பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஆபாவாணன்
இசையமைப்பாளர் : மனோஜ் – கியான்
ஆண் : தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா….
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா….
ஆண் : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா….
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா……
ஆண் : தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா….
ஆண் : விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
ஆண் : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…..
குழு : உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…..
ஆண் மற்றும் குழு :
தோல்வி நிலையென நினைத்தால்….
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா….
குழு : விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
ஆண் : யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா…
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா…..
குழு : உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா….
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…
ஆண் மற்றும் குழு :
யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா…..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா….