கடவுளின் படைப்புகளில் ஒரு இன்றியமையாத படைப்பு பெண் எத்தனை பொறுப்புக்கள்
அன்னையாய் மனைவியாய் தமக்கையாய் தோழியாய்
பெண் என்ற சக்தி இல்லை எனில்
இவ்வுலகில் அன்பு இல்லை, கருணை இல்லை பாசம் இல்லை நேசம் இல்லை காதல் இல்லை
கண்ணீரும் இல்லை
ஒரு ஆண்மகன் ஆணாக வளர்வதற்கு காரணமே ஒரு பெண்தான்
மகனாகப் பிறந்ததில் இருந்து மனிதனாக மாறும் வரை ஒரு பெண் இல்லை எனில் அவன் வளர்வது கடினமே
ஒரு பெண் தாயாய் தன் மகனுக்கு நற்பண்புகளை வளர்த்து இந்த சமூகத்தில் ஒரு நல்ல ஆண் மகனாய் தருகின்றாள்
ஒரு பெண் மனைவியாய் அந்த ஆண் மகனுக்கு துணையாய் நின்று அவன் வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்து சமூகத்தில் அவன் உயர்வை காண்கின்றாள்
அக்கா தங்கை இவர்களுடன் பிறந்த ஒரு ஒரு சமூகத்தில் மற்ற பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் கற்றுக்கொள்கிறான்
கிடைப்பதற்கு அரிதான ஒன்று கிடைத்துவிட்டால் அதைவிட அரிது வேறு ஒன்றும் இல்லை அவள் தான் ஒரு ஆண் மகனுக்கான தோழி அவளால் மட்டுமே நேர்பட அவனோடு பேச முடியும் நல்வழிப்படுத்த முடியும்
மிக மிக முக்கியமான ஒரு பெண்ணின் அம்சம் மகள் இளவரசியான அவளின் சிரிப்பு அவளின் சந்தோஷம் மட்டுமே ஒரு தந்தையின் தேவையாக இருக்கும் அதற்காக மட்டுமே ஒரு ஆண்மகன் எதையும் செய்வான்
தான் எடுக்கும் எல்லா பரிமாணங்களிலும் ஒரு பெண்ணானவள் ஒரு ஆணை உருவாக்கினார்
வாழ்க பெண்மை வளர்க அன்பும் நேசமும்
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐