கொண்டு வந்திருக்கும் வாகனத்தில் அமர்ந்து எங்கள் கிராமத்தை சென்றடைவோம். அங்கு எங்கள் வீட்டில் உணவுகளை சமைத்து முருகனுக்கு விரதத்தை முடிப்போம்.இது எனக்கு மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்....