Author Topic: அவசியமற்ற கோபம் !  (Read 198 times)

Offline சாக்ரடீஸ்

அவசியமற்ற கோபம் !
« on: May 09, 2025, 11:12:40 PM »

அவசியமற்ற கோபம்

அழகான ஒரு காலை
அமைதியாக இயங்கிய மனது
ஒரு சொல் மட்டும் வந்ததும்
அதிர்ந்து போனது மனம்

விசாரிக்கவில்லை
வெறித்தனமாக பதில் சொன்னேன்
என்ன சொன்னேன்  என்று
உணர்வதற்கு முன்பே
நான் காயப்படுத்தி விட்டேன்

சிறு தவறுகளுக்கு
பெரிய கோபம் வேண்டுமா?

அதைப் போலவே
பெரிய பிழையாகும் அந்த நொடிகள்

கோபம் வந்த போது
நான் நானாக இல்லை
வார்த்தைகள் என் சொந்தமில்லை
மௌனம் கூட என்னை விலக்கிவிட்டது

அவமானம் ஒருவருக்கல்ல
இருவருக்கும் மிச்சம்
தாங்க முடியாதது
பின்னே வரும் பச்சாத்தாபம்

நிம்மதியாக இருந்தால்
சிக்கல்கள் கூட மெல்ல கரையும்
ஆனால் கோபம் வந்தால்
அமைதி சிதைந்து போகும்

அதனால் தான்
கோபத்திற்கு முன்னே
சற்று நின்று சிந்திக்க வேண்டும்
அவசியமற்ற கோபம்
நம்மை நாமே இழுக்கச் செய்கிறது

ஒரு வார்த்தை பேசுவதற்கும்
ஒரு முறை யோசனை வேண்டும்
காயத்தை விட மன்னிப்பே கடினம்