Author Topic: இவளுக்குகாக இனி !🫀  (Read 880 times)

Offline Reacher

இவளுக்குகாக இனி !🫀
« on: April 04, 2025, 09:23:23 PM »
பாதம்!       

என் இமைகள் சற்று இமைக்க மறந்த நேரம்
என் விழியும் சற்று உறைந்த தருணம்
         
          கண்டேன்....! இவள் பாதம்! அழகு 

ஐய்விரல்களும்  ஒன்றுடன் ஒன்று
உரசிக்கொள்ளும் அக்கணம் 
அதை ரசிக்கும் என் மனம்..!

கருணையை கண்களில் மட்டும் தான்
காண முடியும் என்று நினைத்திருந்தேன்
இவள் பாதங்களை காணாத வரை..!

பாதங்களை பார்த்தும் கூட காதல் வருமோ
என்று எனக்கு தெரியாது
என் கண்களின்  வெக்கத்தை கண்டபின்..!

 
தினம்தோறும் பூக்கும் ரோஜாக்களுக்கு
தெரியாது இவள் பாதங்களை
தூய்மைபடுத்தவே பிறக்கின்றன என்று!


காற்றும் கூட அனுமதி கேட்டது
இவள் பாதங்களை உரசிட.. காலணியிடம்!

மேக கூட்டங்களும் ஆசை கொண்டது
மழை துளிகளாய் இவள் பாதங்களை தீண்டிட..

கடற்கரை அலைகளும் ஆர்ப்பரித்தது
இவள் பாதங்களில் பள்ளிகொள்ள..

சிறிது நேரம்
இளைப்பாறும் இவள் பாதங்களை
சுமக்கும் இக்கருங்கற்களுக்கே
இவ்வளவு ஆனந்தம் என்றால்                                                 
 

காலம் முழுவதும் சுமக்க போகும் என்
இதயத்தின் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ..!

இவள் பாதங்களோடு உரையாட துடிக்கும்
என் இதழ்களுக்கு தெரியாது
இதழ்கள் உரையாட அல்ல இவள் பாதங்களை
                    ஸ்பரிசவிக்கவே ..! என்று சிரித்தபடி

என் மூச்சுக்காற்று படும் தூரம்..!
                                 இவளின் பாதம்..                                                       
                                            அந்நாள் எந்நாளோ.. !? 

« Last Edit: May 20, 2025, 11:12:53 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Reacher

Re: இவளுக்குகாக இனி!
« Reply #1 on: April 19, 2025, 05:23:56 PM »
முதல் முறை பார்த்தேன்!
                                                   தேவதை அவளை !!       
 
மெய் மறந்தேன் அவள் அழகில்
 பா‌ல் போன்ற வண்ணம் பார்த்ததில்லை
                                                                      இன்னும்
பார்த்தேன் ரசித்தேன்
                                     உயிர் வரை வேர்த்தேன்

என்னை நான் மறந்தேன் 
இது கனவா என்று நினைத்தேன்
                                                  பிறகு நிஜம் என்று
                                                   மெய் சிலிர்த்தேன் !. 

யார் இவள்
இரு விழிகளாள்  ஏதோ செய்கிறாள்
கார்மேக கூந்தலாள்  கட்டி இழுக்கிறாள்
நெற்றிபொட்டில் நெஞ்சை துளைக்கிறாள்
சிவந்த கண்ணங்களாள் சிறகடிக்க செய்கிறாள்

ஆசை !
உன் உதடு ரேகையை பிடிக்க ஆசை
உதட்டோற புன்னகையில் விழுக ஆசை
காதோரம் கவி பாட ஆசை அதற்கு
உன் காதணிகள் நடனமாட ஆசை
உன் பாதங்களில் குடியேர
அணிகலன்களுக்கும் கூட ஆசை 

உன் மொத்த அழகையும்
                   ரோஜா இதழ்களை கொண்டு
                                                            பூஜிக்க ஆசை!!

     
இவ்ளோ நாள் நீ ! எங்க இருந்த என்று கேட்க
ஆசை?               
                                                 
உன்னுடன் உறையாட
உன்னுடன் சண்டையிட 
உன்னுடன் வாழ உன்னுடனே! சாகவும் ஆசை

சொல்லத்தான் ஆசை
வேண்டும் என்று மனம்
கிடைக்குமா இந்த வரம்

இதயம் சொன்னது
              இவளுக்குகாக இனி என்று
உயிர் சொன்னது
              இவளுக்குகாக மட்டுமே இனி என்று!

யாரும் பார்த்திடாத தங்கமான தேவதை 
கையில் சேரும் வரை
                                கண்ணாள் கண்டால் தேவல

இவள்தான்! இவள்தான்
                                                எனக்காய் பிறந்தாள்
                                                                    அப்போதே!!
ஒரு நாள்
மணநாள் அத்திருநாள் எப்போதே ..?!!

                                       முதல் முறை பார்த்தேன்!!!

     
« Last Edit: April 20, 2025, 02:42:12 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Reacher

Re: இவளுக்குகாக இனி ! 🖤
« Reply #2 on: May 17, 2025, 10:40:09 PM »



மழையோடு  அவன் 
வாழை இலையோடு நான்     
 
மழையில் அவன் நினைகிறான் 
இழைக்குள் என்னை காக்கிறான்
                                                 இவன்! யார்?

வெள்ளந்தி மனசுக்காரன்
என் வெக்கத்திற்கு சொந்தக்காரன்

கள்ளமில்லா சிரிப்புக்காரன்                 
காலம் எல்லாம் எனை காக்கபோகும்
                                               காவல் காரன் 


இயற்கை எழில் சூழ்ந்த,
அழகிய வானம் இருள் சூல
வீசும் காற்றின்  வாசம்
என்னுடையவனின்  நேசம் 
அதை காட்டும் இப்புகைபடத்தின் பாசம்.!

பாசத்தில் பசுமை குணம் கொண்டவன்
நேசத்தில் நெற்பயிர் போல விலைபவன்   


ரோஜாவில் பல வண்ணம்
ஆடையில் கூட மாறாது எங்களின் எண்ணம் 


என் புன்னகையில்  இன்பம் காண்பவன்

எப்பொழுதும்
                             என் பின்
                             அவன் முன்
                                                       நான் !
என் மனதோரம் அவன்
அவன் நினைவோடு நான் !! 

நான் நேசிக்கும் என் காதலன்
என் கை தொடா ஒர் காவலன்..!!
                                                    அவனே என்னவன்!
 
« Last Edit: May 24, 2025, 11:58:56 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Reacher

Re: இவளுக்குகாக இனி ! 💙
« Reply #3 on: May 20, 2025, 10:46:10 PM »



மழையில் ஒரு மழலை...!
                                                    நினைகிறாள்

அன்பு காட்ட தாய் இல்லை
வழிநடத்த தந்தையும் இல்லை..

ரோஜா மலர்கள் மீது நடக்க வேண்டிய
பாதங்கள் மண்தரையில் காலனி
                                                  இல்லாமல்..       


வானம் இருள் சூழ இடிகள் இடிக்க
மேகம் கூட கண்ணீர் சிந்துகிறது..
 இவள் கண்களில் வழியும் கண்ணீரை
                                                              மறைக்க..!

முதல் மாதம் கண் சிமிட்டி
            இரண்டாம் மாத‌ம் புன்னகைத்து

ஆறாவது மாதம் தரையில் தவழ்ந்து
            பத்தாவது மாதம் நடை பழகி..... ! 



தேவதை போல பார்த்து மகிழும்
                        பெற்றவர்களுக்கு மத்தியில்

உன்னை வரம் என்று அறியாத..!
           இரு உயிர்கள் செய்த பிழையாள்     
                                            விளைந்த நன்மை..!       

உன்னை அரவணைக்க நானே
                                                          வருகிறேன்...!!!

                                                            இப்படிக்கு
                                                                கடவுள்        
« Last Edit: May 21, 2025, 04:07:55 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Reacher

Re: இவளுக்குகாக இனி !🫀
« Reply #4 on: May 24, 2025, 10:44:02 PM »




உன் கரம் கொடு 
                                  என் கரம் பிடி
பார்த்து நட, பொடி நடை போட
கற்றுகொடுத்தவர்       
                                      இவர் யார்!?

பாசத்தில் பகுமாணவர் 
நேசத்தில் நெஞ்சில் நிற்பவர்

உள்ளங்கையில் எனை காத்தவர்
உறவுகளை  சொல்லி கொடுத்தவர்
உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பவர்
உள்ளுக்குள்ளே பாசம் கொண்டவர்

மகிழ்ச்சியின் உச்சத்தில்
பாசத்தின் அச்சத்தில்
எனை தழுவியது ஒரு கரம்

தன்னை ஒரு ஆண் மகன்
என்று உணர்ந்த தருணம் 
அன்று தான் நான் பிறந்த தினம் !

ஊருக்கே சேதி சொன்னவர்
உலகை அன்று தானோ நேசித்தவர்.!     


ரோஜா பூக்களை போல பிள்ளைகளை
பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
பெண் பிள்ளைகள் ஒரு வரம் என்று !!   


ஓர் அழகிய காட்சி
என் பாத சுவடுகள் கடற்கரையின் மேல்
எங்கள் பாதங்கள் கடல் அலையின் உல்
உங்களை நினைக்கும் பொழுதெல்லாம்
நம்மை நினைத்த கடல் அலைகள் தான்
ஞயாபகத்தில்! 


என் நடை உடை பாவனைகளை மாற்றி
ஆணுக்கு இணையாக எனை பாவித்து
எனை மட்டுமே நேசித்து கொண்டு இருக்கும்     


என் கை பிடித்து நடந்த
                என் முதல் நாயகன் 
இன்று நான் பார்க்க ஏங்கும்
                என் கடைசி நாயகன் 


                                                              அவரே

                                                        என் அப்பா !!!
« Last Edit: May 26, 2025, 12:29:42 PM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!

Offline Reacher

Re: இவளுக்குகாக இனி !🫀
« Reply #5 on: June 05, 2025, 12:48:41 AM »



இன்னும் ஓர் இரவு !
இன்னும் ஓர் நிலவு..!


குடையில் அவன்
                        அவன் விழிகளில் நான்   
 
பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்தேன் அவன் புன்னகையில்
ரோஜா மலரின் வாசம்
என்னுடையவனின் பாசம்


என் எதிரில்
என் அருகில்
என் நிஜத்தில் என் நிழலாக இருப்பவன்

என் உயிரில்
என் உணர்வில்
என் அகத்தில்
என் முகத்தில் என்றும் ஜொழிப்பவன்

என்னுள் அறியா ஓர் மாற்றம்
எனக்காக மட்டுமே இருக்கும்
                                                       இவன் நேசம்..!

என்றும் அவன் கைக்குள் நான்
இனிதே தொடங்கும் எங்கள் பயணம்

இன்னைக்கு என் அருகில் இவன்
இவன் கை என் மேல படுது
இவன் மூச்சுக்காற்று
என் காதுல கேட்டுட்டே இருக்கு
திரும்பவும்  நான் குட்டி
                                             மழைலையாக
                                             மாறிய தருணம்

இந்த ஓர் நினைவு
இன்னும் சில தூரம்
இன்னும் சில நேரம்

அவனும் நானும் வாழ்ந்த காலம் சாகாது,!!
« Last Edit: June 05, 2025, 12:51:19 AM by Reacher »
Netru nalai maranthu po.!
                                             ' indre ' kadaisi endru valnthu po..!!