பாதம்!
என் இமைகள் சற்று இமைக்க மறந்த நேரம்
என் விழியும் சற்று உறைந்த தருணம்
கண்டேன்....! இவள் பாதம்! அழகு
ஐய்விரல்களும் ஒன்றுடன் ஒன்று
உரசிக்கொள்ளும் அக்கணம்
அதை ரசிக்கும் என் மனம்..!
கருணையை கண்களில் மட்டும் தான்
காண முடியும் என்று நினைத்திருந்தேன்
இவள் பாதங்களை காணாத வரை..!
பாதங்களை பார்த்தும் கூட காதல் வருமோ
என்று எனக்கு தெரியாது
என் கண்களின் வெக்கத்தை கண்டபின்..!
தினம்தோறும் பூக்கும் ரோஜாக்களுக்கு
தெரியாது இவள் பாதங்களை
தூய்மைபடுத்தவே பிறக்கின்றன என்று!
காற்றும் கூட அனுமதி கேட்டது
இவள் பாதங்களை உரசிட.. காலணியிடம்!
மேக கூட்டங்களும் ஆசை கொண்டது
மழை துளிகளாய் இவள் பாதங்களை தீண்டிட..
கடற்கரை அலைகளும் ஆர்ப்பரித்தது
இவள் பாதங்களில் பள்ளிகொள்ள..
சிறிது நேரம்
இளைப்பாறும் இவள் பாதங்களை
சுமக்கும் இக்கருங்கற்களுக்கே
இவ்வளவு ஆனந்தம் என்றால்
காலம் முழுவதும் சுமக்க போகும் என்
இதயத்தின் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ..!
இவள் பாதங்களோடு உரையாட துடிக்கும்
என் இதழ்களுக்கு தெரியாது
இதழ்கள் உரையாட அல்ல இவள் பாதங்களை
ஸ்பரிசவிக்கவே ..! என்று சிரித்தபடி
என் மூச்சுக்காற்று படும் தூரம்..!
இவளின் பாதம்..
அந்நாள் எந்நாளோ.. !?