Author Topic: ❤️'சமுதாயச் சிற்பிகள்'❤️  (Read 64 times)

Offline MysteRy



☘️கல்வி ஒழுக்கம் பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழி காட்டியாக விளங்குபவர்கள் நமக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகது.

☘️வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழி காட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.

☘️மாணவர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்கும் ஒரு ஊடகமாக ஆசிரியர்களே விளங்குகிறார்கள்.

☘️ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மாற்றி அதன் வழி ஒரு சமுதாயத்தையே மாற்றும் திறன் கொண்டவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

☘️எழுச்சி மிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.

☘️மாணவர்களுக்குச் சரியான தகவல்களை ஆசிரியர்களால் தான் வழங்க முடியும்.

☘️ஆசிரியர்களே மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றார்கள்.

☘️அப்படிப்பட்ட ஆசிரியர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

☘️பொதுவாக ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஆசிரியரைப் பார்த்துத் தான் தன்னுடைய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறான்.

☘️ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்...?
.
அவர்கள் முகத்தில் எப்போதும் மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.

சிடுசிடுவென இருக்கும் முகம் மாணவர்களைக் கலவரப்படுத்தும்..
.
☘️தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்து விடக் கூடாது.

☘️பாடத்திட்டத்தோடு நின்று விடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அன்றாடம் உலகில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும்.

☘️மாணவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டவராக இருக்க வேண்டும். பாடம் நடத்தும் போதும், வீட்டுப் பாட வேலைகள் கொடுக்கும் போதும் மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

☘️தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டு வரக்கூடாது.

☘️தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல் பட வேண்டும்.

☘️ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டப் பழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

☘️எப்போதும் திட்டக் கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக் கூடாது.

☘️எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, வெறுப்பு ஏற்றக் கூடாது. கண்டிப்பும் வேண்டும். கனிவும் வேண்டும்..

☘️படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பதை பார்க்கின்றோம்...

🌺ஒருவன் கல்வியிலோ,, தொழிலிலோ, செல்வச் செழிப்பிலோ உயர்ந்து வளர்ந்தால் அதனை மகிழ்ச்சியுடன் சற்றும் பொறாமையின்றி பகிர்ந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் இருவர் தான்.

ஒருவர் நம்மைப் பெற்ற தாய்,தந்தையர்.

மற்றொருவர்., 'இவன் எனது மாணவன்’ எனப் பெருமிதப்படும் ஆசிரியர்.