Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
முறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: முறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை... (Read 20 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224514
Total likes: 28242
Total likes: 28242
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
முறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை...
«
on:
September 12, 2025, 08:41:15 AM »
பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.
பிரண்டையின் சமஸ்கிருத பெயர், அஸ்திசம்ஹரகா. இதன் பொருள் எலும்புகளை பிணைப்பது என்பதாகும். பிரண்டை சாற்றை தினமும் இரண்டு முறை 20 மிலி பருகுவதால் எலும்பு முறிவிற்கான சிகிச்சை விகிதத்தை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. மேலும் எலும்புத் தாது அடர்த்தி குறைவு, எலும்புத் துளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் எலும்பு வலிமையை மறுசீரமைக்க உதவுகிறது. பிரண்டை தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெளிப்புறம் தடவுவதாலும், மேலே கூறிய எலும்பு வலிமை அதிகரிக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுகிறது. பிரண்டையின் இலை மற்றும் தண்டின் சாற்றை எடுத்து பல்வேறு நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்து தயாரிப்பில் பிரண்டையின் தூள் சேர்க்கப்படுகிறது.
கெட்டோஸ்டீராய்டுகள், ஃப்ரீடீலின் , ரெஸ்வெராட்ரோல் மற்றும் குவாட்ரங்கொலரின் A ஆகியவற்றை முக்கிய உயிர் வளியேற்றக் கூறுகளாகக் கொண்டிருக்கின்றன. 100 கிராம் பிரண்டையில் 327மிகி வைட்டமின் சி மற்றும் 696மிகி வைடமின் ஈ சத்து உள்ளன. பிரண்டையின் எதனால் சாற்றில் 2.5% ஃப்ரீடீலின் உள்ளது. பிரண்டையின் மெதனால் சாற்றில் ஸ்டிமஸ்டேரால் 0.47%, β-சிட்டோஸ்டீரோல் 1.15% உள்ளன.
மருத்துவ தன்மைகள்:
எலும்பு முறிவு விகிதத்தை குணப்படுத்த ஊக்குவிக்கிறது எலும்புகளையும் மூட்டுகளையும் வலிமையாக்குகிறதுஎலும்பு அடர்த்தியை மீட்க உதவுகிறதஒரு சிறந்த வலி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது
குறிப்பாக எலும்புகளுக்கு சிறந்த அனபாலிக் துணையாக உள்ளது. இரத்தம் தேங்கு நிலை – இரத்தப்போக்கை சரிபார்க்க உதவும்மூல நோய்க்கு எதிரி – இரத்தப்போக்கு கொண்ட மூல நோய்க்கு சிறந்த நன்மையைத் தரும்.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
கல்லீரல் சேதத்தை தடுக்க உதவும் ஆற்றல் பெற்றது.குடற்புழுக்களை அகற்றும் தன்மை கொண்ட அல்லது புழுக்கொல்லியாக உள்ளது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. பாலுணர்வைத் தூண்டுகிறது.
பிரண்டை சாற்றை மிக அதிக அளவில் கொடுக்கும்போது, நரம்புகள் மற்றும் தசைகளை அமைதி படுத்தும் ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது.
சிகிச்சை அறிகுறிகள்:
1. எலும்பு முறிவு
2. எலும்பு தாது அடர்த்தி குறைபாடு
3. எலும்புப்புரை கீல்வாதம் விளையாட்டு வீரர்களின் அதீத பயிற்சி காரணமாக உண்டாகும். மூட்டு வலிகுருதியில் யூரிக் அமில மிகைமை குழந்தைகளுக்கு உண்டாகும் எலும்பு நோய் (கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாதிரிகளுடன் சேர்த்து இதனை பயன்படுத்தலாம். – எலும்பு வலிமை மற்றும் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
எடை இழப்பு (உடல் பருமன்) – அடிவயிற்று கொழுப்பு, மத்திய உடல் பருமன், இடுப்பு, வயிறு, பிட்டம் மற்றும் மேல் தொடைகள் ஆகியவற்றின் அதிக எடையை ஆகியவற்றைக் குறைப்பதற்காக முக்கியமாக நன்மை பயக்கும்உட்புற இரத்தப்போக்குமூல நோய் – குறிப்பாக இரத்தப்போக்கு கொண்ட மூல நோய்செரிமான மேம்பாடுகிரந்தி நோய்மாதவிடாய் மிகைப்புபல்லீறு குருதிக் கசிவு மற்றும் பற்குழி வீக்கம்
பிரண்டையின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகள்:
பிரண்டை, எலும்புகள், மூட்டு, தசைநார்கள், மற்றும் தசைகள் மீது வலுவான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது முதன்மையாக இந்த கட்டமைப்புகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
எலும்பு முறிவு :
இது எலும்பு முறிவிற்குரிய நுண்ணுயிர் செயல்முறையை முடுக்கி எலும்பு முறிவு. சிகிச்சைமுறைக்கு உதவுகிறது. இது எலும்பு மறுசீரமைப்பு விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் எலும்புக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பை மேம்படுத்துகிறது. இது எலும்பு திசு உட்செலுத்துதல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றைக் காப்பதுடன், எலும்பு உயிரணு பெருக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
இந்த சிகிச்சைக்கு ஆயுர்வேதத்தில் லக்ஷாதி குகுலு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் பிரண்டை. அபா குகுலு மற்றும் காந்த தைலத்துடன் இணைத்து இதனை சிகிச்சைக்கு பயன்படுத்துவார்கள். பிரண்டையின் புதிதாக எடுக்கப்பட்ட சாற்றில் எலும்பு முறிவை குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள், இந்த பிரண்டை சாற்றை பசும்பால் அல்லது பசு நெய்யுடன் கலந்து தினமும் இரண்டு முறை 20மிலி அளவு கொடுத்து எலும்பு முறிவிலிருந்து வேகமான நிவாரணத்தை பெற உதவுகின்றனர். புதிய மூலிகை கிடைக்கவில்லை என்றால், அதன் நீர் கலந்த சாறு அல்லது தூள் பயன்படுத்தப்படலாம்.
பிரண்டையின் இலை மற்றும் தண்டில் தயாரிக்கப்பட்ட விழுதை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தடவுவதால் விரைந்த நிவாரணம் கிடைக்கிறது. எலும்பு முறிவிற்கான சிகிச்சைகள் இல்லாத காலகட்டத்தில் இந்த முறை மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த காலகட்டதில், எலும்பு சீரமைக்கபட்டவுடன், இந்த விழுதை முறிவு ஏற்பட்ட பகுதியில் தடவி, சுத்தமான துணியால் மூடி, ஒரு குச்சி கொண்டு கட்டி வைத்து விடுவார்கள்.
எலும்புப்புரை:
எலும்புப்புரைக்கான சிகிச்சையில் இந்த மூலிகை சிறந்த விதத்தில் உதவுகிறது. எலும்பு வலிமையை அதிகரித்து எலும்பு அடர்த்தியை மீட்க உதவுகிறது. எலும்புகளில் தாதுக்களை அதிகரித்து , தாது முடிச்சுகளை உருவாக்க உதவுகிறது. எலும்பு உயிரணு பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. எலும்பு தாது அடர்த்தியை அதிகரித்து, எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது.
ஆயுர்வேதத்தில் பிரண்டை தூளை, கோதான்தி பஸ்மா, முக்தசுக்தி பஸ்மா, ப்ரவல் பஸ்மா, குக்குதந்தத்வக் பஸ்மா, அப்ரக் பஸ்மா, யஷத் பஸ்மா, ஆம்லா, அர்ஜுனா, அஸ்வகந்தா போன்றவற்றுடன் இணைத்து பயன்படுத்துவர். இந்த ஒருங்கிணைப்பின் மூலம் எலும்பில் தாது அதிகரித்து, எலும்பு வலிமையடைகிறது.
எடை குறைப்பு (உடல் பருமன்)
பிரண்டையில் அன்டி ஆக்சிடென்ட் உள்ளதால், எடை குறைப்பு தன்மை அதிகம் உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. உடல் கொழுப்பை குறைத்து, ஒட்டுமொத்த கொழுப்பு தன்மையை மேம்படுத்துகிறது.
இர்விங்கியா கபோனேன்சிஸ் என்னும் ஆப்ரிக்க மாங்காய் வகையுடன் பிரண்டையை சேர்த்து பயன்படுத்துவதால் எடை குறைப்பு சாத்தியமாகிறது. உடல் பருமனை நிர்வகிப்பதில் இந்த மூலிகைகளின் சாத்தியமான ஒருங்கிணைந்த விளைவை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆயுர்வேதத்தின் தன்மைகள் சார்ந்து பார்க்கும்போது, பிரண்டை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து எலும்பை உருவாக்குகிறது. உடல் பருமன் உள்ளவர்களின் எலும்புகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகஆயுர்வேதம் கணிக்கிறது. இது ஒரு விதத்தில் உண்மையும் கூட. ஆயுர்வேதத்தின்படி , எலும்பு உருவாக்கத்திற்கு உகந்த கொழுப்பு தேவைப்படுகிறது. உகந்த அளவு கொழுப்பு இருக்கும் ஒருவருக்கு எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. இன்றைய நவீன ஆராய்ச்சிகளும் இதே தான் கூறுகின்றன.
கொழுப்பைக் கரைக்க
ஆயுர்வேதத்தின்படி, பிரண்டை வளர்சிதையை அதிகரித்து உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதனால் உடலில் உகந்த அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டு, எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் எலும்பின் எடையும் அதிகரிக்கிறது. இதனால், அடிவயிறு, இடுப்பு, பிட்டம் , தொடை போன்ற இடத்தில் படியும் கொழுப்பு குறிப்பிட்ட அளவு குறைகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அங்குல இழப்பு மற்றும் வயிற்று கொழுப்பு குறைப்பு ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் உங்கள் எலும்பு பலவீனமாக இருக்கும் வரை, உடலின் கொழுப்பு அளவு மிகக் குறைந்த அளவே குறைக்கப்படுவதாக அறியப்படுகிறது. ஆயுர்வேதத்தில், எலும்பின் எடையை அதிகரித்த பின்பே கொழுப்பு அளவைக் குறைக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
உங்கள் எலும்புகள் பலவீனமாக இருக்கும் வரை ஒட்டுமொத்த உடல் எடை குறைப்பு கணிசமாக இருக்காது. ஏனென்றால் உங்கள் எடை எலும்புகளுக்கு மாற்றம் செய்யப்படும். தொடர்ந்து பல நாட்கள் பிரண்டையை எடுத்துக் கொள்வதால், உங்கள் உடலின் ஒட்டு மொத்த எடை குறைகிறது. உங்கள் எலும்புகள் வலிமை அடையும் வரை பொறுத்திருந்து பின்புதான் இந்த எடை குறைப்பு தொடங்குகிறது. எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முற்றிலும் கிடைக்கப்படுகின்றன.
மூட்டு வலி:
பிரண்டையில் அநோடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சி மற்றும் வலி குறைகிறது. பிரண்டை பயன்பாட்டால், மூட்டுகளின் இயக்கத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும், விளையாட்டு வீரர்களின் கடின பயிற்சியால் உண்டாகும் வலி குறைவதாகவும் அனுபவபூர்வ விளக்கங்கள் கிடைத்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
செரிமானம்:
பிரண்டையின் பாகங்களில் செரிமான வினைகள் உள்ளன. செரிமான ஆற்றல் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பிரண்டையின் இலைகளை துவையலாக அரைத்து அல்லது காய்கறிகளுடன் சமைத்து உட்கொள்வதால் செரிமானம் சீராகிறது என்று பாட்டி வைத்தியம் கூறுகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
முறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை...