ஆறுதல் தேடி
அழும் குழந்தைக்கு
கிடைத்திடும்
தாயின் குரல் போல
ஆறுதலாய்
உன் தோள்சாய
தேடும் என் மனம்
மற்றவர் பார்வைக்கு
சத்தமில்லா
நதியின் நீரோட்டமாய்
முகம் இருந்தும்
சலசலக்கும் காட்டாறாய்
புலம்பி திரியும் மனம்
விசித்திரமானது தான்
எழுது எழுது
என ஆர்ப்பரிக்கிறது
என் மனதில் உன் நினைவுகள்
உன்னை
பார்த்து கொண்டே இருக்கலாம்
என்ற நிலையிலிருந்து
என்றேனும் ஒரு முறை
பார்த்துவிட மாட்டேனா
என்ற நப்பாசையில்
நிற்கின்றேன் நான்
மணல் வீடு கட்டி விளையாடும்
குழந்தை போல தான்
பழகினாயோ ?
என்றேனும் ஓர் நாள்
உடைந்து இல்லாமல் போகும்
இவ்வுறவு என
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருப்பினும்
என் உள்ளம் தேடுவது
உன்னையே
மேகங்கள் மூடி கொண்டால்
சூரியன் கூட தன் பிரகாசத்தை
இழக்குமெனில்
நான் எம்மாத்திரம்
கரம் கோர்த்து
வாழவில்லை எனினும்
காலம் முழுவதும்
உன் நினைவில் வாழ்வது
வரமா சாபமா ?
****JOKER****