Author Topic: வரலாற்றில் இன்று 03 அக்டோபர்  (Read 124 times)

Offline RajKumar

*வரலாற்றில் இன்று*
*03 அக்டோபர் 2025-வெள்ளி*
*===========================*

1392 : ஏழாம் முகம்மது கிரனாடாவின் பன்னிரண்டாவது சுல்தானாக முடிசூடினார்.

1831 : மைசூர், கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1833 : இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

1908 : பிராவ்தா பத்திரிகை ரஷ்யத் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக வியன்னாவில் இருந்து வெளியிடப்பட்டது.

1912 : அமெரிக்கப் படைகள் நிகரகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

1918 : மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னராக முடிசூடினார்.

1929 : செர்பியா, குரோஷியா ஸ்லோவேனியா ராஜ்ஜியம் இணைக்கப்பட்டு அதற்கு யூகோஸ்லோவியா எனப் பெயரிடப்பட்டது.

1932 : ஈராக், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1935 : இத்தாலி, எத்தியோப்பியா மீது படையெடுத்தது.

1940 : வார்ஸாவில் உள்ள யூதர்கள் மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

1942 : ஜெர்மனியில் ஏ 4 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெஸ் கிராமத்தில் பொதுமக்கள் 92 பேரைக் கொன்றனர்.

1952 : லாஸ் ஏஞ்செல்ஸில் வீடியோ கேசட் மூலம் முதன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

1957 : விவித்பாரதி நிகழ்ச்சிகள் முதன் முதலாக ஒலிபரப்பானது.

1962 : சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வொல்லி சீரா 9 மணி நேரத்தில் 6 முறை பூமியைச் சுற்றினார்.

1963 : ஹொண்டுராஸில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியால் அங்கு ராணுவ ஆட்சி ஆரம்பமானது.

1963 : ஹெயிட்டியில் சூறாவளித் தாக்கியதில் 5,000 பேர் இறந்தனர்.
ஒரு லட்சம் பேர் காயமடைந்தனர்.

1974 : கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1977 : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

1978 : பின்லாந்தில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்தனர்.

1981 : வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரிஷ் குடியரசு ராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது.
10 பேர் உயிரிழந்தனர்.

1982 : ஸ்வாஸிலாந்தின் மன்னராக 11 வயது நிரம்பிய இளவரசர் மக்கோஸ்மிவா முடிசூட்டப்பட்டார்.

1989 : பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1993 : சோமாலியாவில் ஆயுதக் குழுவினரை பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர் வீரர்களும் ஆயிரம் சோமாலியர்களும் கொல்லப்பட்டனர்.

2010 : 19 வது காமன்வெல்த் விளையாட்டு டெல்லியில் தொடங்கியது.

2012 : சிரியாவின் அலெப்போவில் நடை பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

2013 : இத்தாலியின் லம்பேடுசா தீவில் ஆப்ரிக்க குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

2015 : ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மருத்துவமனை மீது நடந்த விமானத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

Offline RajKumar

*வரலாற்றில் இன்று*
*18 அக்டோபர் 2025-சனி*
*===========================*

1009 : ஜெருசலேமில் புனித செபுல்கர் கிறிஸ்தவ தேவாலயம் கலிபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

1356 : சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றிலும் அழிந்தது.

1648 : அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் ஷூ தயாரிப்பாளர்கள் ஆரம்பித்தனர்.

1748 : ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

1860 : இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது.

1867 : ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா மாநிலத்தை அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1898 : புவெர்ட்டோ ரிக்கோவை ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்காக் கைப்பற்றியது.

1922 : பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1944 : சோவியத் ஒன்றியம் செக்கோஸ்லோவேகியாவை முற்றுகையிட்டு நாஜி ஜெர்மனியிடம் இருந்துக் கைப்பற்றியது.

1945 : வெனிசுலாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அதன் ஜனாதிபதி பதவி இழந்தார்.

1954 : அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்ஸிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

1960 : பிரிட்டிஷ் செய்தித்தாளான நியூஸ் க்ரோனிக்கல், டெய்லி மெயில் உடன் இணைந்தது.
லண்டன் மாலை செய்தித்தாளான ஸ்டார், தி ஈவினிங் நியூஸ் உடன் இணைந்தது.

1963 : பெலிசேட் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை என்ற பெயரை பெற்றது.

1967 : சோவியத் விண்கலம் வெனீரா -4 வெள்ளிக் கோளை அடைந்தது.
வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1991 : தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அஜர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

2004 : சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரால் கொல்லப்பட்டார்.

2007 : கராச்சியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
450 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பூட்டோ காயமின்றி உயிர் தப்பினார்.