வணக்கம் RJ,
எல்லா வாரமும் இசைத்தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கும் RJ, DJவிற்கு அன்பு மற்றும் நன்றிகள்💜 இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'தென்றலே என்னைத் தொடு
திரைப்படத்திலிருந்து 'புதிய பூவிது பூத்தது' பாடல்
திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு
பாடல்: புதிய பூவிது
பாடகர்கள்: SPB, S.ஜானகி
இசையமைப்பாளர்: இசைஞானி இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
ப்பா 80s மற்றும் 90s இசையின் பொற்காலம்னு சும்மாவா சொல்றாங்க. என்ன மாதிரியான தரமான, தெளிவான, இரைச்சல் இல்லாத பாடல்கள். படத்தின் மொத்த பாடல் தொகுப்புமே மனதை மயக்கும் விதமாய் அமைந்திருக்கிறது ஆச்சரியமே இல்ல. 'தென்றல் வந்து என்னை தொடும்' பாடலாகட்டும் 'கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடலாகட்டும், கேட்கும்போதே மனதிற்கு இனிமையை கொடுக்க கூடிய பாடல்கள்.
அதுவும் கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடல்ல வர உமா ரமணனுடைய குரல் very very unique and mesmerizing voice. இது இப்படின்னா 'கவிதை பாடு குயிலே குயிலே பாடல்ல instrumentation அமைஞ்சிருக்க விதம், Beats, Clarinet இசை நம்மளை தாளம் போட வைக்கும்.
அந்த காலத்துல எல்லாம் என்னா மாதிரி ய்யா பாட்டா போட்டாய்ங்க.. இப்ப என்ன பாட்டா போடுறாங்க, கொலவெறி புடிச்சில்ல அலையிறாங்க என என்னை மாதிரியே Feel செய்யும் boomer 80s 90s kidsக்கு இந்த பாடலை dedicate பண்றேன்