Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 354  (Read 3025 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 354

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN


கடற்கரை காற்று
மிதமாக வருட
கன்னியின் அழகோ
எனை மெல்ல திருட
நிசப்தம் கலைத்து
அலை மெல்ல படற
நீள்கின்ற பாதையை
என் கால்கள் தொடர

எந்தன் கையோடு
உந்தன் கை கோர்த்து
உன்னை தோளோடு
மெல்லவே சாய்த்து
நடக்கின்ற இந்த நொடி
சொர்க்கத்தின் உச்சமடி

இருள் மெல்ல உலகை
பழுதாக்கிட
விண்மீன்கள் தோன்றி
அழகாக்கிட
வந்தார் போல் வந்தாய்
நீயும் இங்கே
நீ இன்றி எனக்கேது
வாழ்வுமிங்கே

அலைமோதும் கரையில்
அவளோடு நான்
இரவாகும் பொழுதில்
இரு நிலவோடு நான்
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Liar

நிலா ஒரு அழகு!!!
கடல் ஒரு அழகு!!!
இந்த ரெண்டு அழகையும் விட பெரிய அழகு
என்னோட என்னவள் தான் !!!

நாங்கள் இருவரும் இந்த கடலில்
நடக்கும்போது இந்த நிலா எங்களை
பார்த்து வெக்கப்படும்,என்ன ஜோடி அடடா!!!
நம்மலை விட அழகாயிருக்கிறது!!! :D

கடல் மிகவும் பெரியது ஆனல்
அதில் வரும் அலைகள் சத்தம் தான்
சந்தோசங்களை தரும்!!!

நிலவு வெளிச்சம் இலையென்றால்
கடலும் தெரியாது அதில் வரும் அலையும் தெரியாது...

கடலைப் பார்ப்பதற்கு கண்கள் பத்தாது
அதே மாதிரி தான் நிலவும்
அதன் வெளிச்சமும்!

இந்த பொன்னனா நிலவு வெளிச்சம்
எனக்காக. .. என்னுடன் நீ இருக்க வேண்டும்!!!

கடவுள் தந்த வரம் இந்த நிலவு ...
பொழுதெல்லாம் உன்னுடன் கழிக்க மணம் யேங்கும இந்த கடற்கரை!!!

இப்படிக்கு

LIAR - பொய்யர்  ;)









Offline MyNa

அன்ரோறிரவு

அவனும் நானும் 
காரிருள் இருட்டினில்
இதமாய் புன்னைகைக்கும்
அழகு நிலவின் வெளிச்சத்தில்
கடற்கரை ஓரம் இணைந்து
ஓருயிராய் வலம் வருகையில்..

கடல் அலைகள்
கரையைச் செல்லமாய்
ஆராத் தழுவி, உடன்
இணையாய் மணலில்
நடைபயின்ற எங்கள் பாதங்களை
தொட்டு வருடுகையில்..

நீரும் நிலவும்
கண்ணோடு கண் வைத்து
ஒருவரை ஒருவர் ரசிக்கும் நொடி
சொல்ல முடியா சொல்லில் அடங்கா
பல உணர்வுகள் இரு இதயத்தில்
பந்தயமிட்டு கொண்டிருக்கையில்..

மிதமாய் வீசும் தென்றல்
அங்கிருக்கும் செடி கொடிகளோடு
காதல் கானம் பாடிய வேளை   
என்னவனின் விரல்கள்
முதல் முறையாய் 
என் கரங்களை பற்றுகையில்..

உறைந்தே போனேன் ஒருகணம்
நிலவும் நீரும் அலையும் கரையும்
யேன் வீசிடும் தென்றலும் கூட
ஒரு கணம் உறைந்தே போனது
என் நாணத்தையும் உணர்வையும்
செவ்வனே புரிந்த வண்ணமாய்..

என்னவனே
இன்று தொடங்கி
இனிவரும் ஒவ்வொரு இரவுகளையும்
இந்நிலவை ரசித்த வண்ணமாய்
இப்படியே உன்னோடு நான்
நடந்து களித்திட வேண்டும்..

உன் கரம் கோர்த்து
உன் தோள் சாய்ந்து
உன் மடியினில் கவலைகள் மறந்து
வாழும் காலம் யாவும்
உனக்காகவே வாழ்ந்து
மடிந்திட வேண்டும்..


கைக்கூடிய காதலுக்கும் கைக்கூடா காதலர்களுக்கும்  இக்கவிதை சமர்ப்பணம்..

~ தமிழ் பிரியை மைனா ~
« Last Edit: September 10, 2024, 02:00:14 AM by MyNa »

Offline PreaM

இரவில் பூத்த நிலவே வானில்
மொய்க்கும் மின்மினி விண்மீன் கூட்டம்
சிரிக்கும் அலைகளை காதால் கேட்டு
ரசித்திடும் இரவினில் தென்றல் காற்று
இவளது மனமோ இவன் தான் என்று
இசைந்து விட்டாள் காதல் கொண்டு

உப்பங்கழி மலர்மணம் சுவாசம் நுழைந்து
உள்ளக் கூட்டினுள் காதல் விதைத்து
வாழ்க்கைத் துணைவன் இவன்தான் என்று
கரம்பற்றிட எண்ணுது மனம்தான் இன்று
கடற்கரை மணலிலே கால்தடம் பதிந்து
கால்கள் நடைபோடுது நேரம் மறந்து

இயற்கையும் வியக்கும் நம்மைக் கண்டு
சிரிக்கின்ற நிலவோ மோகம் கொண்டு
மறைந்திடும் மேகத்தில் வெட்கம் வந்து
வைகறை பொழுதினில் கடற்கரையில் இன்று
கரம் கோர்த்திட்ட நொடிதான் எந்தன்
மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே என்றும்

என் மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே  ......

Offline RajKumar

பொழுதுபோக்குகள் பல இருந்தாலும்
பெளர்ணமி நிலவொளி விட
பளிச்சென்று இருக்கும் உன்னுடன்
கடற்கரையில் உலா போவதையே
என் மனம் விரும்புகிறது

கடற்கரை இரவில்
என்னவள் அருகில் -மணற்பரப்பில்
இருக்க இரு கை கோத்து
நேரம் செல்வதை நினைவில் கொள்ளாமல்
என்னவள் உடன் நடந்து
எங்கள் அன்பின் வெளிபட்டினை - அணைப்பில்
ஒருக்கொருவர் பாரிமாறி நடந்து சென்றதை
என் மனம் ஒரு போதும் மறவாது.

வெட்கம் பாராமல் - நாணத்துடன்
உன் காலடியை - என்னை தவிர யாரும்
உன் பாதையை பின் தொடரக் கூடாதென்று -
மண்ற்பரப்பில், நிலவொளியில் நடந்து சென்றதை
என்றும் என் மனம் மறக்காது....
« Last Edit: September 10, 2024, 11:36:28 AM by RajKumar »

Offline Kavii

உன் நினைவில் விழித்த கண்ணில்,
நிலா திகழும் நட்சத்திர இரவின் கோலத்தில்,
உன்னை நினைத்தேன் –
நீயும் எனக்காகதான் வாழ்கிறாய் எனும் கனவோடு!

அழகாய் எங்கேயோ தொலைந்த நீ,
நிலவின் மெல்லிய ஒளியில் எனைத் தேடி வந்தாய்,
சிலிர்க்கும் தென்றல் உன் குரலின் நிழலாய்க் கடலடியில்,
என் மனதின் ஓசைக் கேட்கிறதா உனக்கு?

நிலவு சிரிக்கிறது –
நம் காதலின் ரகசியம் தெரிந்தால் போல!
கடலலைகள் கரை அடிக்கின்றன,
என் இதயத்தின் துடிப்பாய் ஒலிக்கின்றன!

உன் நினைவுகள் என் சுவாசத்தில்,
நீ என்னிடம் இரவின் மௌனத்தில்,
நெஞ்சில் பூத்த மலராக!
உன் கையினில் தாலாட்டும் நிலவின் கவிதை!

கடல் அலைகளின் தொடுதலில்
உன் ஸ்பரிசம் உணர்கிறேன்,
நீயும் கடலைப் போல என் மீது கரைகிறாய்,
நிலவாய் என் இரவுகளைத் தழுவுகிறாய்!

உன் பார்வையிலே நான் கற்றதெல்லாம்,
காதல் என்ற உன்னதத்தின் மொழியென்றால்,
உன் சுவாசத்தில் நான் காணும் கனவெல்லாம்
என் இதயத்தின் நிழலாய் நிற்கின்றன!

நிழல் போல் நான் உன் பின்னால்,
அலைகள் நம் பாதம் தடவ,,
நிலாவின் வெளிச்சத்தில் உன் கண்களில் காதல் மின்ன
உன் அன்பிலே என் உயிர் நனைந்தது.!

நீ வராத நேரம் கூட
உன் நினைவுகளில் மூழ்கித் தவிக்கிறது,
நிலவு மௌனமாக இருக்கும்போது
உன் அன்பின் கதைகளை கூறிக்கொண்டிருக்கிறது!

நிலவாய் வந்து என் நெஞ்சில் ஒளிந்தாய்,
கடலாய் வந்து என் கனவில் கரைந்தாய்
நீ ஒரு கனவோ, நிஜமோ என்று தெரியவில்லை,
ஆனால் என் உயிரோடு நீயும் கலந்திருக்கிறாய்!
 

நாம் எண்ணங்கள் சங்கமிக்கும் காதல் என்னும் கடலில் 
நீயோ கடல் அலை போல மறைந்து போகின்றாய்!
நானோ தனிமையிலே கரைந்து போகின்றேன் !
நிலா மட்டும் நம் காதலின் சாட்சி!


« Last Edit: September 10, 2024, 11:53:23 PM by Kavii »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 546
  • Total likes: 546
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
மிளிரும் பௌர்ணமி நிலவும்.
நிகரில்லா பெண்மையின் அழகும்.

வெள்ளி நிலவொன்று கண்டேன், அழகென்று இருப்பின், அது இதுதான் என நெஞ்சம் நெகிழும் முன்.

மின்னும் பால்நிலா ஒன்று நாணத்துடன் நடந்து வர கண்டேன்.

கண்ட நொடிமுதலே நெஞ்சம் உரைத்தது அழகின் அர்த்தம் "என் அவள்" என்று ❤️.

இறைவா! உன் படைப்புகளில் தான் எத்தனை அழகு!

உன் படைப்பினில்! குறை காணும் கூட்டம், நிறை காண மறந்தது ஏனோ?.

ஒரு "நிலா" பேசா மடந்தையாய் மிளிர, மற்றொன்று மௌனத்தில் பேச கண்டேன்.

நகைத்து போனேன், அவளின் நடினமான நாணம் கண்டு.

மிளிரும் நிலவின் ஒளியில், மடியில் தலை சாக்க, பூத்தது அவள் புன்னகை எனும் நளினம்...

எழும்ப மனம் இல்லை, அந்நிலையில் அவள் முகம் கண்ட பின்னே.

உள்ளத்தின் ஆசைதனை நித்தம் என்னி நேசம் கொண்டோம்.

நேசம் கொண்ட நினைவுகள் சில
நிஜத்தினில் நிகழ மகிழ்ச்சி கொண்டோம்.

என் நேசத்திற்கு உரிதானவள் இவள் தான் என்றென்னி!

அவள் கை பிடித்த கனமே! உறுதியாய் உணர்ந்தேன்,  இறைவன் எனக்கென்று தீர்மானித என் கண்ணகி அவள் தான் என்று ❤️.

விண்ணில் அழகு நிலவென்ற போதிலும், இம்மண்ணில் அழகு என் தேவதையே ❤️.

காத்து கிடக்கின்றேன், மீண்டும் ஒரு பௌர்ணமி நிலவில் என் பால்நிலவை காண ❤️.

நேசகி மேலான நெடுந்தூர பயணத்தில்...MN-AHAMED AARON..........❤️❤️❤️
« Last Edit: September 11, 2024, 01:26:39 PM by Unique Heart »

Offline Lonely Warrior

நிலவொளியில்  நித்திலமாய் 
ஜொலித்த  அவள் அழகில்..
 நிஜம்  மறந்து.. கரம் பற்றி ..
நடை பயின்ற நாளொன்று

மணலில் கிறுக்கியதை இந்த
அலை வந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம் வரை அழியாது

நம் காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளி விட்டு நட
பிழைத்து போகட்டும்

கடந்த காலத்தையும்
எதிர்காலத்தையும்  மறந்து
நிகழ்காலம் ஒன்றே நிஜம் என
தோள் சாய்ந்து நடக்கிறேன் உன்னோடு


 சீன பெரும் சுவற்றை போல
நீண்டுகொண்டே  போகாதா
இந்த நடை பயணம்
என்பது தான் என் ஆசை எல்லாம்
 

பயணிப்போம் வா ஒரு பயணம்
கரம் பற்றி களைப்பாகும்  வரை
காதல் தேசத்தில் .....
« Last Edit: September 11, 2024, 11:30:34 PM by Lonely Warrior »

Offline SweeTie

முன்னிருட்டு  வேளையதில்
விண்ணில்  வெள்ளி மலர்களோடு 
நீந்துகின்ற  வெண்ணிலவை
தொட்டு விளையாடுகிறது   
துகில் போன்ற பஞ்சு முகில்

கருத்தொருமித்த  காதலராய்
காலங்கள்  பல  கடந்தாலும்
புதுப் புது  ரசனையுடன் காதல்
பேசி பேசி புளிக்காத  காதல்
பழக பழக  தெவிட்டாத  காதல்

இரவுநேர குளிர் காற்று  தாலாட்ட
கடலின்  ஓசை  தெம்மாங்கு பாட 
ஓடிவரும்  கடல் அலைகள் 
பாதங்களை   வணங்கி செல்ல 
கரைபுரண்டோடுகிறது  காதல் 

எத்தனை ஜென்மம்  எடுத்தாலும்
நீயே என் காதலி என்று அவன் கூற
காதலனாய்  மட்டுமன்றி  என்
கணவனாக வேண்டும் என் அவள் கூற
காதல்  கவி பாடும் அங்கே   

சுற்றும் முற்றும்  பார்த்து  அவன்
அவளை  அனைத்துக்கொள்வதும்
பட்டுத் தெறிக்கும்  நிலவொளியில்
அவள் வெட்கத்தை  அவன் ரசிப்பதும்
காதல்  வழங்கும்  சன்மானம் அன்றோ?

பரக்கப்  பறக்க  பணத்துக்காக 
பறக்கும்   மானிட பதர்களுக்கு 
இயற்கையை ரசிக்க  நேரமில்லை
காதலை   ரசிக்கவும்  தெரியவில்லை

 

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
கடல்  அலையின் அழகை
ரசித்தபடி நானும்
முழுநிலவின் அழகை
ரசித்தபடி அவனும்

சந்தித்த அந்த நாள் 
கடலின் காதலி அவனின் காதலியாகவும்
நிலவின் காதலன் அவளின் காதலாகவும்

ஜோடி சேர்ந்துகொண்டோம்.

கடலின் அலையில்
நிலவின் ஒளியில்
அவன் கைகோர்த்து நடந்த
தடங்கள் ஆயிரம்

கடலும் நிலவும்  தங்கள்
காதலை பகிர்ந்துகொள்ள தான்
எம்மை இணைத்தனவோ
நான் அறியேன்

பெளர்ணமி நிலவில்
கடல் அலையில் 
நாம் பேசாத இரவுகளே இல்லை
கடந்த நான்கு வருடத்தில்

கடைசியில் நம் கை  சேர்ந்ததும்
முழுநிலாவையும் கடல் அலையையும்
சாட்சியாக வைத்து தான்