❤️கண்கள் பேசும் மொழிகளை நீ அறிவாயா?
ஏக்கத்தோடு பார்த்தால் காதல்...
சோகமாய் பார்த்தால் மனதின் வலி...
பேசாமல் அறியும் மொழி இது...மனதிற்கு பிடித்தவர்கள் மட்டுமே அறியும் பாஷை இது...
கண்ணீரின் கனலில் கதைகள் எத்தனை?
அவை அனைத்தும் உயிர் தீண்டும் கவிதையே!!!
உண்மையின் ஆழத்தை உருக்கமாக காட்டும் கண்கள்,
உதடுகள் பேசும் மொழிகளை கண்கள் பேசும் போது, பேசுவதற்கு வார்த்தைகள் தேவையா?
சிரிப்பில் கலந்த கவலை கண்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?உயிருள்ள பார்வையில் உலகத்தை மறந்தேன்...உன் கண்கள் பேசும் வார்த்தைகளை இதயம் கேட்குமே!!!❤️