Author Topic: ஹைக்கூ கவிதைகள்  (Read 114 times)

Offline Thooriga

ஹைக்கூ கவிதைகள்
« on: September 26, 2025, 05:35:57 PM »
கண்ணகி மாதவி ஆவதும்

மாதவி கண்ணகி ஆவதும்

கட்டிய கணவன் நடத்தையை பொறுத்தே
« Last Edit: September 26, 2025, 05:40:22 PM by Thooriga »

Offline Thooriga

Re: ஹைக்கூ கவிதைகள்
« Reply #1 on: September 26, 2025, 05:40:03 PM »
அவளை அடங்காபிடாரி என்றனர்

அவள் அம்மா அனைவர்க்கும் அடங்குவதை பார்த்த ஆத்திரமே  அவளை அடங்க விடவில்லை என்பதை அறியாமல்

Offline Thooriga

Re: ஹைக்கூ கவிதைகள்
« Reply #2 on: September 27, 2025, 02:33:18 PM »
இன்னொருத்தி வந்து விடுவாளோ என்று பயந்தேன்


அவன் கதையில் நானே இன்னொருத்தி தான் என்பதை மறந்து

Offline Thooriga

Re: ஹைக்கூ கவிதைகள்
« Reply #3 on: September 27, 2025, 02:36:17 PM »
எதிர்த்து பேசக்கூடாது ...

எதிர்த்து பேசக்கூடாது ...

என சொல்லிச் சொல்லி அடக்கிய சமூகம் தான் ..

அவள் செத்த பிறகு சொல்கிறது

யாரிடமாவது ஒரு வார்த்தை

சொல்லியிருக்கலாமே என்று...

Offline Thooriga

Re: ஹைக்கூ கவிதைகள்
« Reply #4 on: Today at 04:26:02 PM »
நம்பியவனே விற்றுப் போகையில்....

அறிமுகம் இல்லாதவன் அறுப்பதில்....

என்ன ஆச்சரியம்...?

(சந்தையில் விற்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியின் மன குமுறல்)