Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 374  (Read 257 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 374

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Madhurangi

திரும்ப முடியாத வழி..

அம்மா ,

என் கண் முன்னே சக்கரவியூகம்.. பாண்டவ குல வழித்தோன்றலாக என் கடமையினை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் பெற்ற தருணம் இது..

நுழையும் வழி கருவறையிலேயே போதித்தவர் என் தந்தை.. வெளியேறும் வழியோ விதி என்னை அறிய செய்யவில்லை ..

வீரனாய் வாழும் பெருமைக்கு சற்றும் குறைவில்லாதது வீரனாய் சாவது என.. மரணதேவதையினை நோக்கி முன்னேறுகின்றேன்..

16 வயது பாலகனான என் உயிர் குடிக்க காத்திருக்கும் பெரியப்பா துரியனின் கண்ணில் எத்தனை வன்மம் ? என்னை தூக்கி மகிழ வேண்டிய கைகளினால் என் ஆவி பறிக்க  காரணம்.. உயிரற்ற இந்த மண்ணும் பொன்னுமா??

தளராத மனதுடனும்.. அயராத வீரத்துடனும் என் வாள் சுழற்றி எதிரிகள் பலர் தலை கொய்து நின்றேன்.. நெருங்கும் வழி அறியாது காலட்படையும் , யானை படையும் கூட நடுங்கி நின்றன..

தர்மசாஸ்திரங்கள் பல அறிந்த தாத்தா துரோணரும், மாமா அஸ்வத்தனுமாக எழுவர் என்னை சூழ்ந்தனர்.. போர் நெறிமுறையினை  துறந்தனர்.. உன் மகன் உடல் மண் சேர காரணமாயினர்..

முக்காலம் உணர்ந்த மாமன் மாயவன் கூட என் விதி அறிந்திருப்பாரோ??
ஆனால் நிச்சயம் பெருமையுற்றிருப்பார்.. தன மருமகன் வியூகத்தை கடந்தவன் அல்ல எனிலும் .. தன்னம்பிக்கை இழக்காதவன் என்று..

பெரியப்பா தர்மரும், பீமனும் , சித்தப்பா நகுல சகாதேவனும்  என் மரண செய்தி கேட்டு அடையும் கோவத்தின்   வெம்மையினையும் அதனால் ஏற்படப்போகும் அழிவுகளின் கோரத்தையும் .. இப்போதே  என்னால் உணர முடிகின்றது..

நீ அழாதே அம்மா..
நான் பூவுலகில் வாழ்ந்த காலம் சொற்பமெனினும் .. நீ பெருமை கொள்ளலாம் உன் மகன் வீர மரணத்தின் சான்றென..

மீண்டும்  சந்திப்போம்.. யுத்தமும் , ரத்தமும், பிள்ளையினை இழந்த தாயின் அழுகுரல் இல்லாத  ஒரு புது உலகத்தில்..

போய் வருகிறேன்

இப்படிக்கு 

உயிர் நீத்தாலும் உன் நினைவுகளில் வாழும்
அபிமன்யு..




« Last Edit: June 09, 2025, 01:52:41 PM by Madhurangi »

Offline Thenmozhi








உலகத்தை வியக்க வைத்த நம் ஈழத்து வீரர்கள்

உலகை வியக்க வைத்த நம் உன்னத வீரர்கள்!
தமிழன் வீரத்தை பறை சாற்றி நின்றவர்கள்!
சரித்திரங்கள் படைத்த சாதனை சிகரங்கள்!
உலகை எதிர்த்து உரிமை கேட்டவர்கள்!

சுயநலம் இன்றி பொது நலத்திற்காக போர் தொடுத்த வீரர்கள்!
தாய்ப்பாசம் விடுத்து தாய் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்கள்!
விடுதலைக்காக போராட அணிந்தீர்கள் சீருடை

எதிர் நின்று எதிரியை கொன்று வீழ்த்திய வீர புலிகள்!
அண்ணன் வழி நடந்த தெய்வங்கள்!
உங்கள் மன உறுதி கண்டு வியக்கிறேன்!
உயிரை துச்சமென மதித்து மானம் காக்க போராடிய வேங்கைகள்!

தலைவன் சொல் தாரக மந்திரம் என சிரம் மேல் கொண்டு நீங்கள் செய்த தியாகம் மறவோம் வாழ்நாளில்
தமிழரின் கலங்கரை விளக்கம் நீங்களே
ஈழத்தின் முத்தான சிற்பிகளும் நீங்களே!

எத்தனை வெடி குண்டுகள்,பீரங்கிகள்,கிளைமோர்கள், கண்ணிவெடிகள்,இன படுகொலைகள்
நம் ஈழத்திருநாட்டில்!
இடப்பெயர்வுகள், உயிர் இழப்புகள்,அங்கவீனங்கள்
எல்லாம் போரின் வடுக்களே!

வணங்குகின்றேன் ஈழத்து போர் வீரர்களையும் மாவீரர்களையும்!




Offline Yazhini

புரவியின் மேல் புறப்பட்டு வருவது
புயலோ, வேங்கையோ, வேந்தோ !!!
செங்குருதியில் தோய்த வாளும்
பகைவரின் நெஞ்சை பிளக்கும் ஈட்டியும்
நன்னிலம் வாழும் குடியின்
செங்கோலுக்கு இணையாக நிற்கும்.
வானளவும் வீரத்தைப் பறைசாற்றும்.

போரின் பெருங்காயங்கள் அனைத்தும்
பெருங்காவியங்கள் பல பேச
வீரத்தழும்புகள் வெற்றியின் முரசு கொட்ட
குதிரையின் நாலுக்கால் பாய்ச்சலுக்கு
பகைவரும் புறமுதுகிட்டு ஓட
வீரப்படையை வழிநடத்தும் தலைவன்
அவனே நம் மறவன்...

வீரத்தை ஊட்டுவது தாய் அமுதோ
தமிழ்மொழியோ தாய் நாடோ
நெஞ்சுரத்தோடு வீர செறுக்கும்
பயத்தைத் தோற்கடிக்கும் போர்குணமும்
பிறரை புறமுதுகி்ல் குத்துவது
கீழ்குணம் என்ற எண்ணமும்
இருக்கும் வரையில் நாமும் வீரர்களே!!!

இன்று புரவியில்லா போர்க்களம் உண்டு
மனிதத்தைக் காக்க வழியுடன் வலியுமுண்டு.
பலர் அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்றனர்.
இன்னும் அனேகர் தன்னிடம்
தன்னை மீட்க போராடுகின்றனர்.
எதுவாகினும் மனவலிமையாகிய வீரமே
வாகை சூடும்✨✨✨
« Last Edit: June 09, 2025, 06:13:02 PM by Yazhini »

Offline Titus

.  [வீரனின் வாசகம் – விரிவாக்கம்

மண் அழைக்கிறது...
அதில் உயிர்கள் விழுந்தாலும், கனவு விழவில்லை!
ஓர் ஊரின் பசியை தீர்க்க,
ஓர் வீரன் தான் உயிரை உருக்கிறான
வெறும் வாளோடு நான் போராடவில்லை...
நம்பிக்கையோடு போராடினேன்.
கையில் இருந்தது ஆயுதம் அல்ல...
அழிக்கவே முடியாத உணர்வுகள்!

பின் தொடரும் ஆயிரம் பேர் –
தங்கள் கண்களில் என் நம்பிக்கை!
முன் செல்கிறேன் நான் –
போரில் மட்டும் அல்ல... நிஜத்தில் வாழ!

போரென்றால் என்ன?
பயத்தை வெல்லும் விழி – அதுவே வீரன்!
சாவும் சாய்ந்த பின் கூட,
வெற்றி என்னை வணங்கும் நாள் வரும்.

நானொரு அரசனாக பிறக்கவில்லை,
ஆனால் என் உள்ளத்தில் ஆட்சி செய்கிறேன்.
பூமி என்னைத் தாங்கினாலும்,
தரையில் பணிந்து வாழ மனம் இல்லை!,
இருட்டினை வெல்ல ஒளியாகக் காத்து நிற்கின்றன,
போருக்கு நான் கீழே இல்லை — மேலே காத்திருக்கின்றேன்

குதிரையின் குளம்படி ஓசை - என் சங்கீதம்!
 மண்ணில் விழும் குருதியும் - என் வரலாறு பேசும்.
வழியற்ற போர்க்களம் கூட
வெற்றியின் பாதைக்கு தீபமேற்றும்

என் வீரம் ஒரு கதையாக மாறும் நாளில்,
உன் குழந்தைகள் அதை கனவாகக் கேட்பார்கள்.
நீ என்னை நினைக்க வேண்டாம்,
விரல் நுனியில் உருகும் மண்ணும் நான் தான்!
color]
« Last Edit: June 11, 2025, 08:09:14 PM by Titus »

Offline Vethanisha


சரித்திரம்
சொல்ல மறந்த கதை
வாள் ஏந்தி நின்று
தலைவனுக்காய்
தன்னுயிர் மாய்த்த
போராளியின் கதை!

கைகளிலே கூர் ஈட்டி
கண்களிலே கோபத் தீ
வலி மறந்த மேனி
தன் தலைவன் பின்னே
மன்னனின் கவசமாய்
உயிர் துறக்க சித்தமாய்
விசுவாசமாய் போராளி !

இருதிவரை போராடி
குருதியில் நனைந்து
மண்ணில் சாய்ந்து
அவன் செய்த அர்பணிப்பே
தலைவனின் வெற்றி!

பரியேறி முன்னிற்கும் மன்னனே
பின்னிற்கும் ஒவ்வொரு உயிரும்
உன்னதமானது!
 சுயநலமற்றது !

பசி மறந்து ,
மனைவி மக்கள் துறந்து
மனிதம் அறுத்து 
அவன் உயிரை மாய்த்து
அடைத்த வெற்றிகள் எதற்காக!
 
பொன்னிற்கா!
மண்ணிற்கா!
பதவிக்காக!
ஆதிக்கத்திற்கா!

ஆசையின் விளைவாய்
ஆரம்பித்தப்
போர்
தனிமனித ஆசையின்
பிரதிபலிப்பே போர் !!

உன் ஆசையில்
மாய்ததென்னவோ
அப்பாவி உயிர்களே
கொன்று குவிப்பவன் வீரனா !
வாழ வைப்பவன் வீரனா !

கௌரவர்கள் தொடங்கி
 இன்று வரை தொடரும்
 இந்த அவலத்திற்கு
 முற்றுப்புள்ளி
 என்று அமையுமோ !!





 
« Last Edit: June 09, 2025, 05:49:19 PM by Vethanisha »

Offline சாக்ரடீஸ்


கர்ணனின் காலம்

நதியில் மிதந்து வந்தவன்,
சூரியனின் அருளால் பிறந்தவன்,
குந்தியின் புதல்வன்,
தேரோட்டி வீட்டில் வளர்ந்தவன்,
துரியோதனன் தோள் பற்றியவன்,
நட்பின் உயிராய் வாழ்ந்தவன்,
சாபங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலும்
வீரம் தளராமல் நின்றவன்.

அந்தக் கர்ணனை,
கிருஷ்ணனின் சூழ்ச்சியால்,
போர்க்களத்தில் அவன்
மார்பில் அம்புகள் பாய,
அர்ஜுனன் கையால் வீழ்ந்தவன்.
ஆனாலும், அவன் புகழ்
என்றும் அழிந்ததில்லை.


இன்று, 

அவன் சாயலில், 
சமூகநீதி பேசிக்கொண்டும், 
சுயமரியாதை காத்துக்கொண்டும், 
வாழ்வு உரிமையை, 
கொண்டாடிக்கொண்டும், 
பல்லாயிரம் கர்ணன்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இன்றைய அரசியல் சூழலில், 
எத்தனை கிருஷ்ணர்கள், 
சூழ்ச்சி செய்தாலும், 
அவர்கள் வீழ்வதில்லை. 

ஏனென்றால், 
அவர்கள் தீட்டுவது வாள் மட்டும் அல்ல, 
அவர்கள் புத்தியையும் தான். 

நமது தேவைகளை நாமே தேடவேண்டும், 
நமது அரசியலை நாமே பேசவேண்டும், 
நமது கடமைகளை நாமே காக்க வேண்டும், 
நமது உரிமைகளை நாமே பெற வேண்டும். 

கர்ணனே, 

இன்றைய காலம் நம்முடையது. 
ரௌத்ரம் பழகு, கற்றுக்கொள். 
கருத்து போரில் உண்டாகும் வெற்றி, 
அறிவின் மலர் பொங்கும் நேரம், 
சிந்தனைத் தீபம் ஒளிரும் போது, 
உலகம் புதியதாய் தோன்றும். 
வாளையும் புத்தியையும் நம்பு, 
அதை மூலதனமாக்கு, 
நமது சமூகத்தை முன்னேற போராடு. 

ஏனெனில், 
இன்றைய கர்ணனை, 
எந்த கிருஷ்ணர்களின்
சூழ்ச்சியும் வீழ்த்தாது. 


Offline Evil


போர் என்று வந்து விட்டாலே
குழந்தைக்கும் வீரம் பிறக்குமே
இவனின் பெயர் கேட்டாலே..
 
எதிரி படைகள் ஆயிரம் வந்தாலும்
தகர்த்திடும் மாபெரும் வீரன் இவன்

பக்தியிலும் தலை  சிறந்தவன் இவன்
போர் யுக்தியை கற்றவன் இவன்

உலகையே வளம் வந்த முன்னோடி இவனே
எதிரி படைகளை கொலைநடுங்க வைத்த
மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் இவன்

உலகமெங்கும் கொடிகட்டி புகழ்
பறக்கவிட்ட மன்னர்களில், மாமன்னன் இவன்

போர்க்களம் என்று வந்தாலே பேய் பிடித்தது போல
பேயாகவே மாறி எதிரிகளை வென்றிடுவான்

தோல்வி என்றே வார்த்தை கேட்டிடாத மன்னன் இவன்
இவனின் ஆட்சி காலம் மக்களின் பொற்காலம் என்பர்.

மக்கள் சிறு கண்ணீர் கூட சிந்தியது  இல்லை.. இவரின் ஆட்சியிலே.
அரசியலில் நுட்பம் அறிந்த மாபெரும் வல்லுநர் இவரே.
.
மக்களின் நலனையும்.. நாட்டின் பாதுகாப்பையும்
அறிந்தே போர் புரியும் வேங்கை இவன்

போர் என்று வந்தால் இவனின் பசிக்கு
எதிரிகளின் தலைகள் ஆயிரம் ஆயிரமாய்
வீழ்ந்து கிடக்கும்  நம் மண்ணில்

ஆறுகள் எங்கும் ரத்த வெள்ளம் பெருகிட
மிதக்கும் எதிரிகளின் வெட்டுண்ட சடலங்கள் பல

இவன் பொற்காலத்தில்,  கட்டிட கலையிலும் சிறந்தவன் இவன்
இவனின் கால் தடம் பதியாத உலகத்தில் ஒரு பகுதியும் இல்லை
இவனின் வணிக யுக்தியை வென்றிட யாரும் இல்லை..

இவனின் புகழ்.. இன்றும் கொடி கட்டி பறந்தது கொண்டுதான்  இருக்கிறது
இவன் கட்டிய கோவில்கள்  இன்றும்  ஜொலிக்கிறது
இவன் கட்டிட கலையின் ரசனைக்கு
தஞ்சை பெரிய கோவில் ஒன்றே போதும் சாட்சியாய் 

இவனின்  வரலாற்றை எட்டு திக்கும் எடுத்து சொல்லும்
இவன் தான்  மன்னர்களுக்கு எல்லாம்
மாமன்னன்
எமது
ராஜா ராஜா சோழன்
« Last Edit: June 09, 2025, 09:48:20 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline RajKumar

காதல் வீரம் இருக்கண்களாய்
கொண்டான் சங்கத் தமிழன்
அகத்தில் காதலையும்
புறத்தில் வீரத்தையும்
கலந்திற வாழ்ந்தான் வீரத் தமிழன்
வீரத்தை தன் அடையாளமாக
வாழ்ந்து போரில் புறமுதுகு காட்டாமல்
இறப்பது தன்மானம் எண்ணினான்
குருதியுனுள் வீரம் கலந்து இருந்தது
தாய் பாலுடன் வீரத்தையும்
ஊட்டினாள் வீரத்தமிழச்சி
போர்க்களத்தில் முன் வைத்த காலை
பின் வைத்தலறிய
தன் நோக்கி வரும் அம்பை துச்சமாக கருத்தினான் வீரத்தமிழன்
போரினால் பெற்ற வீர வடுக்களை
பொன்னினும் மணியிலும் மேலாக
புகழின் சின்னமாய்
எண்ணினான் வீரத்தமிழன்
தரணியெங்கும் தன் கொடியை நாட்டினான் வீர மன்னன்
கடல் கடந்தும் தன் வெற்றி
எல்லையற்றாத கொண்டான் வீரத்தமிழன்





Offline TiNu

கண்களில் கோபம் கொப்பளித்து தெறிக்க..
வீறு கொண்டு எழும், பரியின் மீது அமர்ந்து...
சீறி பாய்ந்து பகைவனை அளித்திடும்.. இவன் யாரோ..

என் புற கண்களுக்கு தெரியும்.. இவன் முகம்
என் அக கண்களுக்கு மட்டும் ஏனோ யார்..
யாராகவோ.. புலப்பட்டு மறைகிறார்களே.

எதிரிகளின் வியூகத்தை அடித்து உடைத்து...
சுற்றி வளைக்கும்.. வீரர்களை.. தந்திரத்தால் .ஏமாற்றி..
எதிரியின் தலை கொய்யா துடிப்பவன் இவனோ..

செந்நிற உடையணிந்த.. தன்  தலைவியை
அவளின் பிறந்த அரண்மனையில் இருந்து..
கடத்தி செல்லும் நளமகாராஜா.. இவனோ..

தான் தன் திறமைகளை கொட்டி பயிற்சி கொடுத்த
வீரர்களை.. போர்க்களம் காண.. வீர முழக்கத்துடன்
அழைத்து செல்லும் சேனை தலைவன்.. இவனோ..

தன் ராஜ்ஜியம் மீது வீண் படையெடுத்து வரும்
எதிரிகளை அடக்க.., தன் காலர் படை மட்டும்..
போதுமென.. கம்பீர நடைபோடும் தலைவன். இவனோ..

தன் சாம்ராஜ்யத்தை வணிகத்தையும் விரிவாக..
தன் உருவேற்றிய சேனைகளோடு.. தலைநிமிர்ந்து..
செருக்குடனே வீர நடை போடும் ராஜ ராஜன்.. இவனோ..

இவையாவும் நம் கற்பனையே... எல்லாமே.. கற்பனையே...
நிஜம் எதுவென யாரும் அறியார்....என்
மன கண்களுக்கு புலப்படுவது.. எதுவெனில்... 

நம் மனதை ஆட்டிப்படைக்க நினைக்கும்...
கோபம், தற்பெருமை, ஆணவம்,பொறாமை...
அறியாமை,நேர்மையற்ற மனநிலை.. நீக்கி..

மேலும் கட்டுப்பாடற்ற மனச்சோர்வு,
சுயநலம், வன்முறை.. காமம்.. அணைத்து..
தீய எண்ணங்களுக்கு..  கடிவாளம் பூட்டி 

நன்மை தீமை கலந்த இந்த சமூகத்தை..
புரவியின் மீது கம்பீரமாக.. செருக்குடனே... வருபவன் எவனோ..
அவனே,.  இவன்.... புவியாளும்.. நில(புவி)... சூரியன்   
« Last Edit: June 09, 2025, 08:25:11 PM by TiNu »