மழை – என் காதல் கவிதை
மழை சாரலில் நின்று, அவள் முகம் மழைத்துளியால் நனைந்ததும்,
அந்த சிரிப்பில் ஒரு உலகம் புதைந்து போகிறது,
அவள் சுவாசிக்கின்ற ஒவ்வொரு நொடியும்
மழையென புதியதாகிறது! மழைத்துளிகள் அவளது முகம் தீண்ட,
அவளது இதயம் துள்ளி குதிக்கிறது!
மழை தரும் குளிரில், அவளது நினைவுகள் மழையைக் கண்டு
அன்பின் மொழியில் கவிதையை வார்க்கின்றன!
வானம் குயிலாய் பாட, அவளது மனதில் காதல் நனைந்து,
மழையோடு மழையாக கரைந்தோடியது !
நீர்த்துளி விழும் ஒவ்வொரு நொடியிலும்
மழையோடு அவள் காதல் மொழி பேசுகிறாள் !
மழையோ அதன் இசையோடு அவளது கன்னத்தில் முத்துக்களாய் விழுந்து
முத்தங்களைப் பதித்து தன் காதலை வெளிப்படுத்துகிறது!
விழுந்த முத்தங்களால் அவளது கூந்தல் நனைந்து
மனம் குளிர்ந்து! குழந்தைபோல் மாறி ! முகம் மலர அவள் சிரிக்கிறாள் !
வானமும் அவளது சிரிப்பைக் கொண்டாடுகிறது
தன் இடிச்சத்தத்தை வெளிப்படுத்தி !
வானம் காணும் ஆசைகளும்,
மண்ணில் விழும் துளிகளில் உயிர் பெற,
அவளின் அழகிய மேனி மழையின் தாய்மையை
தழுவிச் செல்வது போலக் கனவுகள் பறக்கின்றன.!
அவள் முகத்தில் விழும் ஒவ்வொரு துளியுடனும்
அவள் பேசி கொண்டிருக்கிறாள்!,
அவள் இதயத்தில் நெகிழ்ந்திருக்கும் அன்பை
காதலின் மொழியாக மழை மாற்றியது !
அவளின் ஆனந்தம் மழையில் அதிகரிக்க,
அவள் பார்க்கும் வானம் எதுவும் சொல்லாமல்
மௌனமாய் முத்தங்களைப் பதிக்க
மழையில் நனைந்த அவளது கன்னத்தில் தெரியும்,
மழைக்கு அவள் மீது இருக்கும் காதல் !
மழையின் ரகசியங்களை
அவள் இதயம் கதறிக்கொண்டு கேட்க,
அவள் அனுபவிக்கும் அந்த காட்சி
என் கவிதையில் ஓவியமாகி நின்று
என் கவிதைக்கு உயிர் கொடுக்க,
அவள் புன்னகை அந்த ஓவியத்தின் வண்ணமாக அமைய
மழையின் சத்தமும் மழையோடு அவள் பேசும் பேச்சும்
என் கவிதைக்கு இசையாய் மெருகூட்ட !
அவள் நனைந்த அந்த நாள் ஒரு பிரியமான மழை நாளாய், அவளது வாழ்வை ஒரு கவிதையாய் மாற்றிவிட்டது !