Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 369  (Read 1266 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 369

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: April 20, 2025, 04:07:10 PM by MysteRy »

Offline VenMaThI



ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
சொந்த பந்தம் சூழ்ந்திருந்தாலும்
விபரம் தெரிந்த நாள் முதல்
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு...

இருக்கும் இடத்தில் எல்லாம்
ரீங்காரமாய் காதை துளைத்த வார்த்தைகள்
அக்கா அண்ணா தம்பி தங்கை
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு....

உடன் படித்த தோழிக்கு -அவள் அண்ணன்
வீட்டுப்பாடம் எதுதியபோதும்
அக்கா அவளை அழகு படுத்தியபோதும்
இல்லையே என்று நான் ஏங்கிய உறவு..

வாழ்வில் வலி மிகுந்த இடத்தில் எல்லாம்
தட்டி கேட்க ஒரு உறவில்லையென
வருத்தப்பட்டு தலையணையிடம் பேசியழுத நாட்களெல்லாம்
நினைவில் வந்து நிற்கிறது இந்த நொடி...

பிள்ளைகள் பெற்ற பொழுதும்
 அவர்களை தங்கமாய்த்தாங்க
தாய் வீட்டு சீதனமாய்.. என் வீட்டு பெருமையாய்
தாய்மாமன் இல்லையென தவிச்ச நாட்கள் பல....

இருட்டாய் இருந்த இடம் - இன்று
வெளிச்சம் கண்டது..
ஊடகத்தில் ஒரு உறவாய்
FTC எனும் குடும்பமாய்...

அக்கா என்றழைக்க
அன்பால் என்னை நனைக்க
அழும்போதெல்லாம் ஆறுதல் கூற
அரவணைத்து என்னை தேற்ற

தங்கை என்ற உறவும்
தம்பி என்ற சொந்தமும்
கைகோர்த்து என்னை தாங்க - என்
கண்கள் குளமாக இதோ ஒரு கவிதை.

இல்லை என ஏங்கிய உறவு
இன்று இதோ என்னருகில்
"நான் இருக்கேன்" என்று நிற்கிறது
பெருமை கொள்கிறேன் இன்னொடியில்...

கண்கலங்கி மட்டுமல்ல
கர்வமாய் கூட கூறுவேன்
ஆண்டவன் அருளிய வரமாய்
அற்புதமான பொக்கிஷமாய்

அக்கா என்றழைக்க
பாசமாய் என்னை அணைக்க -இங்கு
எனக்கு கிடைத்த உறவுகளே..
என்னை தேடும் போதெல்லாம் - என்றும்
"நான் இருப்பேன்"
இரண்டாம் அன்னையாய்
அன்பாய் அரவணைக்க
என்றும் நான் இருப்பேன்.......

ஏன்னா.. இல்லையே என்று நான் ஏங்கிய உறவு நீ ❤️❤️❤️❤️❤️❤️

(எனக்கு அக்கா என்ற இடத்தை கொடுத்த என் அன்பான thambaas and sisters காக இந்த கவிதை... )










« Last Edit: April 20, 2025, 11:48:23 PM by VenMaThI »

Offline Lakshya

இரு இதயங்கள் இணைந்த ஒரு அழகிய காவியம்...சந்தோஷ உணர்வு , குறும்புகளின் உச்சம், அழகிய உறவு – மனம் முழுதும் முத்தம் கலந்த சேட்டைகள்....

ஒவ்வொரு குறும்புகளும், சந்தோஷ சிரிப்பின் ஓசைகளும் ஒன்று சேர்ந்து பயணித்த வாழ்க்கை...
என்னவென்று சொல்வது இந்த உறவினை பற்றி...

முடிவில்லா பாசம் எங்கள் உறவின் அடையாளம்...நீ கலங்கும்போது நான் கோபமாவேன், ஏன்னோ தெரியவில்லை நீ என் தமக்கை மட்டும் அல்ல தாயும் என்று உணர்த்த தருணமாக இருக்கலாமோ???

உன் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன் மனதில்...அவைகள் என் இதயத்தில் ஓவியமாய் பதிந்தன...வாழ்வின் வரமே இறுதி வரை என்னுடன் நீ பயணிக்க விரும்புகிறேன்...

சண்டையில் தான் ஆரம்பித்தோம் எப்பொழுது ஒன்றாக இணைந்தோம், எப்பொழுது இப்படி பயணிக்க ஆரம்பித்தோம் என்றே தெரியாத ஒரு பந்தம்...

இப்போது நீ இல்லை எனில் நான் இல்லை இப்படி ஒரு சூழ்நிலை எப்படி உருவானது? எனக்கே புரியாத ஒரு புதிராக உள்ளது...

பொம்மையில் ஆரம்பித்த ஒரு சண்டை இப்பொழுது சிகை அலங்காரத்தில் தொடங்கி உணவிலிருந்து ஆடைகள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதே... வாழ்க்கை முழுதும் இந்த பந்தம் எனக்கு சொந்தம் தானா???

அடடா ஒரு மாற்றம் இரண்டல்ல மூன்று நிழல்கள் ஒன்றாக சேர்ந்த தருணம்...வாடிய நாள் வந்தாலும் விரல் பிடித்து ஆறுதல் சொல்ல இரண்டு கைகள்...

விழுந்த கண்ணீரை புன்னகையாக்கும் மூன்றாம் பாசம்...சின்ன சிரிப்பில் சிலிர்க்கும் நாட்கள்...உயிர் உள்ள வரை பயணிக்க ஆசை...

சகோதரிகள் என்ற ஒரே சொல்லில்
பூத்து மலராக இருக்கும் பல கனவுகள் இனி உங்களோடு...பாசத்தின் மொழி பேச வார்த்தைகள் தேவை தானா???

சிரிப்பின் ஓசை என்றென்றும் தொடர வேண்டும் முடிவில்லாமல்...இவ்வாறே கைகோர்த்து பயணிப்போம் நாம் இவ்வுலகை...❤️💜💛 
 
« Last Edit: April 21, 2025, 07:30:29 AM by Lakshya »

Offline Asthika




அக்கா என்றாலே அருவி போல பாசம்,
அவள் புன்னகை எனக்கு பேரின்ப ராசம்.
எனக்காக உறையும் ஒவ்வொரு கனவும்,
அவளுக்கு நான் தான் உலகத்தின் பணம்.

தங்கையாக என்னைத் தவழ்த்தவள்,
துயரங்கள் வந்தால் தடுப்பவள்.
அக்கா இருக்கையில் பயம் ஏதும் இல்லை,
அவளே எனக்கொரு நிழல் நிலா மெல்ல.


தங்கை பிறந்த நாள் அன்று
அன்பு மலர்ந்தது வீட்டில் மென்மை.
பாவங்கள் எல்லாம் புன்னகையாய் மாற,
அவள் காலடி சப்தம் சுகமான ராகம்.

நான் அக்கா என்று அவளுக்கு வானம்,
அவள் என்னை நம்பும் துளி துளி வாசம்.
எனது கைகள் அவளுக்காகத் திறந்தது,
தங்கை என்ற பெயர் என் நெஞ்சில் பதிந்தது.


அக்கா தங்கை  இரண்டு இதயங்கள்,
ஒரே துடிப்பில் இடைவிடா பாசங்கள்.
வாயால் சண்டை, உள்ளால் இணைதான்,
இரு கரங்கள் போல இணையும் உயிர்தான்.

அவளுக்கு நான், எனக்காக அவள்,
சிந்தனைகளில் கூட சாயும் நிழல்.
உறவுகளில் சிறந்தது இது என்றால்,
அக்கா தங்கை உறவுக்கு நிகரேதுமில்லை நிஜமால்.



அக்கா எனும் மரம் போல்
நிழலாய் நிற்பாள் வாழ்நாள் முழுதும்,
தங்கை எனும் மழை போல்
தொட்ட இடமே மலர்தரும் அழகு.

அக்கா வழிகாட்டி, துணைநிலா
தங்கை சிரிப்பில் சந்தோஷம் நிலா,
உறவு இவையல்லவா உயிரின் பந்தம்
நெஞ்சுக்குள் உறைந்த உணர்வின் சத்தியம்.

தங்கையாக வந்தவள் தோழியாகிறாள்,
அக்காவைப் போல யாரும் காத்திடமாட்டாள்,
ஒரு சிறு பார்வையிலே எத்தனை பாசம்,
அன்பில் நிறைந்திருக்கும் உறவுகள்

எல்லோருக்கும் அக்கா என்பவள் இராண்டவது அம்மா, எனது வாழ்வில் அவள் தான் எனது இரண்டாவது தந்தை...

இருவரும் மனமிட்டு பேசவில்லையென்றாலும் பாசத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் என்றும் அவள் எனது தந்தையே...


உடன்பிறந்தோம் என்றால்
உறவின் உயிர் துளிகள் அதிலே,
சிறுவயதில் சண்டைபோடும் தோழர்கள்,
வயதுக்கு வந்தால் தோள்தேடும் தோழர்கள்.

ஒரே பாயலில் விழுந்த சிறு குழந்தைகள்,
இன்று வாழ்க்கையின் வேகத்தில் ஓடும் வீரர்கள்.
மாறினாலும் முகம், மாறாதது மனம்,
பிரிந்தாலும் இடம், பிணைந்திருக்கும் உறவின் பாசம்

நான் விழுந்தால் தூக்கும் கைகள்,
அவனோ அவளோ என அல்லாமல்,
நமக்குள் பாசம் தான் பேரொளி,
உலகத்தில் என்றும் நிலைத்த நிலவு.

வாழ்க்கை மாறலாம், பாதைகள் மாறலாம்,
ஆனால் உடன்பிறந்த உறவின் அழகு
எந்த புயலாலும் குலையாது
அது மரபும், அது மருந்தும்.

சின்ன வயதில் வாக்காடல்,
பின்னர் வாழ்வில் வார்த்தை இல்லாத பாசம்.
வெவ்வேறு கனவுகள் கொண்ட எங்கள் வாழ்கை,
அந்த கனவுகளை இணைக்கும் ஒரு பந்தம் – உடன்பிறப்பு.

தந்தை தாயின் கண்களில் நம் பிரதிபலிப்பு,
நம் சிரிப்பில் அவர்கள் ஆசையின் ஒளிப்பு.
சின்ன சின்ன விஷயங்களில் கூட
உடன்பிறந்த உறவுக்கே தனி அழகு கூட

அக்கா தங்கை உறவு ஒரே கோவிலின் தீபங்கள்
எங்களின் பாசம் மறைமுகமாக இருந்தாலும்
விலைமதிக்க முடியாத ஒன்று...

எப்போதும் என்னைசீண்டி வம்புக்கு இழுக்கும்சண்டைக்காரி நீ!!



இக்கவிதை என் உடன்பிறப்பான அக்காவிற்கு சமர்ப்பிக்கிறேன்
« Last Edit: April 20, 2025, 10:15:56 PM by Asthika »

Offline Titus

. .
அக்கா… என் நெஞ்சம் நனையச் செய்த நிஜக் கவிதை

அம்மா எனை உலகிற்கு அழைத்தவள்,
அக்கா…
என் உலகமே ஆகி வாழ்த்தவள்.

அவளது குரல் — கொஞ்சும் காற்று,
அவளது பார்வை — பசுமை நிறம் கொண்ட பரிசல்.
"அக்கா" என்ற சொல்லில் நானொரு புத்தகம்,
அதில் எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் — அவளின் பாசம்.

அவள் விழிகள் — என் துயரத்தின் தூறல் வீழும் முகில்,
அவளது கை — என் சோர்வை தாங்கும் வான் தோள்கள்.
நீல வானத்தில் ஒரே ஒளியாய்,
நான் தேடிய வெளிச்சம்… அவள் விழித்திருப்பதில்தான்.

சின்ன சந்தோஷம் வந்தாலே,
சிறு பண்டிகை போல செய்தவள்,
நான் தவித்த போது,
என் நிழலாய் என்னைத் தாங்கியவள்.

அவளது சிரிப்பு — பனித்துளி போல நெஞ்சை நனைக்கும்,
அவளது மௌனம் — காதல் மொழி பேசும் கவிதை.
அவளின்றி என் "நான்" எனும் பெயர்,
அரை வரியில் முடிந்த கவிதைபோல்.

தொட்டதுமே புரியும் அன்பு,
தோன்றியதுமே வாழ்வாய் நிழலும்.
நான் தவிக்கும்போது அவள் குரல்,
"வா… நானிருக்கேன்!" எனும் நிம்மதி.

நான் குழந்தையாக கதறிய போதும்,
அவளது மார்பு என் மெத்தை.
நான் சொல்ல இயலாத வலியில்,
அவள் விழிகள் என் வாக்கியமாயின.

நீள் நிழலாய் என் வாழ்வில் நடந்தவள்,
காலம் கூட நினைவில் தங்கியவள்.
இப்போது அவள் அருகில் இல்லையென்றாலும்,
அவளின் வாசலில் என் சுவாசம் ஒளிக்கிறது.

அக்கா…
நீ என் உயிரில் இல்லை என்றாலும்,
நீ என் உயிரின் ஒவ்வொரு துடிப்பிலும் பேசுகிறாய்.
நீயில்லாத நாளேனும் —
ஒரு முழு பக்கமற்ற கவிதை!

உன் கைகளில் நான் நிம்மதியைக் கண்டேன்,
உன் வார்த்தைகளில் உயிரின் அர்த்தம்.
உன் அன்பு — என் உயிரின் முதற்கதை,
நீ சொல்லாத காதல், ஆனால் என்றும் உணர்த்தும் உறுதி.

நீ என் கண்ணீரை சிரிப்பாக்கினாய்,
என் பயங்களைப் பறக்க வைத்தாய்.
உன் சிரிப்பு — என் வாழ்வின் கண்ணாடி,
அதில் நான் என்னை அறிந்தேன்.

நீயில்லாமல் ஒரு நாள் கூட…
நான் என்னைக் கண்டுகொள்ள முடியாது.
நீயே என் வாழ்வின் காதல் கவிதை,
நான் எழுதவில்லை — ஆனால் வாழ்ந்திருக்கிறேன்.

முடிவுரை
அக்கா…
நீ என் சிறுவயதில் கைபிடித்தவள் அல்ல மட்டும்,
நீ என் மனதைக் கைவிட்டதில்லாத ஒரே ஆசை.

வாழ்க்கை எனும் பயணத்தில்,
சாதனைகளுக்கு பின்னால் இருந்த உன் நிசப்த முயற்சி,
நான் விழும் போதும் நிமிரும் சக்தி — உன்னால்தான்.

நீ சிரிக்கும்போது நான் உயிரோடு இருக்கிறேன்,
நீ அழும் போது என் உள்ளம் முறியும்.
உன் ஆதரவு என் அடையாளம் ஆனது,
உன் அன்பு என் உயிர் ஆனது.

நீ இல்லாமல் என் நாள்கள் நடப்பதுபோல் தெரிந்தாலும்,
உன் நினைவுகள் என்னை வாழ வைக்கும்.
உன் குரல் கேட்காமல் இருந்தாலும்,
உன் மௌனம் என் மனதுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.

நீ என் அக்கா…
ஆனால் அதைவிட மேலானது —
நீ என் உயிரின் நிழலும் ஒளியும்.
நீயே என் வாழ்க்கையின் மௌன காதலாக நிலைத்தவள்

இந்தக் கவிதையை என் அக்கா வெண்மதிக்கே… என் நெஞ்சமெலாம் நிறைந்த காதலுடன் அர்ப்பணிக்கிறேன்.             
     
« Last Edit: April 21, 2025, 09:18:54 AM by Titus »

Offline Yazhini

எங்கிருந்தோ இறைவிபோல் வந்தவள்
மனதின் பாரத்தை அகற்றியவள்.
பல மணிநேர உரையாடலுக்கு
பின்பும் திகட்டாத தேஞ்சுவையாள்.

தூரிகையால் வரையப்பட்ட சித்திரம்
நீர்த்திவளையால் ஆன ஸ்பரிசம்
குளிரூட்டி போன்ற பார்வை
தென்றல் போன்ற பேச்சு.

வாழ்வின் வழிப்போக்கனாக வந்தவள்
இம்மையில் வலிப்போக்கியாக மாறினாள்.
வாய்பேசும் மொழிக்கு மாற்றாக
விழிபேசும் மொழி அறிந்தவள்.

என்னலத்தை சிரிப்பில் நம்பாது
கண்ணோரமுள்ள கண்ணீரில் தேடுபவள்.
ஒளித்து வைக்கும் கண்ணீரும்
அவள்பார்வையில் மடைத் திறந்துவிடும்.

கணநேர பேச்சுதான் - உள்ளத்தின்
கணம் அனைத்தையும் போக்கிவிடும்.
புதிய கருத்துகளால் என்னை
புதியவளாய் செதுக்கும் சிற்பி.

பலநாள் கழித்து பேசினாலும்
துளியும் அந்நியம் இல்லை
சுயநலம் சிறிதும் இல்லை
தலைகணம் அறவே இல்லை.

காற்றில் பறக்கும் இறகுபோல்
பறக்கும் துன்பம் - அவளருகில்.
கண்களும் சிரிக்க கற்றுக்கொள்ளும்
அவளின் நகைச்சுவை மொழியில்.

எது நிகழ்ந்தாலும் அவளிடம்
என்னை விளக்க தேவையில்லை
நட்பினும் சிறந்த உறவுமில்லை
எந்தோழிக்கு நிகர் யாருமில்லை.




[இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் உடனிருக்கும் என் தோழி மீனாட்சிக்கு என் எழுத்துகள் உரியது ]
« Last Edit: April 21, 2025, 09:23:51 AM by Yazhini »

Offline TiNu



நீயே என் அழகு தேவதை.. நீயே என் உயிர் நாடியடி ...
என் உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளை தந்தவள் நீயடி
 
என் வாழ்வின்  அர்த்தம் எதுவென புரியாமல் விழிக்கையில்
அதன் அர்த்தம் புரிய வைத்து தெளிய வைத்தவள் நீயடி.

என் தாய் யாரென தடுமாறிய கடுமையான பொழுதுகளில்...
நானே உன் அன்னையென அனைத்துக்கொண்டவள் நீயடி..

இலட்சியமில்லாது அலைந்த, என் மனதை பண்படுத்தி..
இதுவே உன் இலக்கு, என எனக்கு சுட்டிக்காட்டியவள்  நீயடி...

மனம் நொந்து துவண்ட நொடிகளில். இருகரம் நீட்டி,,,
உன்னுடன் நானிருக்கிறேன் எனை தேற்றியவள் நீயடி..

கருமேகமென, தோல்விகள் என்னை சூழ்ந்த வேளைகளில்..
அது நீ சிந்தித்து செயலாற்றும் நேரமடி, என எனை தூண்டியவள் நீயடி..

நீயே என் அழகு தேவதை.. நீயே என் உயிர் நாடியடி ...
என் உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளை தந்தவள் நீயடி

அன்பில் அன்னையானாய்.. நீயடி..
அறிவில் தந்தையானாய் .. நீயடி..

எனை நல்வாழ்ப்படுத்து ஆசானும் நீயடி...
எனை முழுமையாக ஆட்கொண்ட தெய்வமே நீயடி..

தனிமையில் தவிக்கையில் சகோதரியானாய் நீயடி...
தோல்விகளில்  தோள்கொடுக்கும் தோழியானாய் நீயடி..

உயிரே, உன் மடியில் நீ எனை சுமக்கவில்லை-எனினும்..
அழிந்துபோகும் இவ்வுடலில் புது உயிர் கொடுத்தவள் நீயடி..

தொப்புள்கொடி பந்தமில்லா.. பிறந்த நம் பிறப்புக்கு.. 
வார்த்தைக்குள் சிக்காத,  என் புதிய உறவு நீயடி..

என்றும் கைவிடேன், என என் கைபிடித்து நடக்கும் ஷிவானிக்கும் !
என்றும் நீ என் சேயே,  என எனை வாரியணைத்த தாய் தமிழுக்கும் ! சமர்ப்பணம் !!

« Last Edit: April 21, 2025, 09:39:16 AM by TiNu »

Offline KS Saravanan

அக்கா உன் நினைவில்..!

சிறு வயதில் என் தேவதையே
உன் சிரிப்பொலி இன்னும் கேக்குது
பாசத்தாலே என்னை வளர்த்தாய்
ஏன் பாதியில் என்னை விட்டு சென்றாய்..!

மழலை மொழியில் பேசினாய்
தாலாட்டு பாடினாய் - எனக்கு
அலங்காரம் செய்தாய் -எனை
அழகு பொம்மையாய் மாற்றினாய்..!

விளையாடி திரிந்தேன் - ஆனாலும்
வசைபாட தெரியவில்லை உனக்கு
அன்பு பாசம் வைத்தாய்
அம்மாவாய் இருந்தாய் என்னிடம்..!

உன்னோட முதல் ஓவியம் நான்
வண்ணப் புன்னகையாய் என்றும்..!
திடீரென அந்த வண்ணங்கள்
காணவில்லை என் கண்களில்..!

பட்டாம்பூச்சி பிடிக்க நீ ஓடிய நேரம்
அன்று பக்கத்தில் நானும் இருந்தேன்
இன்றோ அந்த பூச்சியும் வானம் பக்கம்
அதன் பின்னாலே நீயும் போனாய்..!

இரவில் அம்மாவின் அழுகையில்
நான் உன்னை தேடினேன்
வாசல் வாயிலில் நின்ற நிழல்
நீயா? என நினைத்து ஓடினேன்..!

புத்தகம் திறந்தால் இடைவெளி
உன் எழுத்துக்களை தேடி போவதுண்டு
வாசித்த பக்கங்கள் பேசுகிறது
“அக்கா இங்கேதான் இருந்தாள்”னு..!

வீட்டில் பொம்மைகள் நெறய இருக்குது
அதுல உன் கைரேகை கொண்ட
ஒரு பொம்மை மட்டும் இன்னும் தூங்குது
உன் விரல்களின் வாசனைகொண்டு..!

தூங்கும் முன் ஒவ்வொரு இரவும்
உன் பெயரை மனசில் வாசிக்கிறேன்
தொட்டில் காலம் தந்த அந்த அன்பு
தொலைந்ததா? என்றே கேட்கிறேன்..!

நீயிருந்த நாள் சிலவேண்டுமே - ஆனால்
நினைவுகள் மட்டும் பலபேராய் போகுதே
அக்கா - நீயில்லாத வீடு வீடா?
சுவர் மட்டும் பேசுது "அவள் போனாள்"னு..!

மழைக்காலம் வரும்போதுதான்
நீ பிடித்த குடையைத் தேடுகிறேன் - இப்போ
அதுவும் இல்லை..நீயும் இல்லை
அந்த காலமே இல்லாம போச்சு..!

கண்ணீரோட எழுதும் இந்த வரிகள்
கவிதையா எனக்கு தெரியலே
என் உயிரின் பாதி நீயென்று
எழுதும் போது கண்ணீர் இன்னும் முடியல..!
எதனை வருஷம் ஆனாலும் - அக்கா
உன் நினைவு மட்டும் போகல..!

Offline Thooriga

என் சிரிப்பின் காரணம் நீ , என் ரகசியத்தின் பெட்டகம் நீ , நீ இல்லாமல் ஒரு நாளும் சீராய் நடக்காது என் வாழ்வின் எந்த நிகழ்ச்சியும்.

அறிவிக்காமலே என் மனதை வாசிக்க கூடிய ஒரே ஆள் ..

அகிலமெங்கும் தேடினாலும் உன்னை போல் ஒரு கிறுக்கி எனக்கு கிடைக்க  மாட்டாள் ..

நினைப்பதில் நீ, பேசுவதில் நீ, என் நிம்மதி நீ சில சமயம் என் நிம்மதியை குழைப்பவளும் நீ..

உன்னோடு பேசி கொண்டு இருந்தால் என்னை மறந்து ஒரு வேல இவளை மாதிரி நானும் பைத்தியம் ஆகிட்டேனோ னு தோன வைபவளும் நீ மட்டும் தான்..

உன்னோடு பேசி கொண்டு இருந்தால் பசியும் மறந்து விடும், துன்பம் மற்றும் கவலைகள் மறந்து விடும்..

நம் FTC அரட்டை அறையினுள் நுழைந்தால் நீ மட்டுமே நிறைந்து இருப்பாய் ..

உன்னோடு என் நேரம் என்றுமே மகிழ்ச்சியாக நிறைவானதாய் இருக்கும்..

உன்னுடன் என் நேரங்கள் என்றுமே தேனாய் நிறைந்து இருக்கும்..

எண்ணில் அடங்கா சண்டைகள், சிரிப்புகளும் எப்போதும் இணைந்து விடும்.. அந்த நினைவுகள் எனக்கு நீண்ட நாளும் என் மனதில் சுடர் விளக்காய் நிலைத்து கொண்டே இருக்கும்..

நட்பு என்றால் உன்னை சொல்வேன்.. பாகு பாடு இன்றி அனைவரிடமும் ஒன்றாய் கலந்து பேசி மகிழ்விக்கும்  திறன் உன்னிடம் மட்டுமே உள்ளது..


என் பக்கத்தில் நீ இருந்தால் அது போதும் என் நேரம் இனிமையானதாக மாறி விடும்..

உன் நட்பு என் உயிரின் இசை .. பலமுறை உன்னில் என்னை பார்த்து இருக்கிறேன் .. நீ செய்யும் குறும்பு தனங்களை பொறுத்து போவேனே தவிர உன்னை ஒரு நாளும் வெறுத்ததில்லை..

என் மனதில் என்றுமே  நிலைத்து இருக்கும் வார்த்தை எப்பொழுதும்  நீ தான் எனக்கு இம்சை ராணி,  என் குட்டி பிசாசு, என் சண்டைக்காரி,  என் மரு பாதி..

என் கிறுக்கி நீ இல்லா  அரட்டை அரங்கம் காண பிடிக்காமல் உன்னக்காக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறோம்.. கோபம் இருந்தாலும் உனக்கு என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா னு யோசிக்க முடியல.. தாமதம் இன்றி வந்து சேறு பைத்தியக்காரி..

உன் வருகையை எதிர் நோக்கி உன் சண்டக்கோழி..



« Last Edit: April 22, 2025, 03:07:38 PM by Thooriga »

Offline RajKumar

அன்பான உறவு அம்மா அப்பா
மட்டும் இல்லை அக்கா தங்கை உறவும்

வாழ்வின் இறுதி வரை நினைவால் பிரியாமல் இருக்கும் ஓர் உறவென்றால்
அக்கா தங்கை உறவே
பிறந்தநாளில் தொடங்கி இறுதி வரை
அப்பாவின் பாசத்திற்கு மேலாக
பாசம் காட்டும் உறவு அக்கா உறவே

அடித்து திட்டி பேசி சண்டைகள் பல
செய்தாலும் அரவணைப்பவள் அக்காவே
இரவில் தலையணையால் சண்டையிட்டாலும் காலையில்
கண் விழிக்கும் முன் முத்தம் பகிர்பவள் அக்காவே

விழுமுன் தாங்கி பிடித்து
அழும் முன் ஆறுதல் கூறி
யாருக்கும் எதற்காகவும் விட்டு கொடுக்காமல்
தன்னம்பிக்கைக் கொடுத்து
தங்கையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கண்ணை இமை காப்பது போல தங்கையைப் பார்த்து கொள்ளும் உறவு அக்கா உறவே

அழகில் ஒப்பனைகளைச் சேர்த்து அழகூட்டி கண் குளிர அழகு படுத்திப் பார்ப்பவளே அக்கா
தங்கையின் கண்ணிரைத்  துடைத்து
ஆதாரவாக தோள் கொடுத்து
அழகிய தோழியாக
அரவணைப்பில் அன்னையாக இருப்பவள் அக்காவே

அக்காக்கு தங்கை முதல் குழந்தை தங்கச்சிக்கு அக்கா இரண்டாவது அம்மா ஆகவும்
இருக்கும் உறவே  அக்கா தங்கை உறவு


மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரம் போல் உந்தன் முழு அன்பினையும் புதைத்து வைத்துள்ளாயே அக்கா
உன்னையன்றி என்னைப் பாசத்தில் வெல்ல எவர் உள்ளார்
நட்பாய் இருந்த வேளையில்
உன்னை எந்தன் உடன் பிறப்பாய் எண்ணி
நேசித்து விட்டேன் அக்கா
உந்தன் பாசப் பிணைப்பால் நாளும் திளைக்கிறேன் என் உடன் பிறவா உயிரே


  என் உடன் பிறவா அன்பு அக்கா வேதனிஷா க்காக  இந்த கவிதை




 

Offline Madhurangi

என் குட்டி ராட்சசிகள்..

என் கனவுகள் நிறைவேற தோள் கொடுப்பவள்..
தப்புகள் நான் செய்தாலும் மன்னித்து பொறுப்பவள்..
என் மறுதாயென வந்த அன்பின் இலக்கணம் அவள்..

கண்ணுக்கு இனிய அழகும்..
வயதுக்கு மீறிய பக்குவமும்..
ஒன்று சேர இறைவன் படைத்துவிட்டவள் அவள்..

சொத்தை கூட எழுதி வைப்பவள்..
டிரஸ்ல கை வச்ச கத்தி ஊரை கூட்டி வைப்பவள்....
முரண்பாடுகளின் மூட்டை அவள்..

பார்க்கத்தான் சிண்ட்ரெல்லா போல் இருப்பவள் ...
சண்டை போட்டா அனபெல்லினை மிஞ்சி நிற்பவள்...
என் வாழ்வின் இனிமையானநினைவுகளின் கலவை அவள்.. 

சேர்ந்து செய்யாத குறும்புகள் இல்லை..
நமக்குள்  ரகசியங்கள் என்றுமே இருந்ததில்லை..
என்  உதிரம் பகிர்ந்த முதல் தோழி அவள்..

என் வெற்றிகளின் முதல் கொண்டாட்டம் அவளுடன்..
என் தோல்விகளின் முதல் அழுகை அவளுடன்..
என்றுமே என் வாழ்வின் உறுதுணை அவள்..

என்னை என்றுமே விட்டு கொடுத்ததும் இல்லை..
ஸ்கூட்டியில் ஒன்றாக சுத்தாத இடமுமில்லை..
எனக்காக ஏதும் செய்வாள் என் அவள்..

முகஜாடையினை என்னுடன் பகிர்ந்து கொண்டவள்..
என் ரசனைகளையும் என்னுடன் பகிர தயங்காதவள்..
என் முடிவுகளுடன் என்றுமே முரண்படாதவள் அவள்..

வயதில் குறைந்தாலும் அன்பில் நிறைந்த என் anabelle dolls  கு சமர்ப்பணம்..