வாழ்க்கை என்பது போராட்டம்,
அதை வாழ்வதற்க்கு தான் ஆர்ப்பாட்டம்.
படைச்சவன் பிரிக்கல, படைப்பினம் பிரிக்குது, பிரிச்ச பிரிவினை வாதிகள் பேருல பிழை சொல்லல யாரும், படைச்சவன் பேருல பழி சொல்லுறான்.
வாழக்கையை வசதியாகிக்க வாழ்வாதாரமே இல்லாதவன்ட சுறண்டுற கூட்டத்துக்கு,
வாழவே வசதி இல்லாதவனோட வலி எப்படிடா தெரியும்?
தேவையை தீர்த்துக்க போராடுது ஒரு கூட்டம்.
போராடுற கூட்டத்தை போட்டு தள்ள தான் எத்தனை எத்தனை முதலைகள் கூட்டம்?
பிரிக்க நினைக்கிறவன் உன்கூட்டம் னா?
பிரிஞ்ச கூட்டத்தை சேர்க்க துடிக்குற அவ்வளவு பேரும் என் கூட்டம்..
வாழ வழி சொல்லலைனாலும் பரவால்ல, வாழ நினைக்கிறவனுக்கு வழி விட்டு நில்லுங்கடா.
நான்! மக்கள் பாக்கனுன்னு மேல வர நினைக்கல.
என் மக்களை பாத்துக்க மேல வரணுன்னு உழைக்கிறேன்.
MN-AHAMED AARON...