Author Topic: இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..  (Read 507 times)

Offline MysteRy



இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர். ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது. ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியாவில் இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting  இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கமகமன்னு சிக்கன் குருமா வாசனை வந்தது.. அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர்க்கு வாய் ஊற ஆரம்பித்தது.. Fasting என்பதால் சாப்பிடவும் முடியல... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது..
அதனால் அக்கம்பக்கத்து வீட்டார்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டையிட்டனர்.

நாங்க விரதத்தில் இருக்கோம். நீ இப்படி Non_veg சமைச்சா எங்களுக்கு ஆசை வராதான்னு கேட்டனர். இனி 40 நாட்களுக்கு வெஜ் தான் நீங்க சாப்பிடணும்னு சொல்விட்டு போய்ட்டாங்க.. இவரும் மண்டைய ஆட்டினார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது.. அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்.. எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார்  செய்தனர். போப் அந்த பஞ்சாபியை நேரில் அழைத்து அறிவுரை கூறி சிக்கன் சமைக்காதேன்னு சொல்லி அனுப்பினார்..

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி இந்த முறை வாசனை ரொம்ப சூப்பராக வந்தது.
எல்லோரும் திபுதிபுன்னு போப்பிடம் ஓடினர்.. போப்புக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

ஒரு ஐடியா செய்தார் ..
அந்த பஞ்சாபியை கிறிஸ்துவரா ஞானஸ்னானம் பண்ணி விட்ருவோம்னு முடிவு பண்ணினார். மறுநாள் அவரை அழைத்து கிறிஸ்துவம் பற்றி பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு தண்ணீர் தொட்டிக்குள்  மூன்று முறை முக்கி எடுத்து  கிறிஸ்துவராக மாற்றினார்.

"உன் பேர் என்ன ?

"சுக்விந்தர் சிங் "

"இன்று முதல் நீ சாமுவேல்.. சாமுவேல்.. சாமுவேல்.." ன்னு தண்ணியில்  மூன்று முறை முக்கி சொன்னார். இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்பிட கூடாது. ஜீஸ்ஸ் மீது ஆணைன்னு சொல்ல சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்.

எல்லோருக்கும் நிம்மதி..
போப்புக்கும் பெருமிதம்.
அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க.. பஞ்சாபி என்ன செய்றான்னு பார்க்க.. மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது.

எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட .. போப் பஞ்சாபியை அழைத்து விசாரிக்க.. நான் ஜீசஸ் மீது சத்தியம் பண்ணிருக்கேன். நான் இன்னைக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல.  உருளைக்கிழங்கு  தான் சமைச்சேன்ன்னு சொல்ல.. கூட இருந்தவர்கள் மறுத்தனர்.

இல்லை.. நான் பொய் சொல்லலைன்னு சாதித்துவிட்டு போய்ட்டார் பஞ்சாபி..

மறுநாளும் அதே கதை..
கூப்பிட்டு கேட்டா நான் சமைச்சது potatoன்னு பஞ்சாபி சாதித்தார்.

என்னடா இது...
மக்கள் புகார் பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே... யாரு பொய் சொல்றானுங்க தெரியலயேன்னு போப் மறுநாள் அந்த பஞ்சாபிக்கே தெரியாமல் அவர் கிச்சனில் என்ன நடக்குது எட்டி பார்த்தார்.. பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்.
⬇️
⬇️
↙️
↙️
↙️
↙️
⬇️
⬇️
⬇️
⬇️
ஏன்னா...
அந்த பஞ்சாபி ஒரு முழு சிக்கனை எடுத்து அதை ஒரு பக்கெட்டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்லை ..
Potato..
Potato..
Potato..ன்னு சொல்லிகிட்டிருந்தார்..
😳😳😳
மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம் சிக்கன் potato ஆகாதா என்ன?