Hi Dear RJ & DJ
இந்த வாரத்திற்கான இசைத் தென்றல்
நான் பதிவிடும் திரைப்படம் பூவே பூச்சூடவா இயக்குநர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படம். 1985-ஆம் ஆண்டு வெளியாகிய இந்தத் திரைப்படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா
இயக்கம். பாசில்
தயாரிப்பு. ஜிஜோ & ஜோஸ்
இசை. இளையராஜா
நடிப்பு ஜெய்சங்கர், நதியா
எஸ்.வி.சேகர் , பத்மினி
ஒளிப்பதிவு. பி. சி. ஸ்ரீராம்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.
இப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன .
எனக்கு பிடித்த பாடல்
"பூவே பூச்சூடவா" – கே. எஸ். சித்ரா
பிடித்த வரிகள்
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும்
நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்
என் அன்பு FTC daugrae ஆக இந்த பாடல்
வரிகளை அர்ப்பணிக்கிறேன் , அவருக்கும் பிடித்த
பாடல்.